Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
5 posters
Page 1 of 1
திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
Published November 18, 2011
மண
வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த
ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
ஆனால் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு
கற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவை இருந்தால் மகிழ்ச்சி என்பது
கணக்கற்றது…
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில்
மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு
பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் பங்கு என்ன?
எதற்கும் யார் பொறுப்பு?
வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!
http://arivamuthu.com
Published November 18, 2011
மண
வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த
ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
ஆனால் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு
கற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவை இருந்தால் மகிழ்ச்சி என்பது
கணக்கற்றது…
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
- கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
- குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
- குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
- வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
- 1. வருமானம்
- 2. ஒத்துழைப்பு
- 3. மனித நேயம்
- 4. பொழுதுபோக்கு
- 5. ரசனை
- 6. ஆரோக்கியம்
- 7. மனப்பக்குவம்
- 8. சேமிப்பு
- 9. கூட்டு முயற்சி
- 10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
- 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
- 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
- 3. கோபப்படக்கூடாது.
- 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
- 5. பலர் முன் திட்டக்கூடாது.
- 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
- 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
- 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
- 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
- 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
- 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
- 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
- 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
- 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
- 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
- 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
- 17. ஒளிவு மறைவு கூடாது.
- 18. மனைவியை நம்ப வேண்டும்.
- 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
- 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
- 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
- 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
- 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
- 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
- 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
- 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
- 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.
ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக
கவனிக்க கூடியவள் மனைவி.- 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
- 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
- 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
- 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
- 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
- 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
- 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
- 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
- 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
- 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
- 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
- 3. எப்போதும் சிரித்த முகம்.
- 4. நேரம் பாராது உபசரித்தல்.
- 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
- 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
- 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
- 8. அதிகாரம் பணணக் கூடாது.
- 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
- 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
- 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
- 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
- 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
- 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
- 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
- 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
- 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
- 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
- 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
- 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
- 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
- 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
- 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
- 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
- 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
- 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
- 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
- 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
- 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது
இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க
வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில்
குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன்
போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி,
அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி
அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு,
மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில்
மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு
பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
- 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
- 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
- 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
- 4. விரும்பியதைப் பெற இயலாமை.
- 5. ஒருவரையொருவர் நம்பாமை.
- 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
- 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
- 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
- 9. விருந்தினர் குறைவு.
- 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
- 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
- 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
- 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
- 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக்
குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக்
கொண்டு வர வேண்டும்.
- 1. அன்பாகப் பேசுவது
- 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
- 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
- 4. குறை கூறாமல் இருப்பது.
- 5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
- 6. இன்முகத்துடன் இருப்பது.
- 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
- 8. பிறரை நம்புவது.
- 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
- 10. பணிவு
- 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
- 12. பிறர் வேலைகளில் உதவுவது.
- 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
- 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
- 15. சுறுசுறுப்பு
- 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
- 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
- 18. நகைச்சுவையாகப் பேசுவது.
- 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
- 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
- 21. நேரம் தவறாமை.
- 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
- 23. தெளிவாகப் பேசுவது.
- 24. நேர்மையாய் இருப்பது.
- 25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம்
பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து
சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும்,
பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம்,
நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க
மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை?
நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை
விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச்
சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்
பத்து கட்டளைகள்:
- 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
- 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
- 3.இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
- 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
- 6.எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
- 7.ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
- 8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
- 9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
- 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!
http://arivamuthu.com
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்
இத சொல்லுங்க ??????????
இத சொல்லுங்க ??????????
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
அருமையான கட்டுரை நண்பரே.. எனக்கு இன்னும் கல்யாணம் அகவிலை...கல்யாணம் ஆவத்ர்கு முன்பே இது போன்ற கட்டுரைகளை படிது கொள்வதால் குடும்பத்தில் பிரச்சனை வராமல் தவிர்த்து கொள்ள முடியும்
பகிர்வுக்கு மிக்க நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
// சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.//
பகிர்வுக்கு மிக்க நன்றி வலை நண்பரே!
பகிர்வுக்கு மிக்க நன்றி வலை நண்பரே!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல.
» மகாகவி பாரதி பாடல்கள்...
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல.
» மகாகவி பாரதி பாடல்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|