ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு!

Go down

 முல்லை பெரியாறு! Empty முல்லை பெரியாறு!

Post by தம்பி வெங்கி Mon Jan 16, 2012 4:09 pm



இன்னொரு உலகப்போர் அதான் 3வது உலகப்போர் நடக்கப்போவுதுன்னா அது தண்ணிக்காகத் தான் இருக்கும்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றது சரியாத்தான் ஆகிடுமோன்னு தோணுது. சமீப நாட்களாகக் காதுல விழக்கூடிய முல்லைப் பெரியார்ன்னு பேரக் கேட்கும்போது 2000 வருசத்துக்கு முன்னாடியே உலகத்துக்கே கல்லணை மூலமா இப்படித்தான் அணை கட்டணும்னு சொல்லித்தந்த தமிழன இந்த அணை அங்க என்ன நடக்குதுன்னு திரும்பிப் பார்க்க வச்சிருக்கு இன்னைக்கி. குழந்தைக்கு தாயோட தண்ணீர் குடத்தோட தொடங்குகிற போராட்டம் மாதிரி தமிழனோட போராட்டமும் தொடருதே ஏன்?

இந்தியாவுல ரெண்டே ரெண்டு நதிகள் வடக்கு மேற்கா ஓடுது ஒண்ணு நர்மதை, இன்னொன்ணு பெரியாறு. 3 மாநிலங்கள்ல நர்மதை நதி ஓடுனாலும் பெரிசா எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா பெரியாறு...?
தமிழ்நாட்டுல பிறந்து கிட்டத்தட்ட 300 கிமீ கேரளாவுல ஓடி அரபிக்கடலோட ஐக்கியமாகுது பெரியாறு. எங்க பிறந்து? தமிழ்நாட்டுல..... பச்சப்பசேல்ன்னு கொட்டிக்கெடக்குற அழகு, அதனால அழகான மலைங்கிற அர்த்ததோட அழைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில உள்ள சுந்தரகிரி. அங்க சிவகி சிகரம். இங்க ஆரம்பிக்குது பிரச்சன. இல்ல இல்ல பெரியாறு. சிவகிரில ஆரம்பிச்சி ஒரு 48 கிமீ நகர்ந்து முல்லைங்கிற ஆறோட சங்கமிக்குது பெரியாறு. இந்த ரெண்டும் சங்கமிக்கிற இடத்துல தான் இருக்குது முல்லை பெரியாறு அணை.

அந்த நாட்கள் சென்னையில இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சந்திச்ச ஒரு சவாலான விசயம் வறட்சி. பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள்ல இருந்த கடுமையான வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி. வைரமுத்துவோட வார்த்தைகள்ல சொல்லணும்னா புலிக்கொடி பொறித்த சோழமக்கள் எலிக்கறி பொறிக்கதுவோ போலத்தான் அந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை, அதிலயும் விவசாயிகள் 97 - 98 ம் வருசத்துல மகாராஷ்டிரா, ஆந்திர மாநில பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தா தற்கொலை செஞ்சிக்கிட்டது மாதிரி தான். ஒரு பக்கம் 44 நதிகள் யாருக்கும் பயன்படாம ஓடி கடல்ல கலக்குற தண்ணி. இன்னொரு பக்கமோ கடுமையான வறட்சி.

யோசிச்ச பிரிட்டிஷ் சர்க்கார் அப்போ கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னன் கிட்ட முல்லையும் பெரியாரும் சங்கமிக்கிற இடத்துல அணை கட்டி தண்ணிய தேக்கி வச்சி இங்க வறட்சியான மக்களுக்கு திருப்பி விடலாம்ன்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 25 வருசம் பலமான யோசனைக்கி அப்புறம் அவரும் ஒத்துக்கிடுறாரு. இப்போ கேரளாவுல இருக்குற அரசியல்வாதிகள் மாதிரின்னா அப்போ ஒரு செங்கலக்கூட பெரியார் அணைக்கி எடுத்து வைக்க முடியாது. அணை கட்ட சம்மதிச்ச திருவிதாங்கூர் மன்னர் அணை கட்டுறதுனால மூழ்கிப்போற 8000 ஏக்கர் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் குத்தகைத் தொகையா கேட்டு 999 வருசம் ஒப்பந்தத்துக்கு குடுக்குறாரு அந்த இடத்த. இன்னைக்கும் தைப்பொங்கல் முடிஞ்ச மறுநாள் ஜனவரி 15ம் தேதி நீங்க மதுரையில இருந்து குமுளி வரைக்கும் போனிங்கன்னா நிச்சயமா நீங்க பார்க்காம இருக்க முடியாது கலர் கலரான 170வது பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ற வால்போஸ்டர்கள.

இத்தனைக்கும் அந்த மனுசன் சூப்பர் ஸ்டார்ல ஆரம்பிச்சி இன்னக்கி இருக்குற பவர் ஸ்டாரோ இல்ல. ஆனா அந்த மனுசனோட பிறந்த நாளா அவ்வளவு விமர்சையா தேனி, மதுரை மாவட்ட மக்கள் கொண்டாடுறாங்கன்னா காரணம் இருக்கு. அவரு தான் முல்லை பெரியாரு அணைய கட்டுன பென்னி குக். நான் இந்தப் புவிக்கு வந்து செல்வது ஒரு முறை தான் ஆகையால் நான் ஒரு நற்செயல் புரிய வேண்டும் அதை தள்ளி வைப்பதற்கோ,தவிர்ப்பதற்கோ வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் மீண்டும் பிறக்கப்போவதில்லை. இன்னைக்கும் அணைக்குப் பக்கத்துல இருக்குற அவரோட சிலையின் கீழிருக்கிற வாசகங்கள். அணையோட ஆழத்தப் பத்தி யோசிக்கிற கேரள அரசு ஒரு வெள்ளக்காரனோட வார்த்தையில இருந்த ஆழத்த பாத்துருக்காதுன்னு தோணுது.

இதுல இன்னொரு விசயம் முல்லை பெரியாறு அணை கட்டுறப்ப வந்த எதிர்பாராத வெள்ளம் அணைய ஒடைக்குது. அரசாங்கமும் மறுபடியும் அணை கட்ட நிதி தர மாட்டிக்கி. இங்கிலாந்து போய் தன்னோட சொத்துக்கள வித்து சொந்த பணத்துல அணைய கட்டுறாரு பென்னி குக். 1886ல ஒப்பந்தம் 1895ல அணை கட்டி முடிக்கப்படுது. 152 அடி உயரம்,15,5 டிஎம்சி கொள்ளளவோட. இதுல ஒரு முக்கியமான விசயம் கேரளாவோட ஒப்பந்தச் சரத்தால வந்த ஒண்ணு. அதாவது மத்த அணைகள்ல இருக்குற மாதிரி மதகுகள திறந்து தண்ணீர திறந்து விடுற அம்சம் இதுல இல்ல. 104 அடி தண்ணீர் தேங்குன பிறகு வர்ற தண்ணி தான் அணையோட வடக்குப் பக்கமா தோண்டப்பட்ட குகைகள் மூலமா நமக்குக் கெடைக்குது. இப்படி அணை கட்டுன பிறகு 1895 ல இருந்து 60 வருசங்கள் எந்தப்பிரச்சனையும் இல்ல. 1947 சுதந்திரம் இங்க தமிழக அரசு, அங்க கேரள அரசும் வருது. பிரச்சனையும் வருது.

பெரியாறு தண்ணி தமிழ்நாட்டுல நுழையிற இடத்தில ஒரு மின் உற்பத்தி நிலையத்த கட்ட ஆசப்படுது தமிழக அரசு. பாசனத்துக்கான தண்ணி மின்சாரமா மாறி பணமா மாறுற இடத்துல பிரச்சனையும் ஆரம்பிக்குது. சரின்னு ஒத்துக்கிட்ட கேரள அரசு அதுவரைக்கும் அஞ்சு ருப்பாய் குத்தகைக்குனு இருந்த எட்டாயிரம் ஏக்கருக்கு முப்பது ரூபாயா ஏத்துது.ரெண்டு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் இன்னைக்கும் கொடுக்கப்படுது.ஆனா அந்த எட்டாயிரம்ஏக்கர் நிலம் பயன்பாட்டில இல்ல ஏன்னாஅணையோட உயரம் 152 அடில இருந்து 136 அடியாகுறைஞ்சு போச்சு . இப்பம் 4677 ஏக்கர் தான்பயன்படுத்துறோம். ஆனாலும் எட்டாயிரம் ஏக்கருக்கும் குத்தகை கொடுக்குறோம். ஏன் உயரம் குறைக்கபடுராதுன்னு பார்த்தா 1979 இல இடுக்கிமாவட்டத்தில புதுசா ஒரு அணை கட்ட ஆசைப்படுதுகேரளா முல்லை பெரியாறு தண்ணி தான் அங்கேயும்போகணும்.இதுவும் அணையோட உயர்த்த குறைக்க ஒரு காரணம் இடுக்கி மாவட்டத்தில அணை கட்டும்போது வந்த மிதமான நிலநடுக்கத்த மலையாளத்தின்பிரபலமான பத்திரிகை (மனோரமா) பூதாகரமாக்கி செய்தி வெளியிடுது.ஏற்கனவே சரியான சந்தர்பத்திற்கு காத்திருந்த கேரளா அரசு அத பயன்படுத்திகிடுது.அணை பாதுகாப்பில்லாம இருக்குபழையது .

மத்திய நீர்வள குழுமத்துகிட்ட அணையோட உயரத்தை152 அடில இருந்து 136 அடியா குறைக்கணும் அது தான்நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.மத்திய நீர்வளகுழுமம் ஒத்துக்குடுது. வேணும்னா தமிழகஅரசுஅணைய பலப்படுத்தி உயரத்தை அதிகரிக்கலாம்னுசொல்லுது . அணையும் பலப்படுத்தபடுது ஆனாலும்கேரளா அரசு ஒத்துழைப்பு கொடுக்கல.தமிழகம் நீதிகேக்குது உச்சநீதி மன்றமும் உத்தரவிடுது. செவுடன்காதுல ஊதின சங்கா எந்த பிரயோஜனமும் இல்ல ஏற்கனவே 104 அடிக்கு மேல உள்ள தனி தான்தமிழ்நாட்டிற்கு வருது .அதுலயும் 152 லிருந்து 136அடியாக நீர் தேக்கிவைக்கிற அளவு குறைக்கபட்டிருக்கு.இதனால கிட்டத்தட்ட 1 ,25000 ஏக்கர் நிலத்ஹ்டிற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியாறு தண்ணிகிடைக்காம போயிருக்கு, 140 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட பெரியாறு மின்சார உற்பத்திநிலையத்துல 40 % உற்பத்தி குறைஞ்சிருக்கு.இதெல்லாம் நமக்கு நட்டம் தான் ஆனா அணையோட உயரம் அதிகரிக்கபடாததால வெளியிலபோற தண்ணி இடுக்கி அணைக்கு போய் அங்கதயாரிக்கபடுற மின்சாரம் நமக்கே விலைக்குவிற்க்கப்படுது.இந்த லாப கண்ணோட்டமும் இந்த சிலஅரசியல் காய்நகர்த்தல்களும்தான் இந்தபிரச்சனையின் ஆணிவேர்.

இது ஒருபக்கம் இருந்தாலும் ஒட்டு அரசியலுக்காகவும்,மக்களை திசை திருப்பவும் அணையுடையும் அபாயம் இருக்கு . மூணு மாவட்டங்கள் முழ்கி போகும். லட்சகணக்கான மனுஷங்கள் பலியாவங்கனுவதந்திகள் வேற,ஆயிரகணக்கான வருடங்கள்பழமையான அணைகளே நல்ல பலமா இருக்கும் போதுநூறு வருஷங்கள் மட்டுமே கடந்துருகிற இந்த முல்லைபெரியாறு உடைந்து போகுமா அதனால இந்தபாதிப்புகள் வருமா?சின்னதா ஒரு விளக்கம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க பெரியாறு அணை தொடங்கிவரிசையா 13 அணைகள் இருக்கு.

பெரியாறு அணை நிரம்பின பிறகுதான் இந்தஅனைகளுக்கெல்லாம் தண்ணி வந்து 13உம் நிரம்பிஅப்புறம் தான் கடலுக்கு தண்ணி போகுது ஒரு வேலைபேச்சுக்கு அணை உடையுதுன்னு வச்சுகிட்டாலும் கூட13 அணைகள் தாண்டி தான் வெள்ளம் ஊருக்குள வரும். இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்டும் தான் பெரியாறு ஓடுது. மத்தபடி250 கிலோமீட்டர் அடர்ந்த காடு. மலை இதுதான்அதோட பாதை இந்த பாதையில் பெரிசா குடியிருப்புகள்எதவும் இல்ல அடங்காத முரட்டு குதிரை போலவெள்ளம் வந்தாலும் அதோட வேகம் அடர்ந்தகாட்டையும் மலைகளையும் தாண்டி சமவெளிக்கு வரும் போது சாதுவா மாறிடும், இதுதான் எதார்த்தம் ஆனா இப்ப அணையின் உயரத்தை அதிகரிக்க விடாதவர்கள் புதுசா அணை கட்டுவாங்கலாம் . ஒரு சொட்டு தண்ணி கூட குறையாம தருவாங்கலாம் .கேக்கிறதுக்கு எப்புடி தெரியுமா இருக்கு! "கூரையேறிகோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கிழிச்சுவைகுண்டத்தை காட்டுறேன்னு சொன்னனாம்"அப்புடிங்கிற அப்பத்தாவோட பழமொழி தான் நினைவுக்கு வருது.

இணையத்திலிருந்து
தமிழ் தாயகத்திற்காக
க. இளஞ்செழியன்




நமது தமிழ் தாயகத்தின் facebook குழுமத்தில் இணைய....

https://www.facebook.com/groups/TAMILTHAAYAGAM/

நன்றி
வெங்கடேஷ்
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum