Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
5 posters
Page 1 of 1
கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஆபரேஷன் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்ததால், ஆத்திரமடைந்த அவரது கணவர், நண்பர்களுடன் சேர்ந்து, "கிளினிக்'கிற்குள் புகுந்து, பெண் டாக்டரை குத்திக் கொலை செய்தார். இதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு டாக்டர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று, தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.தூத்துக்குடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம், தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி, டாக்டர் சேதுலட்சுமி, 48. இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனை தலைமை டாக்டரான இவர், வீட்டின் அருகில், "சுபம்' என்ற பெயரில் தனியாக, "கிளினிக்'கும் நடத்தி வந்தார்.
இவர், தூத்துக்குடி, ஆவுடையாபுரம் ஆட்டோ டிரைவர் மகேஷ், 27, என்பவரின், குடும்ப டாக்டராகவும் இருந்தார். மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா, 25, மாதாந்திர பரிசோதனைக்கு, இவரிடம் தான் வருவது வழக்கம்.
ஆறு மாத கர்ப்பிணியான நித்யாவிற்கு, டிச.,30ம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, "சுபம்' கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி, கருவிலுள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால், நித்யா உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், மகேஷிடம் கூறியுள்ளார்.மகேஷ் சம்மதத்தின் பேரில், அன்று மதியம் நித்யாவுக்கு, ஆபரேஷன் செய்த சேதுலட்சுமி, கருவிலிருந்து இறந்த குழந்தையை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில், நித்யாவின் உடல்நிலை, மிகவும் மோசமானது.
இதையடுத்து, சேதுலட்சுமி பரிந்துரைப்படி அவர், தூத்துக்குடியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா, அன்றிரவே இறந்து போனார். இதையடுத்து, மனைவிக்கு இறுதிச் சடங்கை முடித்து, டாக்டர் சேதுலட்சுமியை சந்தித்த, மகேஷ் குழந்தை, மனைவி இறந்ததற்கு முறையான சிகிச்சையளிக்காதது தான் காரணம் எனக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் சேதுலட்சுமியை மிரட்டியதாக, டாக்டர் தரப்பில் தென்பாகம் போலீசில் புகார் கூறப்பட்டது.
குத்திக்கொலை:நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு, மகேஷ், தனது நண்பர்கள் குருமுத்து, 19, ராஜா, 27, அப்பாஸ், 27 ஆகியோருடன், 10 மணிக்கு சுபம், "கிளினிக்'கிற்கு சென்றார். மனைவி, குழந்தை இறந்தது தொடர்பாக, அங்கிருந்த டாக்டர் சேதுலட்சுமியுடன், மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மகேஷ், நண்பர்களோடு சேர்ந்து சேதுலட்சுமியை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், கழுத்து, தலை, உடலில் படுகாயமடைந்த சேதுலட்சுமி, அங்கேயே இறந்தார். கிளினிக் பணியாளர் வள்ளிக்கும், 38, கத்திக்குத்து விழுந்தது.
அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்:டாக்டர் சேதுலட்சுமி படுகொலையை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை கறுப்பு பேட்ஜ் அணிந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் டி.ஆர்.ஓ., எஸ்.பி.,ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., லதா பேச்சு நடத்தினர்.
சேதுலட்சுமியை கொலை செய்த குருமுத்து, ராஜா, அப்பாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துவிட்டதாகவும், தலைமறைவாக உள்ள மகேஷை உடனடியாக கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். ஆனால், மகேஷை கைது செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என, டாக்டர்கள் உறுதியாக தெரிவித்தனர். மாவட்டத்தின், பிற ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்தம் வாபஸ்: இதனிடையே, மதியம் 1.30 மணிக்கு, மகேஷ் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி., டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்து, பணிக்குத் திரும்பினர்.எனினும், மாநிலம் முழுதும் அரசு மருத்துவர்கள் அனைவரும், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை தவிர, வேறு எந்த சிகிச்சையும் செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
தினமலர்
இவர், தூத்துக்குடி, ஆவுடையாபுரம் ஆட்டோ டிரைவர் மகேஷ், 27, என்பவரின், குடும்ப டாக்டராகவும் இருந்தார். மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா, 25, மாதாந்திர பரிசோதனைக்கு, இவரிடம் தான் வருவது வழக்கம்.
ஆறு மாத கர்ப்பிணியான நித்யாவிற்கு, டிச.,30ம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, "சுபம்' கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி, கருவிலுள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால், நித்யா உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், மகேஷிடம் கூறியுள்ளார்.மகேஷ் சம்மதத்தின் பேரில், அன்று மதியம் நித்யாவுக்கு, ஆபரேஷன் செய்த சேதுலட்சுமி, கருவிலிருந்து இறந்த குழந்தையை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில், நித்யாவின் உடல்நிலை, மிகவும் மோசமானது.
இதையடுத்து, சேதுலட்சுமி பரிந்துரைப்படி அவர், தூத்துக்குடியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா, அன்றிரவே இறந்து போனார். இதையடுத்து, மனைவிக்கு இறுதிச் சடங்கை முடித்து, டாக்டர் சேதுலட்சுமியை சந்தித்த, மகேஷ் குழந்தை, மனைவி இறந்ததற்கு முறையான சிகிச்சையளிக்காதது தான் காரணம் எனக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் சேதுலட்சுமியை மிரட்டியதாக, டாக்டர் தரப்பில் தென்பாகம் போலீசில் புகார் கூறப்பட்டது.
குத்திக்கொலை:நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு, மகேஷ், தனது நண்பர்கள் குருமுத்து, 19, ராஜா, 27, அப்பாஸ், 27 ஆகியோருடன், 10 மணிக்கு சுபம், "கிளினிக்'கிற்கு சென்றார். மனைவி, குழந்தை இறந்தது தொடர்பாக, அங்கிருந்த டாக்டர் சேதுலட்சுமியுடன், மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மகேஷ், நண்பர்களோடு சேர்ந்து சேதுலட்சுமியை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், கழுத்து, தலை, உடலில் படுகாயமடைந்த சேதுலட்சுமி, அங்கேயே இறந்தார். கிளினிக் பணியாளர் வள்ளிக்கும், 38, கத்திக்குத்து விழுந்தது.
அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்:டாக்டர் சேதுலட்சுமி படுகொலையை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை கறுப்பு பேட்ஜ் அணிந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் டி.ஆர்.ஓ., எஸ்.பி.,ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., லதா பேச்சு நடத்தினர்.
சேதுலட்சுமியை கொலை செய்த குருமுத்து, ராஜா, அப்பாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துவிட்டதாகவும், தலைமறைவாக உள்ள மகேஷை உடனடியாக கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். ஆனால், மகேஷை கைது செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என, டாக்டர்கள் உறுதியாக தெரிவித்தனர். மாவட்டத்தின், பிற ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்தம் வாபஸ்: இதனிடையே, மதியம் 1.30 மணிக்கு, மகேஷ் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி., டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்து, பணிக்குத் திரும்பினர்.எனினும், மாநிலம் முழுதும் அரசு மருத்துவர்கள் அனைவரும், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை தவிர, வேறு எந்த சிகிச்சையும் செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் டாக்டர் நேற்று கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், வெளி நோயாளிகள் பிரிவு டாக்டர்களும் பங்கேற்பதால், வெளி நோயாளிகள் பிரிவு செயல்படாது.
இதனால், எவ்வித அறுவை சிகிச்சைகளும் நடைபெறாது. இதேபோல், பேராசிரியர்களும் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இதே காரணத்திற்காக, தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் மூடப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் டாக்டர் நேற்று கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், வெளி நோயாளிகள் பிரிவு டாக்டர்களும் பங்கேற்பதால், வெளி நோயாளிகள் பிரிவு செயல்படாது.
இதனால், எவ்வித அறுவை சிகிச்சைகளும் நடைபெறாது. இதேபோல், பேராசிரியர்களும் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இதே காரணத்திற்காக, தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் மூடப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
நோயாளிகளுக்குதான் கஷ்டம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
மகேசுக்குத்தான் அறிவில்லை, இந்த டாக்டர்களுக்குமா அறிவில்லாமல் போய்விட்டது. இதுங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சிசிங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
மாணிக்கம் நடேசன் wrote:மகேசுக்குத்தான் அறிவில்லை, இந்த டாக்டர்களுக்குமா அறிவில்லாமல் போய்விட்டது. இதுங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சிசிங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையே.
படிச்சிட்டா அறிவு வந்திடுமா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
மனைவி இழந்த சோகத்தில் இப்படியா செய்வது.
இதற்க்கு மருத்துவர்கள் என்ன செய்ய இயலும்.முட்டாள்
.
அந்த முட்டாளின் செயலுக்காக பல மருத்துவர்களும் முட்டாள்களாக நடந்து கொள்கின்றனர்....
அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களுமா ...
ஒரு உயிர் போனதின் விளைவால் எத்தனை உயிர்கள் பாதிக்க படுகின்றது.
இதற்க்கு மருத்துவர்கள் என்ன செய்ய இயலும்.முட்டாள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அந்த முட்டாளின் செயலுக்காக பல மருத்துவர்களும் முட்டாள்களாக நடந்து கொள்கின்றனர்....
அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களுமா ...
ஒரு உயிர் போனதின் விளைவால் எத்தனை உயிர்கள் பாதிக்க படுகின்றது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|