ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி

2 posters

Go down

உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி  Empty உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி

Post by சிவா Sun Dec 11, 2011 7:37 am

ராகுல் காந்தி மீது பகிரங்க புகார்: இன்று உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே பரபரப்பு பேட்டி உயிர் தியாகம் செய்ய தயார் என்கிறார்

உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி  Anna

ராலேகான் சித்தி, டிச.11- வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றா விட்டால் பாராளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித்தார். லோக்பால் சட்டத்தில் வலுவற்றதாக மாற்றுவதன் பின்னணியில் ராகுல் காந்தி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை

ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரை தண்டிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே போராடி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு லோக்பால் மசோதாவை மத்திய அரசு அனுப்பியது.

இந்த நிலையில், நிலைக்குழுவின் பரிந்துரை அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், `லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், எம்.பி., எம்.எல்.ஏ., நீதிபதிகள், சி.பி.ஐ., கீழ்மட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரை சேர்க்க வேண்டாம்' என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதனால், அன்னா ஹசாரே கடும் கோபமடைந்துள்ளார்.

அடையாள உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அதற்காக, மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மாலையில் டெல்லி சென்றடைந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

ராகுல் மீது புகார்

லோக்பால் சட்ட மசோதா விஷயத்தில் ஒட்டு மொத்த நாட்டையும் ஏமாற்றி விட்டனர். நம்பிக்கை துரோகம் நடந்துள்ளது. லோக்பால் சட்ட விஷயத்தில் குடிமக்களின் தனி உரிமை, கீழ்மட்ட அதிகாரிகளை சேர்ப்பது, மாநிலங்களில் லோக் அயுக்தா கோர்ட் அமைப்பது ஆகிய மூன்று விஷயங்களையும் சேர்ப்பதாக எழுத்துப் பூர்வமாக பிரதமர் எங்களிடம் உறுதி அளித்தார். அவருடைய கடிதம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. பிரதமரை விட நிலைக் குழுவின் தலைவர் சிங்வியின் பதவி உயர்ந்ததா?

இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். பிரதமரை விட உயர்ந்தவர் யார்? இதன் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். வேறு யாரால் பிரதமருக்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்ள முடியும்? அவர்களுடைய உள்நோக்கம் நல்லதல்ல. நிலைக் குழு அறிக்கையை முற்றிலுமாக நாங்கள் நிராகரிக்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம்

குடிமக்களின் தனி உரிமையை சேர்ப்பது, லோக் அயுக்தா போன்றவற்றை சேர்க்காமல் இருக்குமாறு ராகுல் காந்தி தான் காங்கிரஸ் எம்.பி. அபிசேக் சிங்வி தலைமையிலான நிலைக் குழுவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். நாளை (இன்று) நடத்தும் அடையாள உண்ணாவிரதத்தை தொடர்ந்து டிசம்பர் 27-ந் தேதி முதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடருவோம்.

பாராளுமன்ற தேர்தல் வரை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இந்த நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி அரசு) எதற்காக பதவியில் தொடர வேண்டும் என மக்களிடம் பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

சொந்த ஊரில் பேட்டி

முன்னதாக, டெல்லி புறப்படும் முன் தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்துக்காக ஏராளமான தியாகிகள் தங்களுடைய உயிரை தியாகம் செய்தனர். ஆனால், இன்றைய தினம் வரையிலும் சுதந்திரத்தை நம்மால் அனுபவிக்க முடியவில்லை. ஊழல், இன்னமும் நம்மை சுரண்டிக்கொண்டு இருக்கிறது. எனவே, இரண்டாவது சுதந்திரப் போர் ஆரம்பமாகி விட்டது. ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த நீண்ட நெடிய போராட்டம் ஓயாது.

இந்த போராட்டத்துக்காக எனது உயிரையும் துறக்க தயாராக இருக்கிறேன். அவர்களின் (மத்திய அரசு) அறிவு கண்ணை திறப்பது நம்முடைய கடமை. இப்போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, 21-ந் தேதியுடன் முடியும் கூட்டத் தொடரை நீடிக்கலாம். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 27-ந் தேதிக்கு பிறகு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குவேன்.

பெரும்பான்மை இல்லை

அதிகாரம் மற்றும் பண வெறியில் மத்திய அரசு உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது. 30 பேர் கொண்ட அந்த குழுவில் 12 பேர் மட்டுமே பரிந்துரை அறிக்கையை ஆதரித்துள்ளனர். 16 பேர் எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத இந்த அறிக்கையானது, ஊழலை ஒழிக்க உதவாது.

சட்ட விரோதமான வழிகளிலும், ஊழல் மூலமாகவும் பணம் சம்பாதிக்கும் ஊழல் அரசியல் தலைவர்கள் நிறைந்த அரசாக மத்திய அரசு உள்ளது. அவர்களை பாதுகாக்க காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சிக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

தினதந்தி


உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி  Empty Re: உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி

Post by ராஜா Sun Dec 11, 2011 10:43 am

உயிர்த்தியாகம் செய்தால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் உங்களை மறந்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
»  அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி
» அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum