ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

3 posters

Go down

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது Empty யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

Post by ilakkiyan Mon Nov 28, 2011 6:15 am

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி
நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு
மாணவர்கள் தமது அஞ்சலிகளை எணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர்.
சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் சுற்றி
வளைப்புக்கு மத்தியிலும் இன்று மாலை சரியாக 6.05 மணியளவில் யாழ்
பல்கலைக்கழக மாணவர் விடுதியின் தொடர் மாடியின் நான்கு பகுதிகளிலும்,
நீர்த்தாங்கியிலும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்களால்
ஈகச்சுடரேற்றி ஆராதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அங்காங்கு மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில்,
பல்கலைக்கழகத்தின் பிரதான சுடர் யாழ்ப்பாண நகர் பார்க்கும் படியாக 80 அடி
உயரத்தில் ஏற்றப்பட்டு இருந்ததுடன், மாணவர்கள் மௌனப்பிரார்த்தனையிலும்
ஈடுபட்டனர்.

சிறீலங்கா படையினரின் முற்கூட்டிய பாதுகாப்பு கெடுபிடிகள்,
அச்சுறுத்தல்கள் மத்தியில் நீண்ட நேரம் நின்றெரியும் கற்பூர தீபமேற்றி
மாணவர்கள் செய்து கொண்ட ஆராதனை நிச்சயம் ஈழம் விடியும் என்பதங்கான
நம்பிக்கை ஒளி எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதி மட்டுமன்றி பெண்கள் விடுதி என இரு
விடுதிகளிலும் திடீரென சுடர் விட்டெரிந்த தீபங்களை கண்டு ஆக்கிரமிப்புப்
படையினரும், புலனாய்வாளர்களும் திக்குமுக்காடி அங்கும் இங்கும்
ஓடித்திரிந்தனர்.
மாணவர்கள் தீபமேற்றி வழிபட்டு, தீபம் அணையாது
காத்திருக்கையில் பல்கலைக்குள் ஊடுருவியுள்ள சில புல்லுருவிகள் கொடுத்த
தகவலால் அங்கு விரைந்த படைப்புலனாய்வாளர்கள் மற்றும் படைத்துணைக்குழு
உறுப்பினர்கள் வாயிற் காவலர்களை தாக்கிவிட்டு, பல்கலைக்கழகத்திற்குள்
அத்துமீறி உள்நுளைந்திருக்கின்றனர்.

6.05 முதல் சுவாலைவிட்டெரிந்த அக்கிச் சுடர்களை அணைக்க பல நிமிடங்கள்
பிடித்ததாகவும், இதனால் சீற்றமுற்ற அவர்கள் மாணவர்களின் விடுதியினுள்
தரித்து விடப்பட்டிருந்த ஈருறுளிகள் மற்றும் உந்துருளிகளை சேதப்படுத்த
முயற்சித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் பிறிதொரு இடத்தில் வெறொரு மாணவர் குழு தமது கைகளால் வரையப்பட்ட
மாவீரர் படங்களுக்கு தமிழீழ தாயக உருவில் ஈகச்சுடரேற்றி தமது
வணக்கங்களையும் வழிபாடுகளையும் செலுத்தியுள்ளனர்.

பல்கலை வளாகத்தினுள் மறைவிடம் ஒன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள்
தமக்காகவும், தமது தாய் நாட்டிற்காகவும் உயிரீகம் செய்த வீரர்களுக்கு
உணர்வெழுச்சியுடன் வணக்கம் செலுத்தினர். சிறீலங்கா படையினரின் கவனம்
விடுதியினுள் குவிந்திருக்க, தமது பிரார்த்தனைகளை தாம் மாவீரர் துணையோடு
நிறைவேற்றியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகம் எங்கும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்களை நாம் என்றும்
மறவோம், என்ன இன்னல் வரினும் நினைவில் நிறுத்தி மறவாது காப்போம் என்பதங்கு
இது ஒரு எடுத்து காட்டு எனத் தெரிவித்துள்ள மாணவர்கள் தமிழ் மக்களை
துப்பாக்கி முனையில் மௌனிகளாக்கலாம் ஆனால் சிந்தனையிலும் செயற்பாட்டிலும்
மௌனிகளாக்குவது கடினமான காரியம் என்பதை சிறீலங்கா புரிந்து கொண்டிருக்கும்
எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பல்கலைச் சூழலில் குவிக்கப்பட்டிருந்த படையினரின்
அடாவடிகளுக்கு மத்தியிலும், அயலில் உள்ள வீடுகளுக்குள் படையினர் ஒழிந்து
இருந்த நிலையிலும், மிகவும் உணர்வெழுச்சியுடன் ஒற்றுமையாக மாணவர்கள் தமது
வீரர்களை நினைவேந்திப் பிரார்த்தித்திருக்கின்றனர்.

இந்தச் செயற்பாடு சிறீலங்கா அரசுக்கு பெரும் மனக்கிலேசத்தை
ஏற்படுத்தியுள்ளதுடன், மாணவர்களை பழிவாங்கும் திட்டத்து அடியெடுத்துக்
கொடுத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ள,
தாயகப் பற்றுக்கொண்ட யாழ் பல்கலை பேராசிரியர் ஒருவர், மாணவர்கள் எந்தவித
வன்முறைப்பிரயோகமும் இன்றி தமது போர் வீரர்களை நினைவு கூருவதை யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

உள்ளத்தில் உறையும் தெய்வங்களுக்கு தமிழர் மானம் காக்க, தமிழ் நிலம்
விடிய, ஈழம் பிறக்க, வீழ்ந்து விதையாகிய மாவீரர் பாதங்கள் பின்தொடரும் இளம்
சந்ததியாகிய இவர்கள் நிச்சயம் விடிவுப்பயணத்தை தொடர்வார்கள் என்பது இவ்
நினைவு கூரல்கள் மூலம் சிறீலங்கா அரசுக்கு மிகப் பெரும் செய்தியாக தமிழ்
மக்களால் மறக்கப்படமுடியாத விடுதலை வீரர்களின் நாளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தான் உணர்வதாகவும் குறிப்பிட்ட பேராசிரியர்
தெரிவித்தார்.

இன்று மாலை 5:00 மணியளவில் பல்கலை ஆண்கள் விடுதி அயலில் உள்ள வலிகாமம்
உயர் பாதுகாப்பு வலய ஏதிலிகளை ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரிகள்
சந்திப்புக்கு அல்லது விசாரணைக்கு அழைப்பதாகக்கூறி தொழில்நுட்பக் கல்லூரி
வழளாகத்தினுள் சிறைவைத்திருந்தனர்.

இதன் பின்னர் குறிப்பிட்ட மக்களின் குடிசைகளுக்குள் மறைந்திருந்து
கண்காணித்தும் கூட, மாணவர்களின் உணர்வெழுச்சியை படையினரால் கட்டுப்படுத்த
முடியவில்லை எனத் தெரிவித்துள்ள விடுதி அயலவர் ஒருவர், தற்போது பல்கலை
ஆண்கள் விடுதி வாயிலில் ஆயுதம் தாங்கிய படையினர் கைகளில் இரும்பு கம்பிகள்
மற்றும் பொல்லுகள் சகிதம் ஆவேசமாக அலைந்து திரிவதாகவும், மாணவர்கள் பெரும்
அச்சுறுத்தலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலை வளாகத்தை சுற்றி ஊர்திகள் திரிவதாகவும், பல்கலை விடுதி
முற்றாக சுற்றி வளைக்கப்பட்டுக் காணப்படுவதாகவும் கூறியுள்ள மாணவர்கள்,
தம்மீது பழிவாங்கும் செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக மனித உரிமை
அமைப்புக்களுக்கும், புலம்பெயர்ந்த மக்களிற்கும் தெரியப்படுத்துமாறு
கேட்டுள்ளனர்.

இதேநேரம் இரவு வேளையில் இனம் தெரியாத இருவர் பல்கலை ஆண்கள் விடுதியின்
பின்புறமாக உள்ள உடற்பயிற்சி கற்கை நிலையத்தின் ஊடாக உட்புகுந்து எதையோ
எடுத்து சென்றதாக, அல்லது எதையாவது வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என
நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

படைப்புலனாய்வாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்காக,
எதையாவது சித்தரிக்க முனைகின்றார்களா என்னும் அச்சம் தம்மிடத்தில்
காணப்படுவதாக தெரிவித்துள்ள விடுதி மாணவர்கள், விடுதி தற்போது அச்சம்
மிகுந்த பிரதேசமாக காணப்படுவதாகவும், எந்த இடர் வரினும் மாவீரர்
நினைவேந்தலை தாம் வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் ஏனைய பல பகுதிகளிலும், மட்டக்களப்பு,
திருகோணமலை, வன்னியிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் மாவீர்களுக்கான வணக்கமும்,
சுடரேற்றும் நிகழ்வுகளும் மறைமுக இடங்களிலும், மக்களின் வீடுகளிலும் கடந்த
இரண்டு ஆண்டுகளைவிட அதிகமாக நடைபெற்றுள்ளன.நன்றி-தமிழ்வின் யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது 20111127uni003
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது Empty Re: யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

Post by கௌசிகன் Mon Nov 28, 2011 7:29 am

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது 224747944
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது Empty Re: யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 28, 2011 7:41 am

சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது Empty Re: யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்ணில் செலுத்தப்பட்டது ‘கல்பனா சாவ்லா’ விண்கலம்
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum