ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

5 posters

Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by இளமாறன் Thu Dec 29, 2011 12:50 pm

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை தருவதிலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய குற்றவியல் மற்றும் மருத்துவச் சட்டப்படி, பிரேத பரிசோதனை அறிக்கைப்படி தான், கேள்விக்கு உள்ளான ஒரு இறப்பு, இயற்கையானதா, விபத்தா, கொலையா, சதியா என்பது தெரிய வரும். அதன்படி தான், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சாதாரண ஊழியர்களே... : சில அரசு மருத்துவமனைகளில், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை டாக்டர்கள் இல்லாமல், உதவியாளர்கள் மற்றும் பிணவறை தொழிலாளர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, கடந்த 16ம் தேதி புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரேத பரிசோதனை செய்யும் சில டாக்டர்கள், பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் போலியாக கையொப்பம் இடுவதாகவும், தாங்கள் இல்லாத பிரேத பரிசோதனைகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தருவதாகவும் கூறப்படுகிறது.

போலி கையொப்பம் : சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் முருகேசன் என்பவர் தலைமையில், டாக்டர்கள் அன்புச்செல்வன், ஜோசப் ஹெலன் மற்றும் விக்ரம் ஆகியோர், பிரேத பரிசோதனை டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள், பல நேரங்களில் பணிக்கு வருவதில்லை அல்லது பணி நேரத்தில், ஏதாவது காரணம் கூறி வெளியே சென்று விடுவதாகவும், முக்கிய வழக்குகள் தொடர்பான பிரேத பரிசோதனையில் மட்டும் பங்கு கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனை டீன் அலுவலகம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் வருகைப் பதிவேடுகளில், டாக்டர்களின் கையெழுத்துகள், பல விதங்களில் உள்ளன. இதனால், எது உண்மையான கையெழுத்து என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் அன்புச்செல்வனுக்கு மட்டும், டி.ஏ., ஏ.எஸ்., த.அ., என்ற மூன்று வகை கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன. இதேபோல், அங்குள்ள பல டாக்டர்கள் கையெழுத்து, வெறும் "இனிஷியல்' ஆகவே உள்ளது.

நடைமுறைக்கு வரவில்லை : கடந்த 2009ல், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சுகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், திடீரென ரெய்டு நடத்தினார். அப்போது வருகைப் பதிவில் கையெழுத்திட்டிருந்த சில டாக்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் இல்லை. டாக்டர்கள் அன்புச்செல்வன், டெக்கால் போன்றோர் வருகைப்பதிவில் கையெழுத்திட்டிருந்தும், அவர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. சுப்பிரமணியன் என்ற மருத்துவர் கையெழுத்திட வந்தார். அப்போது, துணை இயக்குனர் வருகைப் பதிவை ஆய்வு செய்த போது, அவரது கையெழுத்து ஏற்கனவே போடப்பட்டிருந்தது.
இதை அறிக்கையிலேயே சுகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அனைத்து டாக்டர்களும், ஆர்.எம்.ஓ.,விடம் தனி வருகைப் பதிவேடு வைத்து, அவர் முன்பும் கையொப்பமிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு தற்போது வரை பின்பற்றப்படவில்லை.
கடிதம் : தடயவியல் பேராசிரியர் பணியில் இருக்கும் டாக்டர் முருகேசன், சமீபத்தில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், முறைப்படி பிரேத பரிசோதனை செய்ய, குறைந்தது ஒரு மணி நேரமாகும். மாலை 6 மணிக்கு மேல், பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல காரணங்களால், 6 மணிக்கு பின்பும், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளால், சட்டப் பிரச்னை ஏற்பட்டால், பெரும் சிக்கலாகி விடும். அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என, கூறப்பட்டுள்ளது.

16 பக்க அறிக்கை : ஒரு பிரேத பரிசோதனையின் போது, 16 பக்க அறிக்கையில் குறிப்பு எடுக்க வேண்டும். இந்த குறிப்புகள் தயார் செய்ய மட்டுமே, குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்டால் மட்டுமே அந்த அறிக்கை கோர்ட்டில் அனுமதிக்கப்படும். இப்படியிருக்க, காலை 10 மணியிலிருந்து, மாலை 6 மணிக்குள், எந்தவித இடைவேளையின்றி, அதிகபட்சம், எட்டு பிரேத பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், டாக்டர் அன்புச்செல்வன், ஒரு நாளில் மட்டும், அதிகபட்சம் 14 பிரேத பரிசோதனை செய்துள்ளதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், பிரேத பரிசோதனைகள் முறைப்படி நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலி அறிக்கை : பிரேத பரிசோதனையின் போது, கண்டுபிடிக்க வேண்டிய விவரங்கள் குறித்து, 16 பக்க அறிக்கைக்கான விண்ணப்பங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இவற்றை பயன்படுத்தாமல், வெறும் நான்கு பக்கங்களில், தாங்களாகவே விண்ணப்பங்களை அச்சிட்டு வைத்துள்ளனர். இவை, அங்குள்ள கூட்டுறவு அங்காடியில், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்துள்ள, 5,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு, அரசின் உத்தரவுப்படியான அறிக்கைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. முக்கியமான வழக்குகளுக்கு மட்டும், ரெடிமேடாக அறிக்கை தயாரித்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சான்று தருவதில் தாமதம் : பிரேத பரிசோதனை சான்றிதழை, பரிசோதனை முடிந்த 48 மணி நேரத்தில் தர வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தாமதப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், 200 சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் கொடுப்பதற்கான பதிவேடு, சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. உயரதிகாரிகள் சோதனையிடும் போது, பதிவேடுகளையும், சான்றிதழ்களையும், பழைய தேதிகளில் தயார் செய்து, பாவ்லா காட்டி விடுகின்றனராம். இவ்வாறு தாமதம் செய்வதால், புதைக்கப்படும் பிணங்கள், அழுகி விடும் நிலையில், எந்த விதமான அறிக்கை தந்தாலும், பிணத்தை தோண்டி எடுத்து, மறுசோதனையில் உறுதிப்படுத்த முடியாது. style="font-weight: bold;">இனி தவறுகள் நடக்காது : இந்த பிரச்னை குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு வந்த புகார்கள் தொடர்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். அவர் கூறும்போது, ""இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவோம். சம்பந்தப்பட்ட துறையினர், இனி எதிர்காலத்தில் எந்தவித குளறுபடிகளிலும் ஈடுபடாமல், விதிமுறைகளை சட்டப்படி பின்பற்ற, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.

தலைமை ஆசிரியரின் கதி : வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்னுரங்கம். இவரது மகன் சரவணன், சென்னை அம்பத்தூரிலுள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர், கல்லூரி வளாகத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தார் என, போலீசில் புகார் பதிவாகி உள்ளது. ஆனால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என, பெற்றோர் தரப்பு வேதனைப்படுகிறது. இவரது உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பொன்னுரங்கம் கூறும்போது, ""முதல்வரின் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர், தடயவியல் துறை என, அனைத்திற்கும் புகார் அளித்து விட்டேன்; பிரேத பரிசோதனை சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதன் பின்னணி என்னவென்பது, புரியாத புதிராக உள்ளது,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty Re: டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை இது ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty Re: டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by கேசவன் Thu Dec 29, 2011 2:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  1357389டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  59010615டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Images3ijfடாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty Re: டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:31 pm

அட கொடுமையே அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty Re: டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by ஜாஹீதாபானு Thu Dec 29, 2011 2:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள்  செய்யும்  பிரேத பரிசோதனை  Empty Re: டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி
» உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார்
» இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளார்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
» மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை
» பூஜை செய்யும் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum