Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிஜிட்டல் களவாணிகள்!
+4
நேரு
வின்சீலன்
கோவிந்தராஜ்
ரேவதி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டிஜிட்டல் களவாணிகள்!
இப்போ தெரிகிறதா இவர்கள் யாரென்று?
பேருந்து, தொடர்வண்டி கூட்ட நெரிசலிலோ அல்ல பொது இடங்களில் அலைமோதும்
கூட்ட நெரிசலிலோ பர்ஸில் பணம் வைத்தால் 'பிக்பாக்கெட்' அடித்துவிடுவார்கள்
என பர்ஸில் நூறோ, ஐநூறோ வைத்துக்கொண்டு பணம் தேவைப்படும் பொழுது
ஏ.டி.எம்.பணப்பரிவர்த்தனை சேவை மையங்களை பயன்படுத்துபவர்களே அதிகம்.
படித்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஏ.டி.எம் சேவையை
பயன்படுத்துகின்றனர் என்றால் அதை மறுக்கவே இயலாது.
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மாற அச்சுழற்சியில் நாமும்
பயணப்படுவது தவறல்ல. ஆனால் ஒரு சேவை தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த
நாம், அதை பாதுக்காப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்ற அறிய
முற்படுவதில்லை. இதுவே டிஜிட்டல் களவாணிகளுக்கு சாதகமாக மாறி நமக்கு
பாதகமாக ஆகிவிடுகிறது. இது போன்று 'ஏ.டி.எம்' சேவை மட்டுமல்லாது அனைத்து
பணப்பரிவர்த்தனை தொழில்நுட்ப சேவைகளை எப்படி பாதுக்காப்பாக பயன்படுத்த
வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் நாம்
நம் பணத்தை காத்துக் கொள்ள முடியும்.
ஏ.டி.எம்
சேவை இயந்திரத்தை உடைத்து பணம் திருடுவது, ஆளில்லாத ஏ.டி.எம்.களில் தங்கள்
கைவரிசையை காட்டுவது, இரவு நேரம் பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு அவர்களை
மிரட்டி பணம் பறிப்பது, இந்த திருட்டு முறை எல்லாம் மலையேறிவிட்டது.
இப்போது 'டிஜிட்டல் களவாணிகள்'பயன்படுத்தும் டிஜிட்டல் திருட்டு முறைகள்
லெபானிஸ் லூப் ( LEBANESE LOOP ),கார்ட் ஸ்கிம்மிங் ( CARD SKIMMING ),
பிசிங் ( PHISHING ) போன்றவை தான்.
'லெபானிஸ் லூப்' என்ற முறையில் நீங்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில்
'ஏ.டி.எம்'அட்டையை சொருகும் இடத்தில் ஒரு கருவியை வைத்து விடுவார்கள்,
வழக்கம் போல் நீங்கள் பணமெடுக்க 'ரகசிய குறியீட்டு எண்ணை (பாஸ்வோர்ட்)
அடித்து இவ்வளவு பணம் தேவை என்றால் பணமும் வராது,அட்டையும் வராது. உடனே
படபடப்பாகி என்ன செய்யலாம் என்று விழித்து கொண்டுள்ள தருணத்தில் முன்பின்
அடையாளம் தெரியாதவன் உதவி செய்வதை போல் வந்து பேச்சுக்கொடுத்து உங்கள்
'ரகசிய குறியீட்டு எண்ணை'அறிந்துக்கொண்டு நீங்கள் மன குழப்பத்துடன்
'ஏ.டி.எம்'மையத்திலிருந்து கிளம்பியதும்,அந்தக் கருவியை எடுத்துவிட்டு
மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவான் உங்களுக்கு உதவ வந்த டிஜிட்டல்
களவாணி.
'கார்ட் ஸ்கிம்மிங்'முறையில் ஒரு போலி 'ஏ.டி.எம்'இயந்திரத்தை
நிறுவிவிட்டு அதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு,ரகசிய
குறியீட்டு எண்,ஏ.டி.எம்.அட்டையின் எண் என அனைத்தையும் தெரிந்து
வைத்துக்கொண்ட 'இணைய வழி (ஆன்லைன்) பணப்பரிவர்த்தனை ' வழியிலோ அல்லது போலி
ஏ.டி.எம் அட்டையை தயாரித்து அதன் வாயிலாகவோ சுருட்டி விடுவார்கள் அதிநவீன
கள்வர்கள்.
அடுத்து குறிப்பிடும் முறை 'டிஜிட்டல் களவாணிகளின்'புதிய முறை
மட்டுமல்லாது இது இந்த திருடர்களின் 'அப்டேடெட்' திருட்டு முறை. இது
உட்கார்ந்த இடத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய
விவரங்களை உங்களிடமிருந்தே உருவும் எளிய முறை.எப்படி என்கிறீர்களா ?
வங்கியிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவது போல் இந்த திருடர்கள் மின்னஞ்சலில்
உங்கள் வங்கி கணக்கின் விவரங்களை கேட்பார்கள், நீங்கள் அதை நம்பி
விவரங்களைக் கொடுத்தால் அவ்வளவுதான். எளிதாக வெற்றி பெறும் அவர்கள் களவு
வேலை.
அடுத்தது திருட்டு முறையெல்லாம் இல்லை 'ஆன்லைன் பேங்கிங்' என்ற
பணப்பரிவர்த்தனை சேவை வழியாகவே ஆட்டைய போட்டுவிடுவார்கள். அதுவும் உங்கள்
தவறாலே நிகழக்கூடியது. இந்த சேவையை 'பிரௌசிங் சென்டரில்' நீங்கள்
பயன்படுத்தினால் 'கீ லாக்கர்' என்ற மென்பொருள் மூலம் அட்டை எண், ரகசிய
குறியீட்டு எண்களை எடுத்து விடுவார்கள் இல்லையெனில் ரகசிய குறியீட்டு
எண்களை நினைவில் வைத்துக்கொள்ள அந்த இணைய உருளையில் (இன்டர்நெட் பிரௌசர்)
அமைப்புகளை உங்களுக்கு தெரியாதவாறு மாற்றி வைத்திருப்பார்கள்.
இப்போ புரிகிறதா நீங்கள் செய்யும் தவறு என்னவென்று ?
இந்த டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்புவது தான் எப்படி? இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் :
பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆளில்லாத அநாந்தர ஏ.டி.எம்-மை
பயன்படுத்துவதை தவிருங்கள்.பெரும்பாலும் உங்கள் ஏ.டி.எம் அட்டையை
மற்றவர்களிடம் கொடுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்க பாருங்கள்.
விளையாட்டாக நண்பர்களிடமோ அல்லது அலைபேசியிலோ ரகசிய குறியீட்டு எண்களை
பொது இடங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடன் பயணிப்பவர்கள் / உங்கள்
அருகில் இருப்பவர்கள் கூட டிஜிட்டல் களவாணிகளாக இருக்கக்கூடும்.
ஏ.டி.எம்.இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு அட்டை மாட்டிக்
கொண்டால் விட்டுவிட்டு வேற அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று
கிளம்பிவிடாதீர்கள். அங்குள்ள ஏ.டி.எம் காவலாளியை அணுகி உடனுக்குடன்
வங்கிக்கு இப்பிரச்னையை தெரிவித்து அந்த அட்டையை முடக்கச் சொல்லுங்கள்.
இரவு நேரங்களில் இப்படி ஏதேனும் பிரச்னை ஏற்படுமாயின் வங்கியின் '24 மணிநேர
சேவை தொலைபேசி எண்ணுக்கு (டோல் ப்ரீ நம்பர்)'தொடர்பு கொள்ளுங்கள். இந்த
டோல் ப்ரீ தொலைபேசி எண் ஏ.டி.எம். இயந்திரத்திலேயே ஒட்டப்பட்டிருக்கும்.
நீங்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது யாராவது உங்களை பின்புறம்
வரிசையில் நிற்பதுபோல் நோட்டமிட்டால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை ஏ.டி.எம்.யில் பதிவு செய்யும்போது முகம்
தெரியாத நபர்கள் அருகில் இருப்பதை கவனத்துடன் தவிர்த்து விடுங்கள்.
அதிகமாக 'ஏ.டி.எம்'மை பயன்படுத்துபவர்கள் வாரம் ஒருமுறை ரகசிய
குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டே இருங்கள். இதனால் உங்கள் அட்டை திருடு
போனால் கூட பாதுகாக்கும் வழியுண்டு. உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரகிசய குறியீட்டு எண்ணை அமைக்கையில் வங்கி அறிவுறைத்தது போல்
'நம்பர்ஸ்,சிம்பல்ஸ்,லெட்டர்ஸ்' எல்லாம் கலந்து அமையுமாறு
மாற்றிக்கொள்ளுங்கள். இது 'இணைய வங்கிசேவை( ஆன்லைன் பேங்கிங்)'
உபயோகிப்பவர்களுக்கு மிக மிக அவசியம் என்பதை உணருங்கள்.
மேலும் இது போன்று வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலும்
எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த
தெரிந்தால் மட்டும் போதாது அதையும் அதன் சூட்சமைங்களையும் அறிந்தால்
மட்டுமே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்ப முடியும். நாம்
எதார்த்தமாக செய்யும் தவறே அவர்களுக்கு வரம் ஆகிவிடுக்கூடும்.
ஜாக்கிரதையாக இருந்தால்.. உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.. உழைத்த பணம் உங்களிடத்தில்.!
நன்றி - விகடன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
நல்ல ட்ரைனிங் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
ரேவதி தங்கச்சி இது மெய்யாலுமே ஒரு நல்ல விஷயம், இந்த திருட்டை தவிர்க்க நான் எப்போதுமே செக்யூரிட்டி இருக்கும் ஏடிஎம் மட்டுமே செல்வேன், எனக்கு தெரிந்து எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ ஏடிஎம்களில் 24/7 செக்யூரிட்டி இருக்கிறார்கள்.
ஒரு முறை டிஎம்பி ஏடிஎம் போயிருந்தேன், அங்கு செக்யூரிட்டி கிடயாது, நான் பணம் எடுக்கும் போதே வேறு ஒருவன் உள்ளேயே வந்து நின்றான், என் இங்கேயே நிற்கிறாய் என்றால் வெளியில் மிகவும் வெயிலாக உள்ளது எனவே இங்கே நிற்கிறேன் என்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகலயும் கலந்து தீட்டிய பிறகு அவன் வெளியே சென்றான்.
எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்
ஒரு முறை டிஎம்பி ஏடிஎம் போயிருந்தேன், அங்கு செக்யூரிட்டி கிடயாது, நான் பணம் எடுக்கும் போதே வேறு ஒருவன் உள்ளேயே வந்து நின்றான், என் இங்கேயே நிற்கிறாய் என்றால் வெளியில் மிகவும் வெயிலாக உள்ளது எனவே இங்கே நிற்கிறேன் என்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகலயும் கலந்து தீட்டிய பிறகு அவன் வெளியே சென்றான்.
எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
வின்சீலன் wrote:ரேவதி தங்கச்சி இது மெய்யாலுமே ஒரு நல்ல விஷயம், இந்த திருட்டை தவிர்க்க நான் எப்போதுமே செக்யூரிட்டி இருக்கும் ஏடிஎம் மட்டுமே செல்வேன், எனக்கு தெரிந்து எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ ஏடிஎம்களில் 24/7 செக்யூரிட்டி இருக்கிறார்கள்.
ஒரு முறை டிஎம்பி ஏடிஎம் போயிருந்தேன், அங்கு செக்யூரிட்டி கிடயாது, நான் பணம் எடுக்கும் போதே வேறு ஒருவன் உள்ளேயே வந்து நின்றான், என் இங்கேயே நிற்கிறாய் என்றால் வெளியில் மிகவும் வெயிலாக உள்ளது எனவே இங்கே நிற்கிறேன் என்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகலயும் கலந்து தீட்டிய பிறகு அவன் வெளியே சென்றான்.
எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்
கேர்ஃபுள்ள இருக்கணும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
இந்த கட்டுரையினை புதிய தலைமுறையில் படித்தேன். விகடனிலுமா
வந்திருக்கிறது.
இணையம் என்பது உலகத்தை திறந்த வீடாக மாற்றியிருக்கிறது. ( புதிய தலைமுறை )
பதிவிற்கு நன்றி !
வந்திருக்கிறது.
இணையம் என்பது உலகத்தை திறந்த வீடாக மாற்றியிருக்கிறது. ( புதிய தலைமுறை )
பதிவிற்கு நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
ஜாஹீதாபானு wrote:உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு
நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
நான் பணம் எடுக்கும் போது வரும் அப்போ பண்ணுறேன்ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு
நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிஜிட்டல் களவாணிகள்!
ஜாஹீதாபானு wrote:நான் பணம் எடுக்கும் போது வரும் அப்போ பண்ணுறேன்ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு
நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க
அப்படியே கார்டையும், பாஸ் வோர்டையும் கௌரியர் அனுபிடுங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|