ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிபாடல் பாடல்

2 posters

Go down

பரிபாடல் பாடல்  Empty பரிபாடல் பாடல்

Post by prlakshmi Sun 20 Nov 2011 - 8:56

பரிபாடல் பாடல் -1


இது கடவுள் வாழ்த்து.


எழுதிய புலவர்
பெயர் தெரியவில்லை.













திருமால்


[You must be registered and logged in to see this link.]ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு
முடிமிசை அணவர
,
மாயுடை மலர்
மார்பின்
, மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை
எழில் வேழம் ஏந்திய
,
வாய் வாங்கும் வளை
நாஞ்சில்
, ஒரு குழை ஒருவனை; 5


(இது தரவு )


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும்
மேனியை
; மேனித்
திரு ஞெமிர்ந்து
அமர்ந்த மார்பினை
; மார்பில்
தெரிமணி பிறங்கும்
பூணினை
; மால் வரை
எரி திரிந்தன்ன
பொன் புனை உடுக்கையை-
10

சேவல் அம்
கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை
கூறும்
,
நா வல் அந்தணர்
அரு மறைப் பொருளே.



( இது கொச்சகம் )


அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி
பணி எரி புரை

விடர் இடு சுடர்
படர் பொலம் புனை வினைமலர்
15

நெரி திரடெரி புரை
தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து
யாத்த நேரணி

நெறி செறி வெறி
உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி
வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி
படை எருத்து மலை இவர் நவையினிற்
20



றுணி படல் இன மணி
வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல
முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின்
ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு
உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை
இதழ் அணி வயிறிரிய அமரரைப்
25



போரெழுந்து உடன்று
இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல்
பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு
அலம் தொடா அமர் வென்ற கணை.



(இவை நான்கும் அராகம்)


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்


பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:


(இது ஆசிரியம்)



அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


(இது பேரெண்)




அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.


(இது ஆசிரியம்)




விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45




ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், வனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50




நிலனும், நீடிய இமயமும், நீ.



(
இவை ஆறும் பேரெண்)



அதனால்,



(
இது தனிச் சொல் )



இன்னோர் அனையை; இனையையால்என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55



மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!


(இது சுரிதகம்)



நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60




எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,


( இவை சிற்றெண்னும்
பேரெண்னும்
இடைஎண்ணும்)



ஆங்கு,


( இது தனிச் சொல் )



காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68


(இது சுரிதகம்)











*******************************
















Meaning
















எவ்வுயிருக்கும் அச்சத்தைத்
தரக்கூடிய இயல்பை
உடைய , சினத்
தீயை உமிழுகின்ற
படம் விரிந்த
ஆயிரம் தலைகளை
உடைய ஆதிசேஷன்
உன் தலை
மீது நிழலாக
இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும்
மலர் மார்பினை
உடையவன் நீ.








குற்றமில்லா வெண்மையான
சங்கினைப் போன்ற
நிறத்தையும், மிக
உயர்ந்த மூங்கில்
கம்பின் உச்சியில்
கட்டப்பட்ட யானைக்
கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும்
இருக்கும் கலப்பையினை
உடையவனும், ஒற்றைக்
குழையை அணிநதவனுமாகிய
பலதேவனாகவும் நீ
விளங்குகின்றாய்.


கருடச் சேவல் கொடியைக்
கொண்டவனே! தாமரை போன்ற அழகிய
கண்களை உடையவன் நீ .








[You must be registered and logged in to see this link.]காயாம் பூவினது
நிறத்தை உடையது உன்
மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம் கௌஸ்துப மாலையை உடையவன் நீ.








கரிய மலையைச்
சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி
உளாய்.








நாவன்மை உடைய
அந்தணர் உணர்தற்குரிய அரு
மறைப் பொருளே !
நினது அருளாலே உனது
வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள்
, உன்னுடைய அருள் தழுவுதலாலே நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற
வல்லவர்கள்
ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).


தம் அறியாமையினாலே
உன்னோடு போர்
செய்வோம் என்று
வந்த அவுணர்களுடைய
வலிமை கெடும்
வண்ணம், போரின்
கண் வென்ற
குற்றமற்ற தலைமை
உடைய அண்ணலே !














காமன், சாமன்
என்னும் இருவருடைய
தந்தையே !








விளங்குகின்ற ஆபரணங்களை
அணிந்தவனே !








உன் வரவினை, (அவதாரத்தை அல்லது
வரலாற்றை ) விளக்கமாக
அறிந்து கொள்ளுதல்
என்பது, மயக்கம்
தீர்ந்த தேர்ச்சி
பெற்ற முனிவருக்கும்
அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை
உடையவனே !











முனிவர்களுக்கே அப்படி
என்றால், நீ
எப்படிபட்டவன் என்று
உரைப்பது எங்களுக்கு
மட்டும் எப்படி
எளிதாகும் ?


அழகிய தாமரை
மலரின் கண் வீற்றிருக்கும்
திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே! அறிவதற்கு இயலாதது
உன் வரலாறு என்று
நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் , உன் மேல்
எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும்
பெருமையுடையது என்பதால், நாங்கள்
கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி
எங்களை வெறுத்து விடாமல்
அருள வேண்டும்.


















வெற்றி மிகுந்த
பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்
, நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;


நன்னெறியில்
செல்லும் திறனில்லாதவரை
, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும்
நீயே
; அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;












[You must be registered and logged in to see this link.]அழகும், எழுச்சியும் உடைய
வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ
;









சுடுகின்ற சுடரை
உடைய சூரியனும் நீயே.










ஐந்து தலைகளைத்
தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்
, கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;









அவனால்
செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே
;









நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;









பூவின் மேல் இருக்கும்
பிரம்மனும் நீ
;









அவன் செய்யும்
நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே
;












வானின் கண் உயரும்
மேகமும் நீ
;


மாகம் என்னும்
வானமும் நீ
;


இந்தப் பூமியும்
நீ
;


நீண்டு
நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
















நீ இவரைப்
போன்றவன்
, இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு
காணப்படாமையால்
, பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும்
ஆள்வதற்கு அடையாளமாக நின் வலப் பக்கத்தே ஏந்தி
, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!


உன் புகழ்தான்
உனக்கு ஒப்புமையானது
.















புள் என்னும்
கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.

முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும் மாறுபாட்டினை உடைய
சக்கரப்படையை உடையவன் நீ.

கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை
உடைய திருமேனியை உடையவன் நீ.

அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.















என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு
ஒன்று கூடி
, உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக, பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.





வாய்மொழிப்
புலவனே!






வாய்மொழியாகச்
சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!



உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் . [You must be registered and logged in to see this link.]
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பரிபாடல் பாடல்  Empty Re: பரிபாடல் பாடல்

Post by சதாசிவம் Sun 20 Nov 2011 - 9:34

பயனுள்ள பதிவு.
திவ்விய பிரபந்தம் போல் பெருமாளின் பெருமைகளை பேசும் நூல் பரிபாடல். மக்களிடையே பிரபலம் ஆகாத நூல். அறியச்செய்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்
»  விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
» கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி
» இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்
» மழை பாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum