ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Go down

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது Empty முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Post by nhchola Mon Dec 26, 2011 11:50 am

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

வைகோ பேச்சு: பல்லாயிரக்கணக்கிலே திரண்டிருக்கிறோம். இது, எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.

திருமுருகன் கேட்டுக்கொண்டதன்படி, முல்லைப் பெரியாறுக்காக தலைநகரிலும் குரல் எழ வேண்டும் என்று கூறினார். அப்போது, முல்லைப் பெரியாறு போராட்டக் களத்தில் இருந்தேன்.

அதைத் தொடர்ந்து, இயக்கத்தின் அடையாளத்தை கட்சிக் கொடிகளைத் தவிர்த்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். காரணம், திருமுருகன் போன்ற இளைஞர்களின் உணர்வுதான். இதற்கு நல்ல முன்னுதாரணம், மூவரின் உயிர் காக்க நிகழ்த்திய மெழுகுவர்த்தி ஏந்தல் போராட்டம்.

இப்போது கூடியிருப்பதற்கான நோக்கம், தமிழர்களுக்கானது. இந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் இங்கே கூடியிருக்கிறோம்.

இணையதளத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான இளம் தம்பிமார்கள் இங்கு மக்களுக்காக வந்திருப்பது பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
தமிழ் இளையத் தலைமுறையினர் மீது நம்பிக்கை வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நெஞ்சில் ஆழத்தில் இருந்து உரைகளைத் தந்திருக்கிறார்கள். தெற்குச் சீமையில் மண்வாசனையைப் படைபாக்க தந்திருக்கும் பாரதிராஜா, இயக்குனர் கெளதமன், தங்கர்பச்சான், கவிஞர் தாமரை,

'அணை உடைந்தால் இந்தியா உடையும்' என இளைஞர்கள் கோஷம் எழுப்பினர். நான் சொல்லிக்கொள்கிறேன்.. அணை உடையாது; இந்தியா உடையும்.. அணையை நெருங்க விடமாட்டோம்.

முத்துக்குமார் தன்னுயிரை மாய்த்த போது, புரட்சி வெடிக்காத சூழல் அப்போது ஏற்பட்டது. இப்போது அப்படி நடக்காது. தமிழகம் எழுச்சி கொண்டிருக்கிறது.

அணையில் ஒரு சிறு சேதம் ஏற்பட்டால், குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால், இளைஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

உங்கள் கேரள முதல்வரிடம் சொல்லுங்கள்... அணையை உடைக்கும் முடிவை கைவிட்டுவிட்டோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.

கேரளாவில் காங்கிரஸ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அங்கு காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

தமிழகம் பொறுமை காக்கிறது. நிபுணர் குழு ஆய்வு செய்வதற்கு முன்பே கேரள அரசு, ஆனந்த் கமிட்டியிடம் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறது. அதன் 36-வது பக்கத்தில், இது கேரளத்துக்குள்ளே ஓடும் நதி. எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீருக்கான் உரிமையே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது உண்மையா?

பிரிட்டன் காலத்தில் போடப்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம் செல்லாது என்றால், இந்தியா போட்ட எந்தச் சட்டமும் செல்லாது.

கடிதங்களை அனுப்பி ஏமாற்றினார், ஒரு முதல்வர். எனவே, இப்போது கடிதம் எழுதி பிரயோஜனம் இல்லை. களத்தில் இறங்க வேண்டும்.

அணையை உடைக்க விடமாட்டோம். மத்திய போலீஸ் வராவிட்டால் என்ன? மிலிட்டரி வந்தால் என்ன? தென் தமிழ்நாடு மட்டுமல்ல.. சென்னை உள்பட முழு தமிழகமே திரண்டுவிட்டது.

அணையை உடைக்க விடக்கூடாது என்று ஒரு பெண்மணி சொன்னார். அப்போதுதான் முழு நிம்மதி பிறந்தது.

நியாயமாக போராடி கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க வேண்டும்.

மத்திய போலீஸ், மிலிட்டரி வராவிட்டால் என்ன? தென் தமிழ்நாடு மட்டுமல்ல.. சென்னை உள்பட தமிழகமே திரண்டுவிட்டது.

கர்நாடகம், ஆந்திரா கூட நம் தயவில்லாமல் சிறுது காலம் இருக்கலாம். ஆனால், நாம் இல்லாவிட்டால், கேரளாவில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. நம்மை பகைத்தால் அவர்களால் வாழ முடியாது.

தமிழகத்தில் மலையாளிகள் தாக்கப்படமாட்டார்கள். தமிழர்கள் ஒருபோதும் நிராயுதபாணிகளை தாக்கியதில்லை.

தொடர்ந்து தவறு செய்த நினைத்தால், மக்களே தயாராகி முற்றுகை போராட்டம் மேற்கொள்வர். அதன் மூலம், கேரளாவுக்கு நிரந்தரப் பொருளாதார தடை ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டு, புதிய அணை என்ற முடிவை கேரள அரசு கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலும் அதிருப்தி இருக்கிறது. கேரள போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என்கிறது உச்ச நீதிமன்றம். என்ன ஆகும்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதித்த்திருக்கிறது, கேரள அரசு. அதற்குப் பிறகும் மத்திய படை பாதுகாப்பு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்வதில் எங்கே நீதி இருக்கிறது.

சென்னையில் இருந்து டெல்லி திரும்புவதற்குள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வகை செய்யும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கடற்கரையில், முல்லைப் பெரியாறு உரிமை காக்க திருமுருகன் ஏற்பாடு செய்ய இந்த நிகழ்ச்சிக்கு நன்றி.

முல்லைப் பெரியாறு அணையை காப்போம்; கேரள சதிதிட்டத்தை உடைப்போம்.
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது Empty Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Post by nhchola Mon Dec 26, 2011 12:01 pm

இயக்குனர் பாரதிராஜா: என் இனிய 'பாவப்பட்ட' தமிழ் மக்களே..! இந்த முல்லைப் பெரியாறு போராட்டத்துக்கு வித்திட்டவன், தமிழன் வைகோ.

தமிழனுக்கு எங்கே இடர் என்றாலும் சரி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முதலில் நிற்பவர் வைகோ. வைகோ என்பதற்கு அடையாளம் தமிழன்.

தமிழன் அதிகமாக இருந்த பகுதிகள் பலவும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இடுக்கியும் ஒன்று. தமிழனின் பெருந்தன்மையால் பலவற்றை இழந்துள்ளோம். அப்படி இழந்ததைப் பெற வேண்டும்.

தேசியம், திராவிடம் ஆகிய இரண்டு சொற்கள் தான் தமிழனை கண்ணீர்விட வைத்தது. தமிழ் தேசியம் தான் தீர்வு.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழன் ஒன்றுபட்டு போராடாவிட்டால், இனி தமிழனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது.

தமிழ்நாடு பாலைவனமாக விடக் கூடாது. இதைப் பற்றி, தமிழர்கள் யோசிக்க வேண்டும். இது, 5 மாவட்ட பிரச்னை கிடையாது. உங்கள் பிரச்னை. இது ஒரு கேன்சர். அங்கு அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால், இங்கும் பாதிக்கும். வறட்சியால் அங்கிருந்து இடம்பெயரும் அவலம் ஏற்படும்.

தன்மானத்தை இழக்காமல், ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல்பட வேண்டும். இனியும் ஓய்ந்திருக்கக் கூடாது.

இங்கு, தென்னிந்திய நடிகர் சங்கம்இருக்கிறது. தமிழ்நாடு நடிகர் சங்கம் எங்கிருக்கிறது? தமிழ்நாடு நடிகர் சங்கமாக இருந்தால், அவர்கள் இன்று குரல் கொடுத்திருப்பார்கள் அல்லவா? நீங்கள் தான் கேட்க வேண்டும்.

நல்ல சந்தர்பத்தில் ஒரு பொறி கிளம்பியிருக்கிறது. நம் இனத்தைக் காக்க வேண்டும். நம் தமிழர்களைக் காக்க வேண்டும்.
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது Empty Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Post by nhchola Mon Dec 26, 2011 12:02 pm

ஓவியர் வீர சந்தானம் : நாடுகள் விட்டு நாடுகள் சேரும் தண்ணீரால் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழனுக்கு என்று தனியாக ஒரு நாடு கிடையாது. எனவே, அவனுக்கு தண்ணீர் கிடையாது. நாம் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.

இயக்குனர் தங்கர்பச்சான் : நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், கேரள அரசு மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் பிறகும், அணையை எப்படியெல்லாம் உடைக்கப் போகிறோம் என படம் போட்டுப் பேசுகிறார்.

இயக்குனர் தங்கர்பச்சான் : கேரள முதல்வர் உம்மண் சாண்டியும், எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தமும் ஒருமணி நேரம் சந்தித்துப் பேசி முடிவு செய்கிறார்கள். அந்த நிலை தமிழகத் தலைவர்களிடம் ஏனில்லை. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஏன் ஒன்றாக சென்று டெல்லியில் நீதிகேட்பதில்லை. தனித்தனியாக போராடினால் போதுமா?

இனிமேலாவது எங்களிடம் வாக்கு வாங்கும் அரசியல் கட்சிகள், தங்கள் சொந்த நலனையும்,. சொந்தப் பகையையும் மறந்து, தமிழர்களாகிய எங்களுக்காக ஒரே மேடையில் குரல் கொடுக்க வேண்டும்.


கவிஞர் அறிவுமதி: தமிழர்கள் தங்கள் கலாசாரத்தில், வீட்டுக்கு வருவோர் தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் மக்கள். ஆனால், கேரளத்தவர்களே.. தமிழர்கள் தண்ணீர் கேட்டால், சிறுநீர் தருகிறீர்களே?

நமது இளைஞர்கள் இன்று ஒன்றுகூடியிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முள்ளிவாய்க்காலில் தூங்கிய தமிழனை முல்லைப் பெரியாறு மூலம் எழ வைத்த மத்திய அரசுக்கு நன்றி.

எதிர்க்கத் துணிந்தால், தமிழ் மீளும்; எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.

*

வேல்முருகன்: இன்றைய தினம் நாம் ஒன்றுகூடுவது, எதற்காக என்று இந்திய தலைமைக் கூடம் காத்துக்கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு நமது மண்ணில், நமக்காக பென்னி குக் போராடி கட்டினார்.

அணையை கேரளா இடிக்கப் பார்க்கிறது. அதைக் கண்ட நமது 5 மாவட்ட மக்கள், எவரது தூண்டுதலும் இன்றி, தன்னெழுச்சி பெற்று லட்சக்கணக்கில் புறப்பட்டது.

பென்னிக் குக் நன்கொடை கேட்டது, கேரளத்தவரிடம் அல்ல; தமிழர்களிடம்.

அணை உடையாது; உடைந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கேரள அரசு வழக்கறிஞர் ஒருவர் நேர்மையாகச் சொன்னார்.

ஒரு இடைத்தேர்தலுக்காக இப்படி, தூண்டிவிடும் அவர்களுக்கு அடிபணியக் கூடாது.

இன்று கட்சிகளை கடந்து ஒருங்கிணைந்து, மக்கள் கூடியுள்ளனர். இவர்களோடு மண்ணில் உட்கார்ந்த வைகோ தான் தலைவர்!
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது Empty Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Post by nhchola Mon Dec 26, 2011 12:03 pm

கவிஞர் தாமரை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா, கர்நாடகா மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இறையாண்மைக்கு குரல் கொடுக்கிறார்கள். தமிழர்களைத் தவிர எவரும் ஒறுமைப்பாட்டை கடைபிடிப்பதில்லை.

கவிஞர் தாமரை: புதிய அணையை கட்டுவோம் என்கிறார்கள் கேரளத்தவர். முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது அவர்கள் உறுதிப்பாடு. புதிய அணையில் தண்ணீர் கொடுப்போம் என்கிறார்கள். அதைக் கேட்டு ஏமாறக் கூடாது.

மன்னராட்சி காலத்தில் இந்த மாதிரி தண்ணீர் பிரச்னை வந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் நமக்கு பிரச்னை வந்ததில்லை. ஆனால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இந்தியா ஆன பிறகு, மத்திய அரசால் ஜனநாயக ஆட்சியில் பிரச்னை எழுந்து, அதைத் தீர்க்கவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறார்கள்.

இந்தக் கூட்டம் சாதி மதம் தாண்டிய கூட்டம். ஆனால், இனம் மொழி தாண்டிய கூட்டம் அல்ல.

தமிழ்நாடு தனி நாடாக இருக்க வேண்டும். இந்தியா, இந்தியா என்று சொல்லி என்னத்த சாதிச்சோம்.

தேனியின் தன்னெழுச்சி போல் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியால் எழ வேண்டும்.


மே 17 இயக்கத்தின் திருமுருகன்: தமிழகத்தின் மீதான அடக்குமுறையை அகற்ற கூடியுள்ள மக்களுக்கு மே 17 சார்பில் நன்றி

தமிழகத் தலைவர் வைகோ, இயக்குனர் பாரதிராஜாவால் தான் இது சாத்தியம் ஆனது. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் இளைஞர்களும் முக்கியக் காரணம். #marina4mullai

தனது குழந்தையின் உடல்நலக் குறைபாட்டையும் கருத்தில் கொள்ளாமல் வந்துள்ளார் இயக்குனர் கெளதமன்.

மே 17 இயக்கம், இலங்கையில் தமிழன அழிப்பு மேற்கொண்டதை, உலகுக்கு உணர்த்த தொடங்கப்பட்டது. தமிழக மீனவர்கள் படுகொலை, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் போராட்டம், முல்லைப் பெரியாறு... இப்படி தமிழர்களின் பிரச்னைக்காக ஒன்று கூடுவதற்கே செயல்பட்டு வருகிறோம்.

கேரளாவில் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர். அங்கு மலையாள பயங்கரவாதம் நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறில் நாம் உரிமையை இழந்தால், மற்ற தண்ணீர் பிரச்னையையும் தீர்க்க முடியாமல் போகும்.
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது Empty Re: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே ஒன்று கூடல் நிகழ்வு மிகசிறப்பாக நடந்து முடிந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» மெரினா கடற்கரையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum