Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
5 posters
Page 1 of 1
மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
தலைவாரி பூச்சூடி "டாடா' காண்பித்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள், சேலம் மாதையன்குட்டையைச் சேர்ந்த அப்பாவி அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் தன் பெண், அதே பள்ளி உடற்கல்வி ஆசிரியருடன் ஓடிப் போவாள், என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறப்பு வகுப்புக்காக சென்ற மகள், சென்ற இடம் தெரியவில்லை.
உடற்கல்வி ஆசிரியர் கடத்திவிட்டதாக, தந்தை போலீசில் புகார் செய்தார். ஆசிரியரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று (நவ.6) காலை 7.30 மணிக்கு, சென்றாய பெருமாள் கோயில் கரடுக்கு அழைத்துச் சென்று, மதியம் மேட்டூர் பஸ்சில் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அம்மாணவியே வேறொரு மொபைல் போனிலிருந்து, உறவினரிடம் பேசியுள்ளார். போலீஸ் விசாரணையில், அந்த போன் எண் சேலத்தைச் சேர்ந்த பஸ் கிளீனருக்கு சொந்தமானது தெரியவந்தது, ஆனால் தலைமறைவாகி விட்டார். கிளீனருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும், மாணவிக்கும் என்ன வகையான தொடர்பு, மாணவி எங்கே... என போலீசாரே குழம்பியுள்ளனர். பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானமும், வேதனையும் தரும் செயல் இது. இதற்காக தானா... மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கின்றனர்.
படிக்கும் வயதில், வாழ்க்கையை தொலைக்கும் இந்த கேடுகெட்ட காதல் தேவைதானா? பருவக்கோளாறைத் தாண்டிய வயதிலும், மாணவிகளிடம் "சில்மிஷ' சேட்டையில் ஈடுபடும் ஆசிரியர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டாமா? நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 13 வயதில் காதலைக் கற்றுத் தரும் சினிமாவும், எப்பொழுதும் கள்ளக்காதலை கற்றுத்தரும் "டிவி சீரியலும்' தான், இத்தகைய கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருவதாக, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், பெண்கள்.
ஜெ.நிஷாபேகம், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி, மதுரை: பெண்கள் "டிவி' சீரியலே கதியென இருப்பதால், பிள்ளைகளும் அதைத் தான் பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கான பிரத்யேக சானலில் கூட, தவறான உறவுகளை சித்தரிக்கும் "அனிமேஷன்' காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன. புவியியல், நிலஅமைப்பு, உயிரினங்களைப் பற்றிய காட்சிகளை, யாரும் கண்டுகொள்வதே இல்லை. எது தவறோ... அதைநோக்கி வலியச் செல்கிறோம்.இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், பிள்ளைகளின் பேச்சை கேட்கக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் நலம் விசாரித்தால் கூட, வேறுவிதமான நேசம் என, மாணவிகள் தவறாக நினைக்கின்றனர். பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாணவிகளை தனியாக அழைத்துப் பேசுவது, தனியறையில் அமர்ந்து பேசுவதை, பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்
.
டாக்டர் கே.மகாலட்சுமி, மனநலம், அரசு மருத்துவமனை, திண்டுக்கல்: ஆசிரியர்களை கண்டால், மாணவர்களிடம் பயம் இருந்த காலம் மாறி, தற்போது நட்புறவு ஏற்பட்டுள்ளது. அதுவே தவறுகளுக்கும் காரணமாகிறது. பொருந்தா உறவை சித்தரிக்கும் "டிவி' சீரியல்களை, பெண்கள் பார்க்கின்றனர். கூடவே பிள்ளைகளும் பார்த்து, மனதை கெடுத்துக் கொள்கின்றனர். அரைகுறையாக தங்களுக்கு தெரிந்ததை, தவறான பயன்படுத்துவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மாணவர்களிடம் பாலியல் கல்வியை தெளிவுபடுத்த வேண்டும். முதலில் சங்கடமாகத் தெரியும். உண்மை கசப்பாக இருந்தாலும், அதன்விளைவு இனிமையானதாக மாறிவிடும். தப்பு செய்ய மனம் வராது. சினிமாவுக்கு கூட "சென்சார்' உள்ளது. கள்ள உறவுகளை சித்தரிக்கும் "டிவி'க்கு மட்டும் "சென்சார்' இல்லை. நமது வீட்டில் இத்தகைய சீர்கேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவர்.
கே. பார்வதி, கல்வி மாவட்ட அதிகாரி, உத்தமபாளையம்: ஆசிரியர்களால் ஏற்படும் பிரச்னைகளை தலைமை ஆசிரியர், கல்வித்துறைக்கு மாணவிகள் தெரிவிக்கலாம். மாணவிகளை எப்படி நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம், அடுத்து தான் கல்வி, என்பதை தலைமையாசிரியர் மூலம் விளக்கி வருகிறோம். மாணவியை தங்களது பிள்ளைகளைப் போல பாவிக்க வேண்டும். வகுப்பறை நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் தினமும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளி செல்லும் தனது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. வகுப்பறைகளில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் அறிந்து, பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.
என்.ஹேமாமாலினி (குடும்பதலைவி, ராமநாதபுரம்): குருவுக்கும், சிஷ்யனுக்கும் உள்ள உறவு, இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு போன்றது. புனித உறவு கெட்டுப்போகாமல் ஆசிரியர் பேணிக்காக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, திருமணம் செய்வது அதிகரிக்கிறது. சமுதாயத்திற்கு ஒவ்வாத இச்செயல்களை மன்னிக்க முடியாது. கல்விச்சாலையில் குழந்தைகளின் நடத்தை மாற்றம் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும், நண்பனை போல யதார்த்தத்தை புரிய வைத்து, நல்வழி படுத்த வேண்டும்.
எஸ்.மீனாட்சி,(ஆசிரியை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி): இன்றைய கால கட்டத்தில் சினிமா, "டிவி' மீடியாக்கள் மாணவர்களை சீரழித்து வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும்"தகாத' உறவு முறைக்கு இது ஒரு காரணம். வகுப்பறையில் ஒழுக்கத்திற்கு புறம்பாக நடக்கும் ஆசிரியர்களை தனியாக அழைத்து, கண்டிக்க வேண்டும். இது அவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் தேவையில்லா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியாக்களை புறக்கணிக்க வேண்டும். இது அவர்களை நல் வழிப்படுத்தும்,என்றார்.
ஏ.ரஜினி(பி.எஸ். சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர்,விருதுநகர்): ஆசிரியர் என்பவர் மாணவர்களின் இரண்டாவது தாய். ஆனால் தற்போது சிலரிடம் இந்த நிலை இல்லை. தவறான வழியில் செல்லும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுத்தால் மனம் பண்படும். "டிவி', சினிமா தான், பெண்களை தவறாக சித்தரிக்கிறது. இதை பார்க்கும் ஆசிரியர்களும் மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். மாணவிகள் மனம் சலனப்பட்டால் கூட, குருவாய் நின்று வழிநடத்த வேண்டுமே தவிர, வழிமாறி அவமானத்தை தேடிச் செல்லக்கூடாது.
dinamalar
உடற்கல்வி ஆசிரியர் கடத்திவிட்டதாக, தந்தை போலீசில் புகார் செய்தார். ஆசிரியரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று (நவ.6) காலை 7.30 மணிக்கு, சென்றாய பெருமாள் கோயில் கரடுக்கு அழைத்துச் சென்று, மதியம் மேட்டூர் பஸ்சில் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அம்மாணவியே வேறொரு மொபைல் போனிலிருந்து, உறவினரிடம் பேசியுள்ளார். போலீஸ் விசாரணையில், அந்த போன் எண் சேலத்தைச் சேர்ந்த பஸ் கிளீனருக்கு சொந்தமானது தெரியவந்தது, ஆனால் தலைமறைவாகி விட்டார். கிளீனருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும், மாணவிக்கும் என்ன வகையான தொடர்பு, மாணவி எங்கே... என போலீசாரே குழம்பியுள்ளனர். பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானமும், வேதனையும் தரும் செயல் இது. இதற்காக தானா... மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கின்றனர்.
படிக்கும் வயதில், வாழ்க்கையை தொலைக்கும் இந்த கேடுகெட்ட காதல் தேவைதானா? பருவக்கோளாறைத் தாண்டிய வயதிலும், மாணவிகளிடம் "சில்மிஷ' சேட்டையில் ஈடுபடும் ஆசிரியர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டாமா? நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 13 வயதில் காதலைக் கற்றுத் தரும் சினிமாவும், எப்பொழுதும் கள்ளக்காதலை கற்றுத்தரும் "டிவி சீரியலும்' தான், இத்தகைய கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருவதாக, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், பெண்கள்.
ஜெ.நிஷாபேகம், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி, மதுரை: பெண்கள் "டிவி' சீரியலே கதியென இருப்பதால், பிள்ளைகளும் அதைத் தான் பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கான பிரத்யேக சானலில் கூட, தவறான உறவுகளை சித்தரிக்கும் "அனிமேஷன்' காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன. புவியியல், நிலஅமைப்பு, உயிரினங்களைப் பற்றிய காட்சிகளை, யாரும் கண்டுகொள்வதே இல்லை. எது தவறோ... அதைநோக்கி வலியச் செல்கிறோம்.இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், பிள்ளைகளின் பேச்சை கேட்கக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் நலம் விசாரித்தால் கூட, வேறுவிதமான நேசம் என, மாணவிகள் தவறாக நினைக்கின்றனர். பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாணவிகளை தனியாக அழைத்துப் பேசுவது, தனியறையில் அமர்ந்து பேசுவதை, பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்
.
டாக்டர் கே.மகாலட்சுமி, மனநலம், அரசு மருத்துவமனை, திண்டுக்கல்: ஆசிரியர்களை கண்டால், மாணவர்களிடம் பயம் இருந்த காலம் மாறி, தற்போது நட்புறவு ஏற்பட்டுள்ளது. அதுவே தவறுகளுக்கும் காரணமாகிறது. பொருந்தா உறவை சித்தரிக்கும் "டிவி' சீரியல்களை, பெண்கள் பார்க்கின்றனர். கூடவே பிள்ளைகளும் பார்த்து, மனதை கெடுத்துக் கொள்கின்றனர். அரைகுறையாக தங்களுக்கு தெரிந்ததை, தவறான பயன்படுத்துவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மாணவர்களிடம் பாலியல் கல்வியை தெளிவுபடுத்த வேண்டும். முதலில் சங்கடமாகத் தெரியும். உண்மை கசப்பாக இருந்தாலும், அதன்விளைவு இனிமையானதாக மாறிவிடும். தப்பு செய்ய மனம் வராது. சினிமாவுக்கு கூட "சென்சார்' உள்ளது. கள்ள உறவுகளை சித்தரிக்கும் "டிவி'க்கு மட்டும் "சென்சார்' இல்லை. நமது வீட்டில் இத்தகைய சீர்கேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவர்.
கே. பார்வதி, கல்வி மாவட்ட அதிகாரி, உத்தமபாளையம்: ஆசிரியர்களால் ஏற்படும் பிரச்னைகளை தலைமை ஆசிரியர், கல்வித்துறைக்கு மாணவிகள் தெரிவிக்கலாம். மாணவிகளை எப்படி நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம், அடுத்து தான் கல்வி, என்பதை தலைமையாசிரியர் மூலம் விளக்கி வருகிறோம். மாணவியை தங்களது பிள்ளைகளைப் போல பாவிக்க வேண்டும். வகுப்பறை நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் தினமும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளி செல்லும் தனது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. வகுப்பறைகளில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் அறிந்து, பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.
என்.ஹேமாமாலினி (குடும்பதலைவி, ராமநாதபுரம்): குருவுக்கும், சிஷ்யனுக்கும் உள்ள உறவு, இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு போன்றது. புனித உறவு கெட்டுப்போகாமல் ஆசிரியர் பேணிக்காக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, திருமணம் செய்வது அதிகரிக்கிறது. சமுதாயத்திற்கு ஒவ்வாத இச்செயல்களை மன்னிக்க முடியாது. கல்விச்சாலையில் குழந்தைகளின் நடத்தை மாற்றம் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும், நண்பனை போல யதார்த்தத்தை புரிய வைத்து, நல்வழி படுத்த வேண்டும்.
எஸ்.மீனாட்சி,(ஆசிரியை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி): இன்றைய கால கட்டத்தில் சினிமா, "டிவி' மீடியாக்கள் மாணவர்களை சீரழித்து வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும்"தகாத' உறவு முறைக்கு இது ஒரு காரணம். வகுப்பறையில் ஒழுக்கத்திற்கு புறம்பாக நடக்கும் ஆசிரியர்களை தனியாக அழைத்து, கண்டிக்க வேண்டும். இது அவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் தேவையில்லா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியாக்களை புறக்கணிக்க வேண்டும். இது அவர்களை நல் வழிப்படுத்தும்,என்றார்.
ஏ.ரஜினி(பி.எஸ். சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர்,விருதுநகர்): ஆசிரியர் என்பவர் மாணவர்களின் இரண்டாவது தாய். ஆனால் தற்போது சிலரிடம் இந்த நிலை இல்லை. தவறான வழியில் செல்லும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுத்தால் மனம் பண்படும். "டிவி', சினிமா தான், பெண்களை தவறாக சித்தரிக்கிறது. இதை பார்க்கும் ஆசிரியர்களும் மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். மாணவிகள் மனம் சலனப்பட்டால் கூட, குருவாய் நின்று வழிநடத்த வேண்டுமே தவிர, வழிமாறி அவமானத்தை தேடிச் செல்லக்கூடாது.
dinamalar
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
எவ்வளவோ முறை இந்த சமூக சீரழிவைப் பற்றி உரக்க சொன்னாலும் கூட யாரும் இதைப் பற்றி கண்டுகொள்வதாய் தெரியவில்லை
சினிமாவும் , டிவியும் தொடர்ந்து விஷத்தை பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன
சினிமாவும் , டிவியும் தொடர்ந்து விஷத்தை பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
இதுக்கு முழுமுதல் காரணம் பெத்தவங்க தான்.இது போல கலாசார சீரழிவு சிரியல்களை பார்க்கவிடாமல் தடுக்கும் கடமையும் அவர்களை கண்காணிக்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கு.
இனியாச்சும் சுதாரித்து டிவி சிரியல்களை பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பார்க்காமல் தவிர்த்தல் நல்லது
இனியாச்சும் சுதாரித்து டிவி சிரியல்களை பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பார்க்காமல் தவிர்த்தல் நல்லது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
உதயசுதா wrote:இதுக்கு முழுமுதல் காரணம் பெத்தவங்க தான்.இது போல கலாசார சீரழிவு சிரியல்களை பார்க்கவிடாமல் தடுக்கும் கடமையும் அவர்களை கண்காணிக்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கு.
இனியாச்சும் சுதாரித்து டிவி சிரியல்களை பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பார்க்காமல் தவிர்த்தல் நல்லது
இப்படி போனா கார்ட்டூன்ஸ் கூட பிள்ளைகள் பார்க்க முடியாது அதிலும் அதிகமாக வன்முறை தான் இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!
» உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன
» மக்கள் தொடர்புத் துறைகள் (செய்தி, சினிமா)
» இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
» உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன
» மக்கள் தொடர்புத் துறைகள் (செய்தி, சினிமா)
» இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|