ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோமா

Go down

அறிவோமா  Empty அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:43 am

பயோ-கிளாக்

சிலர் எந்த நேரத்தில் தூங்கினாலும், எழ வேண்டிய நேரத்தில் சரியாக எழுந்து விடுவார்கள். இந்த முறைப்படிதான் கோழி கூவுகிறது. காலை வேளையில் பறவைகள் ஒலி எழுப்புகிறது.

நமது உடல் சில நேரங்களில் சுறுசுறுப்பாகவும், சில நேரங்களில் ஓய்வாகவும் இருக்கும். இதற்கு `பயோகிளாக் சிஸ்டம்' அல்லது `பயோலாஜிக்கல் ரிதம்' என்று பெயர். அதற்கேற்ப நாம் நமது உடல்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது உடல் எப்போதும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை என்பதை பிரான்ஸ் ஹால்பெர்க் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார்.

பொதுவாக எல்லா உயிர்களின் உடலிலும் பயோலாஜிக்கல் ரிதம் உண்டு. அதை தினசரி ஒழுங்குபடுத்தும் கால அளவை `சர்காடியன் ரிதம்' என்றும் ஒவ்வொரு மணி நேரமும் மாறுபடும் காலஅளவை `கிர்னோ பயோலாஜி ரிதம்' என்றும் கூறுகின்றனர்.

சிறுவர் தங்க மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:44 am

சூரிய சக்தி

ஒளி எதன் மீது பட்டு எதிரொளிக்கிறதோ அப்பொருளின் அணு எலக்ட்ரானாக மாறி விடுகிறது. இதை `போட்டோ எலக்ட்ரிக் எபெக்ட்' என்று அழைப்பர்.

போட்டோ செல்லைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் சக்தியை `சோலார் பவர்' என்று சொல்வர். இதனால் சிறிய அளவில் கால்குலேட்டரில் இருந்து பெரிய அளவாக மின் உற்பத்தி வரை சூரிய சக்தி பயன்படுகிறது. சூரிய ஒளியில் இருந்தே இந்த சக்தி பெறப்படுகிறது. இந்த ஒளி போட்டோன்கள் எனப்படும் ஒரு அணு சுழற்சியில் எலக்ட்ரான்களாக மாறுகின்றன. சோலார் தகட்டில் விழும் சூரிய ஒளியின் சக்தியை சிலிகான் அணு பெறுகிறது.

விண்ணில் சுற்றும் செயற்கைக்கோள்கள் முழுவதும் சூரிய சக்தியால் தான் செயல்படுகிறது. இங்கு தொடர்ந்து 24 மணி நேரமும் சூரிய ஒளி கிடைக்கிறது. இதனால் சோலார் தகடுகள் தொடர்ந்து சூரிய சக்தியைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.

***


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:45 am

தோல் பதனிடும் விதம்

உலகெங்கும் தோல் பதனிடுதல் நடந்தாலும், அவற்றில் நுண்ணுயிர்களும், கொழுப்பு பகுதியும் சீராக நீக்கப்படாமல் இருக்கும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் சுத்தமாக தயாரிக்கப்படுகிறது. தோல் பதனிடுதலில் முக்கியமாக இயற்கை எண்ணெய் மற்றும் கொழுப்பு பகுதியும் புதிய தொழில்நுட்பங்களில் நீக்கப்படுகிறது. இதற்கு `டேனிங்' என்று பெயர்.

விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்பகுதியில் நன்கு தடவுவர். அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும். அதன் பின், வேதிப்பொருள் கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அந்த தோலை ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறமுள்ள முடி நீக்கப்படும். தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் நனைத்து எடுப்பர். இப்போது முடி மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்.

தோலைப் பதனப்படுத்த மூன்று முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை பற்றி பார்ப்போமா...
தாவரப் பதனிடும் முறை

சிலவகை மரப்பட்டைகள், காய்களை தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு தோல் பதனிடப்படுகிறது. இதற்கு தாவரப்பதனிடும் முறை என்று பெயர்.
தாதுப் பொருள் பதனிடும் முறை

இந்த முறையில், குரோமியம், அலுமினியம், இரும்பு முதலான உலோகப் பொருட்கள் அடங்கிய வேதி உப்புகளைக் கொண்டு தோல் பதனிடுவர்.
எண்ணெய் பதனிடும் முறை

மீன் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளைக் கொண்டு பதனிடும் முறை இது.

நவீன முறையில் எந்திரங்களின் மூலமே பெரும்பாலும் தோல் பதனிடப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தும் தோல்களை எந்திரங்கள் விரைவாக உலர்த்துகின்றன. தோலின் தேவையற்ற பகுதிகளை வெட்டி ஒழுங்குபடுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலின் சுருக்கங்கள் நீக்கப்பட்டு பளபளப்பாக மெருகூட்டப் படுகின்றன. இவை அனைத்தும் எந்திரங்கள் மூலமே செய்யப்படுகின்றன.
தோல்பொருட்கள்

ஆடு, மாடு, பாம்பு, உடும்பு, நெருப்புக்கோழி, மான் போன்றவற்றின் தோல்களைப் பயன்படுத்தி அழகிய பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், இடுப்புப்பட்டைகள், மெல்லிய தோலினாலான உடைகள், செருப்புகள், அலங்காரப்பொருள்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.

தோல் பதனீட்டுத்தொழிலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா முதலிய நாடுகள் சிறந்து விளங்குகின்றன.

***


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:46 am

தெரியுமா சேதி

* மெக்சிகோவில் ஊசியுடன் நூல் தரும் மரங்கள் உள்ளன. இதன் பசுமையான தளிர்களின் நடுவில் ஊசி போன்று முட்கள் காணப்படுகின்றன. இதைப் பறித்து எடுத்தால், அதன் அடியில் நீளமான நூல் இழை ஒன்று ஊசியில் கோர்த்தது போல் வருகிறது. இங்குள்ள மக்கள் இதைக் கொண்டு துணிகளைத் தைத்துக் கொள்வார்களாம்.

* அஞ்சல் அட்டை இந்தியாவிற்கு புழக்கத்திற்கு வந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது பிரஷ்ஷியன் போஸ்ட் ஆபீஸ்.

1870-ல் ஜெர்மனி பகுதிக்குட்பட்ட பிரஷ்யா, கரஸ்பாண்டன்ஸ் கார்டு சர்வீஸ் என்று இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இதை இந்தியாவிற்கு 1.7.1879-ல் இந்திய அஞ்சல்துறையின் டைரக்டர் ஜெனரலாக இருந்த மான்டீத் என்ற ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினார். வெளியான 9 மாதங்களில் 80 லட்சம் அஞ்சல் அட்டைகள் விற்றுத் தீர்ந்தன. அப்போது இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?

12.1 கோடிதான்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:47 am

தகவல் களஞ்சியம்

* உலகில் அதிக வெப்பமான இடம் - லிபியாவில் உள்ள அசீசியா

* `பிளைவுட்டை' கண்டறிந்தவர், இம்மானுவேல் நோபல் என்பவர்.

* பவுத்தர்களின் புனித மரம், நாவல் மரம்.

* முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி அபாலாபோஸ்.

* பப்பாளிப் பழத்தின் தாயகம், மெக்சிகோ.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:48 am

ஐ.எஸ்.ஐ. நிறுவனம்

1947-ல் உலகத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ஐஎஸ்ஐ) ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் ஜெனீவா. உலகில் உள்ள நாடுகள் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு தரச் சான்றிதழ் வழங்கும் பணியைச் செய்கிறது. இது உலக நாடுகள் இடையே தடையின்றி வர்த்தகத் தொடர்பு ஏற்பட வழிவகை செய்கிறது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:49 am

உயரமான சாலைப் பாலம்

மிக உயரமான சாலைப் பாலம் லடாக்கில் உள்ளது. சுமார் 100 அடி நீளம் உள்ள இந்த பாலம் சுமார் 18 ஆயிரத்து 500 அடி உயரத்தில் கார்டுங்கராவுக்கு அருகில் உள்ளது. இதற்கு பெய்லி பாலம் என்று பெயர். இதைக் கட்டியது யார் தெரியுமா?

இந்திய ராணுவம்தான்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:49 am

தக்காளிப் பழம்

தக்காளிப் பழம் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா. பிறகு இது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவியது. தற்போது இந்தியாவில் தக்காளி பயிரிடப்படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது.

இதில் வைட்டமின் `ஏ' சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. மேலும், வைட்டமின் பி1, பி2, 17 மில்லி கிராமும், வைட்டமின் `சி' 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன. சீரான ரத்த ஓட்டத்திற்கு இது பயன்படுகிறது. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by இளமாறன் Thu Jan 05, 2012 1:50 am

உயிர் பூச்சிக்கொல்லி

சில தாவரங்கள் இயற்கையிலேயே பூச்சிகளில் இருந்து தப்பிக்க பல்வேறு வகையான வேதிப்பொருட்களைச் சுரக்கின்றன. இதை சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் இந்த வேதிப்பொருட்களை தாவரங்களில் இருந்து பிரித்தெடுத்து விவசாயத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கின்றனர். இதற்கு `பயோ-பெஸ்டிசைட்' என்று பெயர்.

இதன் தயாரிப்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் முதல் இடம் பிடிப்பது வேம்பு. இதில் இருந்து அசடிராக்டின் என்ற வேதிப்பொருளை பிரித்தெடுக்கின்றனர். இதேபோல் உயிர்ப்பூச்சிக்கொல்லியாக பாக்டீரியாவையும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியாவை உயிர்பூச்சிக்கொல்லியாக விற்பனை செய்கின்றனர். இவற்றை கோஸ் பயிர்களை உடைய வயல்களில் போட்டு விட்டால், பயிர்களைச் சேதமாக்கும் கம்பளிப் பூச்சிகளைத் தாம் சுரக்கும் வேதிப்பொருட்களால் கொன்றுவிடுகின்றன.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவோமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அறிவோமா  Empty Re: அறிவோமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum