ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் தொந்தரவு

3 posters

Go down

செல்போன் தொந்தரவு  Empty செல்போன் தொந்தரவு

Post by சிவா Wed Dec 21, 2011 11:06 am

இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக செல்போன்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை 90 கோடியை நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் நிலை உருவாகியுள்ளது. தகவல் பரிமாற்றத்தில் மின்னலையும் மிஞ்சும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கிறது என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக்கொண்டாலும், தவிர்க்கக்கூடிய குறைபாடுகளும் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ நிச்சயமாக முடியாது. செல்போன்களை அதிகம் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு, குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. செல்போனில் தேவைக்கு மட்டும் பேசிவிட்டு, கூடுமானவரையில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதை ஊக்குவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் பல நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன என்ற செய்தியும் வெளிவருகிறது.

இதுமட்டுமல்லாமல், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் செல்போனில் பேசுவது மட்டுமல்லாமல், அதில் இருந்து வரும் `ரிங்டோனும்' இம்சையாக இருக்கிறது. ரெயிலில் இரவு நேரத்தில் தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களுக்கு, இந்த அனுபவம் இருக்கும். நடுநிசியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, பக்கத்து `பெர்த்'தில் இருப்பவரின் செல்போனில் இருந்து `தூங்காதே தம்பி, தூங்காதே...' என்று `ரிங்டோன்' ஒலிக்கும். அதன்பிறகு, அவர் போனை எடுத்து உரத்த குரலில் பேசி முடிப்பதற்குள் எல்லோருடைய தூக்கமும் போய், சிவராத்திரி ஆகிவிடும். இதுபோல, சாவு வீட்டில் மங்களகரமான பாடல்களும், திருமண வீட்டில் துக்கமான பாடல்களும் ரிங்டோனாக ஒலித்து அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். இதனால்தான் முக்கிய கருத்தரங்குகள், கூட்டங்களில் செல்போனை கொண்டுவராதீர்கள், செல்போனை `ஆப்' செய்துவிடுங்கள் என்பதை நிபந்தனையாக முதலிலேயே தெரிவித்துவிடுகிறார்கள். இந்த செல்போன் சத்தம் கூட்டத்தின் முக்கியத்துவத்துக்கே தடைக்கல் ஆகிவிடும்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஒரு விசித்திரமான வழக்கு, அதுவும் செல்போன் தொடர்புடைய ஒரு வழக்கு நீதியரசர் கே.சந்துரு முன்னிலையில் வந்தது. வருவாய் கோட்ட அதிகாரியான துர்கா மூர்த்தி கோர்ட்டு ஹாலுக்குள் தன் செல்போனை பயன்படுத்தினார், இதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் வழக்கு. துர்கா மூர்த்தியும், தான் செல்போன் பயன்படுத்தியதை மறுக்கவில்லை. பார்வையாளர் மாடத்தில் இருந்த நான், எனது செல்போனை `சைலண்ட் மோடில்'தான் வைத்திருந்தேன். அதாவது சத்தம் கேட்காத நிலையில்தான் வைத்திருந்தேன். அந்த நேரத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் இருந்து போன் வந்ததால், போனை எடுத்து மிக மெல்லிய குரலில், யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பேசினேன் என்று பதில் அளித்துள்ளார். நேர்மையான அதிகாரி. நான் பேசவில்லை என்று சொல்லாமல் பேசினேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டார். நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு என்றாலே நிச்சயமாக அரசியல் சட்டத்தின் வரைமுறைகள், மற்றும் தொடர்புடைய சட்டங்களின் எல்லைக்குள்ளேயே அலசி ஆராய்ந்து இருக்கும். நமது சட்டத்தின் பொருள் இதுதானா? என்று சட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அளவில், அவர் தீர்ப்புகள் இருக்கும்.

இந்த வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு, இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது. கோர்ட்டுக்குள் செல்போனை பயன்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க மறுத்துள்ள நீதியரசர், அதற்கான காரணத்தையும் தெளிவாக சொல்லிவிட்டார். சட்டத்தின்கீழ் தடை செய்யப்படாத ஒரு செயலுக்காக ஒருவரைத் தண்டிப்பது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். ஆக, நமது உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லாமல் சொல்லிவிட்டார். பல இடங்களில் செல்போனை பயன்படுத்தாதீர்கள், செல்போனை கொண்டு வரக்கூடாது என்று போர்டு போட்டிருந்தாலும், அது சட்டமாகவோ, அதற்கான விதிமுறைகளோ இல்லை. நவீன யுகத்தில் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எல்லா இடத்திலும் செல்போனைக் கொண்டுவரக்கூடாது என்றால், அது கண்டு பிடிக்கப்பட்டதின் நோக்கமே அடிபட்டுப்போய்விடும். எனவே பொதுஇடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கும், ரிங்டோன் நிர்ணயிப்பதற்கும் சில விதிமுறைகளையோ, அல்லது சட்டமோ வகுக்க மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரின் மனதிலும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் யாரும் சொல்லவில்லை. நீதியரசர் வழியைக் காட்டிவிட்டார்.

தினதந்தி


செல்போன் தொந்தரவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செல்போன் தொந்தரவு  Empty Re: செல்போன் தொந்தரவு

Post by ரேவதி Wed Dec 21, 2011 12:04 pm

சிவா wrote:
இதுமட்டுமல்லாமல், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் செல்போனில் பேசுவது மட்டுமல்லாமல், அதில் இருந்து வரும் `ரிங்டோனும்' இம்சையாக இருக்கிறது. ரெயிலில் இரவு நேரத்தில் தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களுக்கு, இந்த அனுபவம் இருக்கும். நடுநிசியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, பக்கத்து `பெர்த்'தில் இருப்பவரின் செல்போனில் இருந்து `தூங்காதே தம்பி, தூங்காதே...' என்று `ரிங்டோன்' ஒலிக்கும். அதன்பிறகு, அவர் போனை எடுத்து உரத்த குரலில் பேசி முடிப்பதற்குள் எல்லோருடைய தூக்கமும் போய், சிவராத்திரி ஆகிவிடும். இதுபோல, சாவு வீட்டில் மங்களகரமான பாடல்களும், திருமண வீட்டில் துக்கமான பாடல்களும் ரிங்டோனாக ஒலித்து அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும்.

சோகம் சோகம் சோகம் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செல்போன் தொந்தரவு  Empty Re: செல்போன் தொந்தரவு

Post by ஜாஹீதாபானு Wed Dec 21, 2011 12:43 pm

என்ன செய்தாலும் விஞ்ஞான முன்னேற்றத்தில் சில குறை நிறைகள் இருக்கத் தான் செய்யும் ஒண்ணும் பண்ணமுடியாது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செல்போன் தொந்தரவு  Empty Re: செல்போன் தொந்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum