ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு

2 posters

Go down

கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Empty கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு

Post by கோவைசிவா Tue Sep 29, 2009 10:44 pm

மதுரையில் நடத்தை மீது ஆத்திரம் கொண்ட கணவர், மனைவியை அடித்துக் கொன்று மர இழைப்பகத்தில் புதைத்தார். ஒரு வாரத்திற்கு பின் நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை செய்யப் பட்டது.


பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.


பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.


போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.


மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Empty Re: கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு

Post by மீனு Tue Sep 29, 2009 10:48 pm

அட கடவுளே.. இப்படியுமா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum