ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!

Go down

பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்! Empty பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!

Post by பிரசன்னா Mon Jan 09, 2012 11:08 am

பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!

பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்! Anbumani_ramadoss_father_20090326

கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு, திமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி என யார் யாரோவெல்லாம் நிதியுதவி செய்தும், பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நிலையில் நாம் எல்லாம் இத்தனை காலமாக நம்பியிருந்த நமது கட்சி என்று பாசத்துடன் சுற்றிக் கொண்டிருந்த பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை ஒரு உதவியைக் கூட நமக்காக செய்யவில்லையே என்று கடலூர் மாவட்ட வன்னிய சமுதாயத்தினர் பெரும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக முந்திரி, பலா மரங்களை இழந்து தங்களது 20 ஆண்டு கால வாழ்க்கையை, உழைப்பை இழந்து தவிக்கும் வன்னிய விவசாயிகள் பெரும் அதிருப்தியுடன் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டம் வன்னிய மக்களால் நிரம்பிய ஒன்று. பாமகவின் வாக்கு வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆனால் தானே புயலால் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்ல பாமகவும் சின்னாபின்னமாகி சிதறிப் போகும் ஆபத்து வ்நது விட்டது.

தானே புயலால் சூறையாடப்பட்ட கடலூர் மாவட்டம் சிதிலமடைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிப்புடன் உள்ளனர்.

அவர்களுக்காக உதவ 19 அமைச்சர்களை களம் இறக்கி போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை அதிமுக அரசு முடுக்கி விட்டுள்ளது. திமுகவும் ரூ. 50 லட்சம் நிதியுதவியை அளித்து தனது கட்சியினரை தீவிரமாக நிவாரணப் பணிகளில் இறக்கி விட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் காரிலேயே கடலூர் வந்து மக்களைச் சந்தித்து விட்டுப் போயுள்ளார்.

தேமுதிகவின் பணிகள்தான் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். தன்னால் முடிந்த அளவுக்கு இங்கு தேமுதிகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் கட்சித் தலைவர் விஜயகாந்த். அவரே நேரில் வந்து நிவாரண உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து விட்டுப் போயுள்ளார். பல இடங்களில் ஜெனரேட்டர்களை இலவசமாக பொருத்தி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர் தேமுதிகவினர்.

அட, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து கூட இந்த மாவட்ட மக்களுக்கு ரூ. 20 கோடி நிதியுதவியை அளித்துள்ளார். ஏன், சாமியார் நித்தியானந்தா கூட உதவிக் கரம் நீட்டியுள்ளார். பெருமளவிலான நிதியுதவியை அளித்துள்ளார்.

ஆனால்..இத்தனை காலமாக இந்த மாவட்ட மக்களின் வாக்குகளில் முத்துக் குளித்து வந்த பாமக இதுவரை ஒரு துரும்பைக் கூட எடுக்க முன்வரவில்லை என்று வன்னிய சமுதாயத்தினர் வேதனையுடன் குமுறல் தெரிவிக்கின்றனர்.

இதுவரை பாமக சார்பில் எந்தவிதமான நிவாரண உதவியும், நிதியும் அறிவிக்கப்படவில்லை என்பது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர்களை கடும் கோபத்திலும், வெறுப்பிலும் தள்ளியுள்ளது. எங்களது வாழ்வே போய் விட்டது. கட்சிதான் நமது அங்கீகாரம், ராமதாஸ்தான் நமது கடவுள் என்ற அளவுக்கு நாங்கள் இத்தனை காலம் இருந்தோம் என்பதே வெட்கமாக உள்ளது என்று இப்போது இந்தப் பகுதி வன்னியர்கள் வெறுப்புடன் கூறுகின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் வந்து சுற்றிப் பார்த்து விட்டு அரசு நிவாரணப் பணிகள் சரியில்லை, மத்திய அரசு சரியில்லை என்று பேட்டி கொடுத்து விட்டு வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனதோடு சரியாம், அதற்குப் பிறகு இதுவரை ஒரு பைசாவைக் கூட நிவாரண நிதியாக அவர்கள் அறிவிக்கவில்லையாம்.

நமது ஜாதிக்காரர்களுக்குக் கூட ராமதாஸ் உதவவில்லையே என்ற வெறுப்பில் வன்னியர்களும், நாமே இப்படி இருந்தால் எப்படி என்ற வேதனையில் கடலூர் பாமக நிர்வாகிகளும் உள்ளனராம்.

இதனால் பலர் பாமகவை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான பண்ருட்டி வேல்முருகன் பின்னால் பலர் விரைவில் அணி சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum