ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன

Go down

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Empty தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன

Post by சிவா Fri Dec 02, 2011 8:59 am

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன First0212
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் உண்ணாவிரதம், உறுதிமொழி ஏற்பு போன்ற போராட்டங்களை நடத்தினார்கள்.

அன்னிய முதலீடு

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில்லரை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்திரபிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி உள்பட காங்கிரஸ் ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடையடைப்பு போராட்டம்

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதின் மூலம் வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், 50 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய வணிக வளாகங்களை அமைப்பார்கள். இங்கு குண்டூசி முதல் ஜவுளி, அரிசி, மளிகை பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களையும் வாங்க முடியும்.

இந்த வணிக வளாகங்களில் 6 மாதங்களுக்கு எல்லா வகையான பொருட்களும் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இதன் பின்பு இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக எந்த கடைகளும் இருக்காது. இதைத் தொடர்ந்து படிப்படியாக தங்கள் இஷ்டத்திற்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வார்கள் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வால் மார்ட் போன்ற கடைகளை தொடங்குவதின் மூலம் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகளும், பெரிய வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூடும் அபாயமும், ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும் என்று வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக இந்தியா முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

15 லட்சம் கடைகள் அடைப்பு


இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நேற்று ஏராளமான சிறிய மற்றும் பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, மதுரை, சேலம், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள 20 லட்சம் கடைகளில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக வியாபாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார்.

சென்னையில் நேற்று அனைத்து பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னையின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கக்கூடிய தியாகராயநகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

ரங்கநாதன் தெருவில் உள்ள மிகப் பெரிய ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும், பாத்திரக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடை திறந்திருக்கும் என்ற நோக்கத்தில், பொருட்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதே நேரத்தில், ரங்கநாதன் தெருவில் ரோட்டோரங்களில் உள்ள கடைகளில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. சுடிதார், கைக்குட்டை, உள்ளாடைகள் ஆகியவற்றை ஏலம் போடுவது போல 150 ரூபாய், 200 ரூபாய் என்று கூவிக்கூவி வியாபாரம் செய்தனர்.

பாண்டி பஜார்

பாண்டி பஜாரில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பூக்கடை, பழக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் நடை பாதைக் கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களை சுருட்டி மூட்டையாக கட்டி வைத்துவிட்டு, போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதேபோல், உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. உஸ்மான் ரோட்டின் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ், தள்ளு வண்டியில் வைத்து பிரியாணி, சாப்பாடு போன்றவைகளின் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

கார், மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்கள் விற்பனையாகக்கூடிய புதுப்பேட்டை பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஞ்சர் போடும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

கோயம்பேடு மார்க்கெட்


கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதல் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிய லாரிகள் எதுவும் வரவில்லை. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 2,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

வடசென்னை பகுதியில், புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், ராயபுரம், திருவொற்றிïர் ஆகிய பகுதிகளில் டீக்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

டீக்கடை, ஓட்டல்கள் திறப்பு


காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே உள்ள கல்யாண சுந்தரம் சாலை ஜி.பி. ரோட்டில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தேவையான கூடுதல் உதிரிபாகங்கள் வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. இதுமட்டும் அல்லாமல், இவர்கள் கார்களை நடுரோட்டில் நிறுத்தி புதிய இருக்கைகளை பொருத்துவது, கார்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டனர்.

சென்னை பீச் ரோட்டில் உள்ள பர்மா பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோட்டில், சில கடைகள் திறந்தும், சில கடைகள் மூடப்பட்டும் இருந்தன. பாரிமுனை பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பாரிமுனை பஸ் நிலையத்தை சுற்றியுள்ள டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு வியாபாரம் சூடுபறந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை


எப்போதும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறக்கூடிய புரசைவாக்கம் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சியளித்தது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டீக்கடைகள் அடைக்கப்படும் என்று டீக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் வழக்கம்போல் நடைபெற்றது.

ரெயில், பஸ், ஆட்டோ போன்றவை வழக்கம்போல ஓடின. மருந்து கடைகள், பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

உண்ணாவிரதம்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், வெள்ளையன் தலைமையில் சென்னை காயிதேமில்லத் மணி மண்டபம் அருகே வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு, விக்கிரமராஜா தலைமையில் இந்திய வணிகம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு, ஆங்காங்கே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினதந்தி


தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum