Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
4 posters
Page 1 of 1
தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
தமிழகம் - கேரளா எல்லையில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. எல்லைப்பகுதியில் மோதலை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், கேரள மாநிலம், குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
2-வது நாளாக மறியல்
தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தேனி மாவட்டம் கூடலூரில் குமுளி நெடுஞ்சாலையில் நேற்றும் சாலை மறியல் நடந்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து குமுளி மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு 2-வது நாளாக போக்குவரத்து முடங்கியது.
சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் மட்டும் மலைச்சாலை வழியாக கூடலூருக்கு வந்தன. அந்த வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. அந்த வாகனங்களில் வந்த பக்தர்கள், வண்டிப்பெரியாறு அருகே தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
போக்குவரத்து முடக்கம்
அதைத் தொடர்ந்து கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கூடலூரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் மறியல் காரணமாக தமிழக எல்லையில் கூடலூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூடலூருக்கு வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தேனி மாவட்ட எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு சாலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. கேரளாவிற்குச் செல்லும் மற்றொரு மலைச்சாலையான போடிமெட்டு பாதையில் நேற்று முன்தினம் இரவு முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தேனி மற்றும் போடி பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் 2 பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் கேரள எல்லைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கம்பத்தில் கடை அடைப்பு
குமுளியில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இரவில் கம்பத்தில் கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தாக்குதல் நடந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில், நேற்று 2-வது நாளாக கம்பத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது. கம்பம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டியில் கேரள லாரிக்கு நேற்று முன்தினம் இரவில் தீ வைக்கப்பட்டது.
நாராயணதேவன்பட்டியில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு ஜீப் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கம்பம் மெட்டு சாலையில் 150-க்கு மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று கேரள அரசைக் கண்டித்து கோஷங் களை எழுப்பினார்கள். பகல் 12 மணி அளவில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
பதற்றம் நீடிப்பு
இந்த போராட்டங்களினால் கம்பம் நகரில் பதற்றம் நீடிப்பதுடன் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கம்பம் மெட்டுச்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
கேரளாவில் சிறை பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட ஏலத்தோட்ட பெண் தொழிலாளர்கள், கேரள மாநிலத்தவர்கள் தங்களை கடுமையாக நடத்தியதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் ஏராளமான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த கேரள பதிவு எண் கொண்ட காரும், தனியார் மண்புழுக்கூடமும் தீவைத்து எரிக்கப்பட்டன.
நடந்து சென்ற அய்யப்ப பக்தர்கள்
குமுளியில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் பயணிகளை கூடலூர் வரை ஏற்றிச்செல்ல போலீஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு சில அய்யப்ப பக்தர்களும் கூடலூரில் இருந்து நடந்தே குமுளிக்குச் சென்றனர்.
இதற்கிடையில் கூடலூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று (புதன் கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு அறிவித்து உள்ளது.
மாற்று வழியில் போக்குவரத்து
கம்பம், லோயர் கேம்ப், கூடலூர் மற்றும் குமுளியில் பதற்ற நிலை நீடிப்பதால், கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுரை வழங்கினார்கள். அவசர வேலையாக செல்பவர்கள் நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கோவை அருகில் உள்ள பாலக்காடு வழியாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர் இ.தேவதாசன் ஆகியோர் நேற்று டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசி எல்லைப் பகுதி நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்.
கோவை பக்தர்கள் பஸ் மீது தாக்குதல்
இந்தநிலையில் கோவையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் நேற்று ஒரு பஸ்சில் குமுளி வழியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். குமுளி அருகே ஹோலிடே ஹோம் என்ற இடத்தில் மாலை 3.15 மணியளவில் பஸ் சென்ற போது ஜீப்பில் வந்த சிலர் அய்யப்ப பக்தர்களின் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. திடீரென நடந்த இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் செய்வதறியாது கூச்சல் போட்டனர். இதையடுத்து இந்த ஜீப்பில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து வண்டிப்பெரியார் சாலையை நோக்கி தப்பி சென்று விட்டனர்.
1,500 போலீசார் குவிப்பு
பதற்றத்தை தணிப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள 3 எல்லைச் சாலைகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகள் மற்றும் போராட்டம் தீவிரமாக நடைபெறும் லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் பகுதிகளில் போலீஸ்படை குவிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் நெல்லை, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மலைச்சாலை களையும் கண்காணிக்கும் பணியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மதுரை 6-வது பட்டாலியன்படை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், பழனி 14-வது படை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரபிதாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
26 மதுபானக்கடைகள் அடைப்பு
அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேனி மாவட்டம், உத்தம பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சின்னமனூர், கம்பம், க.புதுப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, ஓடைப் பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, காமாட்சிபுரம், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளன. நிர்வாக நடுவர்கள் மேலும் கம்பம் பகுதியில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாதவண்ணம் தடுத்து கண்காணிப்பில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் என்ன மண் மோக சிங் ஆகிவிட்டாரா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
உண்மை தல , மத்தியில் ஆளும் மலையாளிகள் நடத்தும் சதிவேலை தான் இது . அனைத்து அரசியல் வாதிகளும் இந்த விஷயத்தில் ஒன்று கூடி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களோ என்று என்ன தோன்றுகிறது இப்போதுசிவா wrote:கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
Re: தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
ராஜா wrote:உண்மை தல , மத்தியில் ஆளும் மலையாளிகள் நடத்தும் சதிவேலை தான் இது . அனைத்து அரசியல் வாதிகளும் இந்த விஷயத்தில் ஒன்று கூடி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களோ என்று என்ன தோன்றுகிறது இப்போதுசிவா wrote:கூடங்குளம் அணு உலையைத் திறக்கவிடாததால் பிரச்சனையை இப்படித் திசை திருப்பி விட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்!
நூற்றுக்கு நூறு உண்மை தல.....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Similar topics
» சாதி மோதலை உருவாக்கிய பிள்ளையார்! 3 பேர் கவலைக்கிடம்! போலீசார் குவிப்பு!
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
» அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|