ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

+7
கபாலி
ராஜா
சரவணன்
மகா பிரபு
yarlpavanan
செல்ல கணேஷ்
கவினா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Tue Jan 17, 2012 3:33 pm

கருங்காலி என்ற சொல்லின் தோற்றம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த அன்பர் திரு.செல்ல கணேஷ் அவர்களுக்கு முதலில் என் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்? இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

வாசித்த அனைவர்க்கும் நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


Last edited by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 8:12 pm; edited 1 time in total


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by செல்ல கணேஷ் Tue Jan 17, 2012 4:16 pm

தோழமைக்கு,
தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான் ஒரு சிறந்த சித்தாந்த உள்ளீடு கொண்ட மொழி ஆகும். ஆங்கிலம் என்பது ஒரு தனித்த மொழி அல்ல, அதன் பல வார்த்தைகளின் மூலம் வேற்று மொழியில் இருந்து வந்தது.
உதாரணமாக : COMMUNICATION
என்ற வார்த்தை லத்தீன் மரபு வார்த்தை,
GOD என்ற வார்த்தை ஜெர்மானிய மரபு வார்த்தை, ஆகவே ஆங்கில மொழி என்பது தனித்த இயங்கும் அளவிற்கு உன்னதம் பெறவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் எந்த ஒரு இலக்கியத்தை, அறிவியலை, தத்துவத்தை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டனர். பின் தனக்கே உரிய ஆதிகார தொனியில் அதையும் அடிமை ஆக்க முயன்று பார்த்தார்கள்.அவ்வளவு தான்.
நம் மொழி தனித்துவம் வாய்ந்த தத்துவ பின்னணி கொண்ட மொழி என்பதற்கு மிக சிறிய உதாரணம்.
உடல் நலக்குறைவை நம் மொழியில்,
"என் உடம்பு சரியில்லை என்று சொல்வோம்"
ஆனால் ஆங்கிலத்தில்
"I'm not well"
மேற்கண்ட ஆங்கிலத்தை அப்படியே பெயர்த்துப்பருங்கள்
நான் சரியில்லை என்று தான் அர்த்தப்படும். இதை ஒரு பெண் சொன்னால் அர்த்தம் அசிங்கம் ஆகிவிடும். தமிழில் மட்டுமே , தான் வேறு தன் உடம்பு வேறு என்ற தத்துவ விசாரம் உண்டு. இது சாதாரண பாமரத்தமிழ் மொழியின் மிகப்பெரிய பின்னணி.
ஆகவே கருங்காலி என்பது தமிழ் பின்னணி வார்தைதான். அது மொழி பெயர்ப்பாக இருக்க முடியாது என்பது தங்களின் குறிப்பே தெளிவு படுத்துகிறது.
மேலும் கூடுதலாக:
உலகம் உருண்டை என்பது அறிவியல் ஆய்விற்கு முன்னரே தமிழன் கணித்த
ஒன்றாகும்.
ஞாலம் என்ற சொல்லுக்கு "எந்த பிடிமானமும் இல்லாமல் உருண்டையாக தொங்கும் பொருள்" என்பதே பொருள்.
இது போல் எல்லா சொற்களுக்கும் தமிழில் நல்ல விளக்கங்கள் உண்டு.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Tue Jan 17, 2012 4:29 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான் ஒரு சிறந்த சித்தாந்த உள்ளீடு கொண்ட மொழி ஆகும். ஆங்கிலம் என்பது ஒரு தனித்த மொழி அல்ல, அதன் பல வார்த்தைகளின் மூலம் வேற்று மொழியில் இருந்து வந்தது.
உதாரணமாக : COMMUNICATION
என்ற வார்த்தை லத்தீன் மரபு வார்த்தை,
GOD என்ற வார்த்தை ஜெர்மானிய மரபு வார்த்தை, ஆகவே ஆங்கில மொழி என்பது தனித்த இயங்கும் அளவிற்கு உன்னதம் பெறவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் எந்த ஒரு இலக்கியத்தை, அறிவியலை, தத்துவத்தை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டனர். பின் தனக்கே உரிய ஆதிகார தொனியில் அதையும் அடிமை ஆக்க முயன்று பார்த்தார்கள்.அவ்வளவு தான்.
நம் மொழி தனித்துவம் வாய்ந்த தத்துவ பின்னணி கொண்ட மொழி என்பதற்கு மிக சிறிய உதாரணம்.
உடல் நலக்குறைவை நம் மொழியில்,
"என் உடம்பு சரியில்லை என்று சொல்வோம்"
ஆனால் ஆங்கிலத்தில்
"I'm not well"
மேற்கண்ட ஆங்கிலத்தை அப்படியே பெயர்த்துப்பருங்கள்
நான் சரியில்லை என்று தான் அர்த்தப்படும். இதை ஒரு பெண் சொன்னால் அர்த்தம் அசிங்கம் ஆகிவிடும். தமிழில் மட்டுமே , தான் வேறு தன் உடம்பு வேறு என்ற தத்துவ விசாரம் உண்டு. இது சாதாரண பாமரத்தமிழ் மொழியின் மிகப்பெரிய பின்னணி.
ஆகவே கருங்காலி என்பது தமிழ் பின்னணி வார்தைதான். அது மொழி பெயர்ப்பாக இருக்க முடியாது என்பது தங்களின் குறிப்பே தெளிவு படுத்துகிறது.
மேலும் கூடுதலாக:
உலகம் உருண்டை என்பது அறிவியல் ஆய்விற்கு முன்னரே தமிழன் கணித்த
ஒன்றாகும்.
ஞாலம் என்ற சொல்லுக்கு "எந்த பிடிமானமும் இல்லாமல் உருண்டையாக தொங்கும் பொருள்" என்பதே பொருள்.
இது போல் எல்லா சொற்களுக்கும் தமிழில் நல்ல விளக்கங்கள் உண்டு.

ஆம் தோழரே மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
தனித்து இயங்க வல்லமை இல்லாத மொழிதான் ஆங்கிலம்.
அவர்கள் எல்லாவற்றையும் கடனாகப் பெற்றனர்.
உண்மையை சோலாப்போனால் அதுதான் அவர்கள் பலமும்கூட.
ஆனால் கடன் வாங்கிய பொருளை தான் தயாரித்த பொருள் என்று அவர்கள் உரிமை கொண்டாடும் கயமைத்தனத்தைத்தான் நாம் வெறுக்கிறோம்.

தமிழின் பெருமையை சொல்லப் போனால் அது ஒரு நாளில் முடியாது என்பதால் அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொள்வோம்.

எப்படியோ நல்லதொரு விவாதத்திற்கு வழிவகுத்து தந்த தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Wed Jan 18, 2012 9:10 am

தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by yarlpavanan Wed Jan 18, 2012 10:21 am

ஆங்கிலச் சொல் வளத்தில் எல்லா மொழிச் சொல்களும் உள்ளன. ஆனால் தமிழில் இருந்து தான் மலையாளம், சிங்களம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகள் உருவாகியது என அறிய முடிகிறதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Sun Jan 22, 2012 8:57 pm

yarlpavanan wrote:ஆங்கிலச் சொல் வளத்தில் எல்லா மொழிச் சொல்களும் உள்ளன. ஆனால் தமிழில் இருந்து தான் மலையாளம், சிங்களம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகள் உருவாகியது என அறிய முடிகிறதே!

ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழுக்கு நிறைய குழந்தைகள் உள்ளனர்.
ஆங்கிலதிற்கு நிறைய அப்பாக்கள் உள்ளனர்.
சரிதானே?

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


Last edited by சுந்தரபாண்டி on Tue Jan 24, 2012 4:23 pm; edited 1 time in total


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by மகா பிரபு Sun Jan 22, 2012 9:13 pm

சுந்தரபாண்டி wrote:ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.
சரிதானே?

இதைவிட தமிழை யாராலும் புகழ முடியாது. வாழ்த்துக்கள் நான்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Mon Jan 23, 2012 8:27 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:ஆம் தோழரே.
சுருக்கமாக இப்படியும் சொல்லலாம்
தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.
சரிதானே?

இதைவிட தமிழை யாராலும் புகழ முடியாது. வாழ்த்துக்கள் நான்பா
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by சரவணன் Mon Jan 23, 2012 11:32 am

அருமையான பதிவு. விளக்கமும் கலந்துரையாடலும் அருமை. சூப்பருங்க


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by ராஜா Mon Jan 23, 2012 11:33 am

சுந்தரபாண்டி wrote:தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.சரிதானே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum