Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
4 posters
Page 1 of 1
கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது: தென் மாநிலங்களுக்கான ரஷ்ய தூதர் மகிழ்ச்சி !
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அபத்தமான பிரசாரங்கள் வலுவிழந்து வருகின்றன. போராட்டக் குழுக்களின் குரல் மெலிந்து, அணுமின் சக்திக்கு, மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த சர்ச்சை பற்றி, தென் மாநிலங்களுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலே ஏ.லிஸ்டா படாவ், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி.
கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பாட்டுக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்?
காலதாமதம் உண்மை தான். இந்திரா காலத்தில் திட்டமிடப்பட்டு, ராஜிவ் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வழக்கமான அலுவலக நடைமுறைகள் என, பல சவால்களை கடந்து, இறுதியாக செயல்வடிவம் பெற்றுள்ளது. 2001ல் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில், சிலர் அதற்கு எதிராக போராடி வருகின்றனரே...
ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு செய்து, நாட்டுக்குத் தேவையான ஒரு திட்டம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படியொரு போராட்டமும், எதிர்ப்பும் நியாயமற்றது. அப்பகுதி மக்களிடம் தவறான தகவல்களையும், கருத்துக்களையும் சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேறினால், தமிழகத்துக்கு, 900 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் கிடைக்கும். மின் பற்றாக்குறை குறையும். அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் கிடைக்கும். இத்தனை நல்ல விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தவறான தகவல்களை பரப்பி, மக்களை பீதியடையச் செய்து போராட்டம் நடத்துகின்றனர்.
"அணு உலைகளுக்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு இருக்கிறது. அங்கு மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் கூட எதிர்ப்பு இருக்கிறது' என்று கூறப்படுகிறதே?
ரஷ்யாவில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் கமிட்டி, அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது அல்ல. அணு உலைகளுக்கு எதிரான தனிப்பட்ட சிலர் சேர்ந்து, கமிட்டி என்று கூறி, தங்கள் கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மனி மட்டுமே அணுமின் நிலையம் அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளில், அணுமின் நிலையங்கள் நன்றாக செயல்பட்டு வருகின்றன.பிரான்சில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மின் தேவையை பூர்த்தி செய்வது அணுமின் நிலையங்கள் தான். அணு மின் சக்திதான் இப்போதுள்ள மின்பற்றாக்குறையை தீர்க்க உள்ள ஒரே மாற்று வழி. கூடங்குளம் முடக்கப்பட்டால், இந்தியாவிற்குத்தான் இழப்பு. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் ஒரு தொழில் ரீதியான தன்னார்வலர் (புரபஷனல் ஆக்டிவிஸ்ட்) போலத்தான் செயல்படுகிறார்.
கூடங்குளத்தைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் எத்தனை அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது? அவற்றால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுள்ளதா?
கூடங்குளம் வகையிலான அணுமின் நிலையங்கள் ரஷ்யாவில் பத்து இருக்கின்றன. பத்தும், பாதுகாப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இதுவரை ஒரு பிரச்னை கூட இல்லை. மேலும் சீனா, உக்ரைன், பல்கேரியா, செக் குடியரசு போன்ற நாடுகளிலும், கூடங்குளத்தில் அமைத்துள்ளது போல ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த மாதம் 2ம் தேதி வங்கதேசத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.
"கூடங்குளம் பிரச்னையில் என் ஆதரவு மக்களுக்குத்தான்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா அப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன். சில நாட்களாக கூடங்குளம் மக்களிடமே மனமாற்றம் வந்திருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதாவும் இத்திட்டத்தை புரிந்து, சரியான நிலையை எடுப்பார் என நம்புகிறோம். கூடங்குளம் பற்றிய ஆரம்பகட்ட ஆலோசனை நடந்தபோது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இத்திட்டத்தை ஆதரித்தார்.
ரஷ்ய இன்ஜினியர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறி வருகின்றனரா?
அது தவறான தகவல். நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய இன்ஜினியர்கள் இங்குதான் இருக்கின்றனர். குறைந்த கால பணிக்காக வந்தவர்கள் மட்டும், பணி முடிந்து நாடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள், அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின் தான் நாடு திரும்புவர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை பாதியில் நிறுத்தினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனரே?
ஆம், அது உண்மை தான். இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால், அது ஆபத்தில் முடியும். ஆனால், இப்போது கூடங்குளத்தில் பராமரிப்பு பணிகள் சரியாக நடந்து வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு உங்களது வேண்டுகோள் என்ன?
வதந்திகளை நம்ப வேண்டாம். அணுமின் நிலையம் குறித்த அச்சம் தேவையற்றது. போராட்டக்காரர்களின் பேச்சைக் கேட்பதை விட, விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சொல்வதைக் கேட்க வேண்டும். விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் உட்பட, பல விஞ்ஞானிகள், அணு உலையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்துள்ளனர். பாதுகாப்பற்ற விஷயத்தை தன் நாட்டு மக்கள் மீது இவர்கள் திணிப்பார்களா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கூடங்குளம் போராட்டக்காரர்களின் பின்னணியில், உலக அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்களின் அமைப்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக சில நாடுகள், போராட்டக்காரர்களைத் தூண்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது.
***
அணுமின் நிலையத்தை கண்டு சிலர் பயப்படுகின்றனர். இது ஒரு வகையான மனப்பிரச்னை தான். ஆனால், இப்போது கூடங்குளத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
***
கூடங்குளம் வகையிலான அணுமின் நிலையங்கள் ரஷ்யாவில், 10 இருக்கின்றன. அந்த, 10 அணுமின் நிலையங்களும் பாதுகாப்புடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை.
நன்றி : தினமலர்
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அபத்தமான பிரசாரங்கள் வலுவிழந்து வருகின்றன. போராட்டக் குழுக்களின் குரல் மெலிந்து, அணுமின் சக்திக்கு, மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த சர்ச்சை பற்றி, தென் மாநிலங்களுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலே ஏ.லிஸ்டா படாவ், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி.
கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பாட்டுக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்?
காலதாமதம் உண்மை தான். இந்திரா காலத்தில் திட்டமிடப்பட்டு, ராஜிவ் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வழக்கமான அலுவலக நடைமுறைகள் என, பல சவால்களை கடந்து, இறுதியாக செயல்வடிவம் பெற்றுள்ளது. 2001ல் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில், சிலர் அதற்கு எதிராக போராடி வருகின்றனரே...
ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு செய்து, நாட்டுக்குத் தேவையான ஒரு திட்டம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படியொரு போராட்டமும், எதிர்ப்பும் நியாயமற்றது. அப்பகுதி மக்களிடம் தவறான தகவல்களையும், கருத்துக்களையும் சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேறினால், தமிழகத்துக்கு, 900 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் கிடைக்கும். மின் பற்றாக்குறை குறையும். அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் கிடைக்கும். இத்தனை நல்ல விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தவறான தகவல்களை பரப்பி, மக்களை பீதியடையச் செய்து போராட்டம் நடத்துகின்றனர்.
"அணு உலைகளுக்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு இருக்கிறது. அங்கு மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் கூட எதிர்ப்பு இருக்கிறது' என்று கூறப்படுகிறதே?
ரஷ்யாவில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் கமிட்டி, அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது அல்ல. அணு உலைகளுக்கு எதிரான தனிப்பட்ட சிலர் சேர்ந்து, கமிட்டி என்று கூறி, தங்கள் கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மனி மட்டுமே அணுமின் நிலையம் அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளில், அணுமின் நிலையங்கள் நன்றாக செயல்பட்டு வருகின்றன.பிரான்சில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மின் தேவையை பூர்த்தி செய்வது அணுமின் நிலையங்கள் தான். அணு மின் சக்திதான் இப்போதுள்ள மின்பற்றாக்குறையை தீர்க்க உள்ள ஒரே மாற்று வழி. கூடங்குளம் முடக்கப்பட்டால், இந்தியாவிற்குத்தான் இழப்பு. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் ஒரு தொழில் ரீதியான தன்னார்வலர் (புரபஷனல் ஆக்டிவிஸ்ட்) போலத்தான் செயல்படுகிறார்.
கூடங்குளத்தைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் எத்தனை அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது? அவற்றால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுள்ளதா?
கூடங்குளம் வகையிலான அணுமின் நிலையங்கள் ரஷ்யாவில் பத்து இருக்கின்றன. பத்தும், பாதுகாப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இதுவரை ஒரு பிரச்னை கூட இல்லை. மேலும் சீனா, உக்ரைன், பல்கேரியா, செக் குடியரசு போன்ற நாடுகளிலும், கூடங்குளத்தில் அமைத்துள்ளது போல ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த மாதம் 2ம் தேதி வங்கதேசத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.
"கூடங்குளம் பிரச்னையில் என் ஆதரவு மக்களுக்குத்தான்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா அப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன். சில நாட்களாக கூடங்குளம் மக்களிடமே மனமாற்றம் வந்திருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதாவும் இத்திட்டத்தை புரிந்து, சரியான நிலையை எடுப்பார் என நம்புகிறோம். கூடங்குளம் பற்றிய ஆரம்பகட்ட ஆலோசனை நடந்தபோது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இத்திட்டத்தை ஆதரித்தார்.
ரஷ்ய இன்ஜினியர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறி வருகின்றனரா?
அது தவறான தகவல். நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய இன்ஜினியர்கள் இங்குதான் இருக்கின்றனர். குறைந்த கால பணிக்காக வந்தவர்கள் மட்டும், பணி முடிந்து நாடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள், அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின் தான் நாடு திரும்புவர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை பாதியில் நிறுத்தினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனரே?
ஆம், அது உண்மை தான். இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால், அது ஆபத்தில் முடியும். ஆனால், இப்போது கூடங்குளத்தில் பராமரிப்பு பணிகள் சரியாக நடந்து வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு உங்களது வேண்டுகோள் என்ன?
வதந்திகளை நம்ப வேண்டாம். அணுமின் நிலையம் குறித்த அச்சம் தேவையற்றது. போராட்டக்காரர்களின் பேச்சைக் கேட்பதை விட, விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சொல்வதைக் கேட்க வேண்டும். விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் உட்பட, பல விஞ்ஞானிகள், அணு உலையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்துள்ளனர். பாதுகாப்பற்ற விஷயத்தை தன் நாட்டு மக்கள் மீது இவர்கள் திணிப்பார்களா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கூடங்குளம் போராட்டக்காரர்களின் பின்னணியில், உலக அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்களின் அமைப்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக சில நாடுகள், போராட்டக்காரர்களைத் தூண்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது.
***
அணுமின் நிலையத்தை கண்டு சிலர் பயப்படுகின்றனர். இது ஒரு வகையான மனப்பிரச்னை தான். ஆனால், இப்போது கூடங்குளத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
***
கூடங்குளம் வகையிலான அணுமின் நிலையங்கள் ரஷ்யாவில், 10 இருக்கின்றன. அந்த, 10 அணுமின் நிலையங்களும் பாதுகாப்புடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
ஏதோ நம்ம நாட்டுக்கு நல்லது நடந்தா சரி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
நாட்டுக்கு நல்லது தான் யார் இல்லையென்று சொன்னது , கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்களின் கதி என்னவாகும்
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
சரியாக சொன்னீர்கள்நாட்டுக்கு நல்லது தான் யார் இல்லையென்று சொன்னது , கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்களின் கதி என்னவாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :) 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :) 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :) Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :) Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
கேசவன் wrote:சரியாக சொன்னீர்கள்நாட்டுக்கு நல்லது தான் யார் இல்லையென்று சொன்னது , கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்களின் கதி என்னவாகும்
![கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
வடமாநிலங்களில் மக்கள் வாழாத பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் சும்மா கிடக்கின்றனவே அங்கு வைக்க வேண்டியது தானே. இங்கு எதற்கு அணு உலை
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
சரிப்பா இப்ப போராட்டம் நடத்துரவங்க ellaam இந்த அணு உலை ஆரம்பிக்கும்போது எங்கே போய் இருந்தாங்க?
இந்த போராட்டத்தை ஆரம்ப கட்டத்தில் தொடங்கி இருந்தா அரசாங்கமும் வேற இடமோ அல்லது வேற மாநிலமோ பார்த்து இருப்பாங்க இல்ல.
இந்த போராட்டத்தை ஆரம்ப கட்டத்தில் தொடங்கி இருந்தா அரசாங்கமும் வேற இடமோ அல்லது வேற மாநிலமோ பார்த்து இருப்பாங்க இல்ல.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
உண்மையிலேயே எனக்கு தெரியாதுங்க , சில மாதங்களுக்கு முன் ஜப்பான் அணு உலைகள் சுனாமியால் பாதிக்கபட்ட பின் தான் , நானும் இந்த அணு உலைகள் பற்றி இணையத்தில் நிறைய தெரிந்து கொண்டேன். தினமும் இணையத்தில் பலமணிநேரம் இருப்பவர்களுக்கே இந்த விழிப்புணர்வு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்கு. இதில் அன்னாடம் காய்ச்சிகளாக இருக்கும் அப்பாவி தமிழ் சகோதரர்கள் எங்கிருந்து ஆரம்பத்திலேயே போராட்டத்தை தொடங்குவாங்க.உதயசுதா wrote:சரிப்பா இப்ப போராட்டம் நடத்துரவங்க ellaam இந்த அணு உலை ஆரம்பிக்கும்போது எங்கே போய் இருந்தாங்க?இந்த போராட்டத்தை ஆரம்ப கட்டத்தில் தொடங்கி இருந்தா அரசாங்கமும் வேற இடமோ அல்லது வேற மாநிலமோ பார்த்து இருப்பாங்க இல்ல.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிளாஸ்டிக்கை வெல்வதில் மனமாற்றம் கைகொடுக்கும்!
» ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்
» ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்
» விஷம் குடித்த பெண் மனமாற்றம் : வழக்குப்பதிந்த போலீஸ் "அப்செட்'
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
» ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்
» ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்
» விஷம் குடித்த பெண் மனமாற்றம் : வழக்குப்பதிந்த போலீஸ் "அப்செட்'
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|