Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
+2
பிஜிராமன்
பிரசன்னா
6 posters
Page 1 of 1
பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
சென்னை, ஜன.8: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களுக்கு நீராதாரத்தை ஏற்படுத்தித் தந்த பொறியாளர் பென்னி குக் நினைவைப் போற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணை லோயர் கேம்ப் பகுதியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் Jayao](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2012/1/8/jayao.jpg)
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தென் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இம்மாவட்டங்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கர்னல் பென்னிகுவிக் அவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்.
இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார். அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.
அந்தக் காலத்திலேயே பென்னிகுவிக் அவர்கள் இந்த அணையை சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டினார். புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள் நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கின்றது.
இந்த அணையை கட்டியதன் மூலம்,
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலுக்கு இலக்கணமாக, நூற்றாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுவிக் நிற்கின்றார்.
இந்த அணை இன்றளவும் நன்முறையில் இயங்கி வருவதாலும், மேலும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதாலும், இந்த அணையை உருவாக்கிய பென்னிகுவிக் அவர்களுக்கு நமது நன்றியினை காட்டும் வகையில், அன்னாருக்கு ஒரு நினைவு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கோரியுள்ளனர்.
தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக் அவர்களின் பேரன் அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும்.
தகவல் பகிர்வு - தினமணி
சென்னை, ஜன.8: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களுக்கு நீராதாரத்தை ஏற்படுத்தித் தந்த பொறியாளர் பென்னி குக் நினைவைப் போற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணை லோயர் கேம்ப் பகுதியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் Jayao](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2012/1/8/jayao.jpg)
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தென் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இம்மாவட்டங்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கர்னல் பென்னிகுவிக் அவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்.
இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார். அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.
அந்தக் காலத்திலேயே பென்னிகுவிக் அவர்கள் இந்த அணையை சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டினார். புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள் நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கின்றது.
இந்த அணையை கட்டியதன் மூலம்,
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலுக்கு இலக்கணமாக, நூற்றாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுவிக் நிற்கின்றார்.
இந்த அணை இன்றளவும் நன்முறையில் இயங்கி வருவதாலும், மேலும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதாலும், இந்த அணையை உருவாக்கிய பென்னிகுவிக் அவர்களுக்கு நமது நன்றியினை காட்டும் வகையில், அன்னாருக்கு ஒரு நினைவு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கோரியுள்ளனர்.
தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக் அவர்களின் பேரன் அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும்.
தகவல் பகிர்வு - தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
நல்லதொரு செயல்.......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
மிகவும் நன்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
மிகவும் பாராட்டுதலுக்கு உரியவராகிரார் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள். திரு பென்னி ஃகுவிக் அவர்களின் சேவை தமிழர்கள் யாராலும் எப்போதும் மறக்கப்பட கூடாது. காலந்தாழ்த்தி செய்தாலும் செயல் பாராட்டுக்குரியது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
Re: பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர்
தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பென்னி குக்குக்கு மணிமண்டபம்: முதல்வர் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
» ராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்
» சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:
» செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ஆய்வு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» ராமானுஜருக்கு ரூ 3.36 கோடியில் மணிமண்டபம்
» சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:
» செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ஆய்வு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|