Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
2 posters
Page 1 of 1
கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலம் அடைவார் என்று எதிர்பார்த் தால், நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கி மீடியா வெளிச்சத்துக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.+
'ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ மூலமாக சினிமா தயாரித்து வருகிறார் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி. ஸ்டாலின் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சேஷாத்ரி குமார் என்பவரிடம் இருந்து வீட்டை அபகரித்ததாக, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்காக வெளிநாடு சென்றிருந்த உதயநிதி, கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை போலீஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
''நிலஅபகரிப்பு விவகாரங்களில் சிக்கும் தி.மு.க-வினர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற்று விட்டதே?''
''என் தங்கைக்கு இரட்டைக் குழந்தைகள். அவர் களும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால், குழந் தைகளைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த நேரத்தில் பக்கத்து வீடு காலி ஆனது. அதன் உரிமையாளர் வேணுகோபால் ரெட்டியிடம் முன்பணம் கொடுத்து, ஒப்பந்தம் போட்டு வாடகைக்குப் பிடித்தோம். அதற்கான வாடகையை முறையாக நான் செலுத்தி வருகிறேன். ஆனால், யாரோ குமார் என்பவரை மிரட்டி, குறைந்த விலைக்கு வாங்கியதாக பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். என் மீது புகார் கூறியுள்ள என்.எஸ்.குமார் யார் என்றே எனக்குத் தெரியாது. இதுவரை அவரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. யாரோ அவரைத் தூண்டி இப்படி புகார் கொடுக்க வைத்துள்ளார்கள். இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்.''
''பொய் வழக்கு என்றால்... என்ன உள்நோக்கம்?
''வேறு எதற்கு? என் அப்பாவின் பெயரைக் களங்கப்படுத்தத்தான்! யாராவது இப்படி புகார் கொடுப்பார்களா என அரசுத் தரப்பில் இருந்தே, வலைவீசித் தேடி இருக்கிறார்கள். பணத்துக்கு ஆசைப் பட்டவர்கள் இரையாகி இருக்கிறார்கள். இப்போது, தாத்தா மீதும் அப்பா மீதும் யாரோ ஒருவர் புகார் கொடுத்திருக்கிறாராம். உண்மை என்ன என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.''
''கலைஞர் குடும்பத்து சினிமா கம்பெனிகளால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்; ஆட்சி மாறியதும்தான் அவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய முடிகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?''
''ஆட்சி மாறி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் யாராவது புது தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்களா? இல்லையே! நாங்கள் படம் எடுப்பதை நிறுத்தி விட்டோமோ? அதுவும் இல்லை! பிறகு எப்படி இந்த மாதிரி எங்கள் மீது குற்றம் சாட்ட முடியும்? யாரும் இங்கே படம் எடுக்கலாம். படம் நன்றாக இருந்தால்... ஓடும். இல்லை என்றால், தியேட் டரைவிட்டு ஓடிவிடும். 2010-ஐ விட 2011-ல் ரிலீஸான படங்கள் குறைவு. கடந்த ஏழு மாதங்களில் வந்த ஒரு சில படங்களைத் தவிர மற்றவை எல்லாமே ஃபெயிலியர். அதற்கும் நாங்கள்தான் காரணமா என்ன?
கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை!''
''அழகிரி - ஸ்டாலினுக்கு இடையிலும், ஸ்டாலின் - கனிமொழிக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்களே...''
''அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சினிமா பற்றி கேளுங்கள், நான் பதில் சொல் கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, நான் என் தாத்தா, அப்பாவை ஃபாலோ பண்ணுபவன். அவ்வளவுதான்!''
''நீங்கள் தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்பாளராக வரப் போவதாகச் சொல்கிறார்களே?''
''அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்... நிச்சயம் ஏற்க மாட்டேன். தலைவர் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்துக்காக, கட்சியில் இளைஞர் அணிச் செயலாளராக வர ஆசைப்பட முடியாது. கட்சிக் காக உழைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் வர வேண்டும். கட்சிக்கும் அதுதான் நல்லது. இளைஞர் அணிக்கும் அதுதான் நல்லது. தலைவரோட பையன் என்பதாலேயே அப்பா அந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. படிப்படியாகத்தான் கட்சிப்பணி செய்து வந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தி.மு.க. உறுப்பினர், முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர்... அவ்வளவுதான்.''
''கட்சிப் பத்திரிகையின் பொறுப்பாளராக இருக்கிறீர்கள். ஆனால், தீவிர அரசியலில் இருந்து தள்ளி நிற்பதுபோலப் பேசுகிறீர்களே. இது முரண்பாடாக இல்லையா?''
''அரசியலில் தள்ளி நிற்கவில்லை. இப்போதைக்கு, சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். எதிர் காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாது!''
கருணாநிதியைப் போலவே பொடி வைத்து முடிக்கிறார் உதயநிதி!
தகவல் பகிர்வு - http://www.thedipaar.com/cinema/cinema.php?id=11357
ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலம் அடைவார் என்று எதிர்பார்த் தால், நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கி மீடியா வெளிச்சத்துக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.+
'ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ மூலமாக சினிமா தயாரித்து வருகிறார் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி. ஸ்டாலின் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சேஷாத்ரி குமார் என்பவரிடம் இருந்து வீட்டை அபகரித்ததாக, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்காக வெளிநாடு சென்றிருந்த உதயநிதி, கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை போலீஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
''நிலஅபகரிப்பு விவகாரங்களில் சிக்கும் தி.மு.க-வினர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற்று விட்டதே?''
''என் தங்கைக்கு இரட்டைக் குழந்தைகள். அவர் களும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால், குழந் தைகளைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த நேரத்தில் பக்கத்து வீடு காலி ஆனது. அதன் உரிமையாளர் வேணுகோபால் ரெட்டியிடம் முன்பணம் கொடுத்து, ஒப்பந்தம் போட்டு வாடகைக்குப் பிடித்தோம். அதற்கான வாடகையை முறையாக நான் செலுத்தி வருகிறேன். ஆனால், யாரோ குமார் என்பவரை மிரட்டி, குறைந்த விலைக்கு வாங்கியதாக பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். என் மீது புகார் கூறியுள்ள என்.எஸ்.குமார் யார் என்றே எனக்குத் தெரியாது. இதுவரை அவரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. யாரோ அவரைத் தூண்டி இப்படி புகார் கொடுக்க வைத்துள்ளார்கள். இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்.''
''பொய் வழக்கு என்றால்... என்ன உள்நோக்கம்?
''வேறு எதற்கு? என் அப்பாவின் பெயரைக் களங்கப்படுத்தத்தான்! யாராவது இப்படி புகார் கொடுப்பார்களா என அரசுத் தரப்பில் இருந்தே, வலைவீசித் தேடி இருக்கிறார்கள். பணத்துக்கு ஆசைப் பட்டவர்கள் இரையாகி இருக்கிறார்கள். இப்போது, தாத்தா மீதும் அப்பா மீதும் யாரோ ஒருவர் புகார் கொடுத்திருக்கிறாராம். உண்மை என்ன என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.''
''கலைஞர் குடும்பத்து சினிமா கம்பெனிகளால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்; ஆட்சி மாறியதும்தான் அவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய முடிகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?''
''ஆட்சி மாறி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் யாராவது புது தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்களா? இல்லையே! நாங்கள் படம் எடுப்பதை நிறுத்தி விட்டோமோ? அதுவும் இல்லை! பிறகு எப்படி இந்த மாதிரி எங்கள் மீது குற்றம் சாட்ட முடியும்? யாரும் இங்கே படம் எடுக்கலாம். படம் நன்றாக இருந்தால்... ஓடும். இல்லை என்றால், தியேட் டரைவிட்டு ஓடிவிடும். 2010-ஐ விட 2011-ல் ரிலீஸான படங்கள் குறைவு. கடந்த ஏழு மாதங்களில் வந்த ஒரு சில படங்களைத் தவிர மற்றவை எல்லாமே ஃபெயிலியர். அதற்கும் நாங்கள்தான் காரணமா என்ன?
கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை!''
''அழகிரி - ஸ்டாலினுக்கு இடையிலும், ஸ்டாலின் - கனிமொழிக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்களே...''
''அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சினிமா பற்றி கேளுங்கள், நான் பதில் சொல் கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, நான் என் தாத்தா, அப்பாவை ஃபாலோ பண்ணுபவன். அவ்வளவுதான்!''
''நீங்கள் தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்பாளராக வரப் போவதாகச் சொல்கிறார்களே?''
''அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்... நிச்சயம் ஏற்க மாட்டேன். தலைவர் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்துக்காக, கட்சியில் இளைஞர் அணிச் செயலாளராக வர ஆசைப்பட முடியாது. கட்சிக் காக உழைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் வர வேண்டும். கட்சிக்கும் அதுதான் நல்லது. இளைஞர் அணிக்கும் அதுதான் நல்லது. தலைவரோட பையன் என்பதாலேயே அப்பா அந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. படிப்படியாகத்தான் கட்சிப்பணி செய்து வந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தி.மு.க. உறுப்பினர், முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர்... அவ்வளவுதான்.''
''கட்சிப் பத்திரிகையின் பொறுப்பாளராக இருக்கிறீர்கள். ஆனால், தீவிர அரசியலில் இருந்து தள்ளி நிற்பதுபோலப் பேசுகிறீர்களே. இது முரண்பாடாக இல்லையா?''
''அரசியலில் தள்ளி நிற்கவில்லை. இப்போதைக்கு, சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். எதிர் காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாது!''
கருணாநிதியைப் போலவே பொடி வைத்து முடிக்கிறார் உதயநிதி!
தகவல் பகிர்வு - http://www.thedipaar.com/cinema/cinema.php?id=11357
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
ஓகே ஓகே.. சினிமா நடிகர் ஆகிடிங்கணு தெரியுது ... உங்க பன்ச் ல இருந்து
Guest- Guest
Re: கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
காலம் பதில் சொல்லட்டும் ! பார்க்கலாம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» கதாநாயகனாகும் உதயநிதி ஸ்டாலின்
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்
» டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!
» உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படபிடிப்பு துவக்கம்
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்
» டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!
» உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படபிடிப்பு துவக்கம்
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|