Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!
3 posters
Page 1 of 1
மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!
மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!
Tuesday 01 November 2011
பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வும், ஆலோசனைகளும் அவசியத் தேவையாக இருக்கும் சூழல் இது. இதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தை, 'உலக மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்' என்று கடைப்பிடிக்கிறார்கள்.
சென்னை, பேட்டர்ஸன் கேன்சர் சென்டரில், கடந்த அக்டோபர் 13 முதல் 20 வரை மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடந்த இலவச முகாமில், மார்பகப் புற்றுநோய் பற்றி அறியப்பட்ட விவரங்கள் அதிகம். அதை 'அவள் விகடன்’ வாசகிகளுக்கும் பகிர்ந்தார் சென்டரின் இயக்குநர், டாக்டர் விஜயராகவன்.
''1995-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12 - 14 சதவிகிதமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, இப்போது 26 - 28 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, மார்பகப் புற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதிப்பின் முதல் கட்டத்துக்குக் காரணம், பெண்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த கவலையில்லாமல் இருப்பதுதான். குடும்பம் என்ற அமைப்புக்குள்ளேயே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்களின் உடல்நிலையைப் பொருட்படுத்துவதே இல்லை. மார்பகப் புற்றைப் பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால், முழுமையான தீர்வு பெற முடியும். அந்த விழிப்பு உணர்வை உண்டாக்கவே... ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முகாம் இது!'' என்றவர், மார்பகப் புற்று ஏற்படும் விதத்தை விளக்கினார்.
''உடலில் எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் நிறைய இருக்கின்றன. இவற்றில் மார்பகத்தில் உள்ள 20 - 22 சுரப்பிகள், பருவமடைகின்ற வயதில் பால் சுரப்பிகளாக மாறுதல் அடையும். அங்கு சுரக்கும் திரவத்தாலோ, அந்த பால் சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படும்போதோ கட்டிகள் உண்டாகி, வலி ஏற்படுத்தும். இந்த வகையான கட்டிகளை 'ஃபைப்ரோமா' என்பார்கள். இவை சாதாரண சிகிச்சையிலேயே குணமாகக்கூடியவை.
வேறு சில காரணங்களால் ஏற்படும் கட்டிகளாலும், அடைப்புகளாலும் மார்பகத்தில் வீக்கம் ஏற்படலாம். அந்த வீக்கப் பகுதிக்குள் ஒருவித நீர் சுரந்து, அது காலப்போக்கில் உருண்டையாகத் திரண்டு, அதுவே மார்பகப்புற்றாக மாறக்கூடும். இதை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் விடும்போது, மார்பகம் முழுக்கப் பரவுவதோடு, அக்குள் பகுதியையும் பாதிக்கும். எனவே, மார்பகத்தில் சிறிய அல்லது வலியே இல்லாத கட்டி இருக்கிறது என்றாலும், உடனடியாகப் பரிசோதித்து... ஃபைப்ரோமா அல்லது புற்றுக்கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டே பரிசோதனையைத் தள்ளிப்போடும் மனநிலை, ஆபத்தானது!'' என்று புரியவைத்த டாக்டர், மார்பகப்புற்றை கணிக்கும் சுயபரிசோதனைகளையும் பேசினார்.
''மார்பகப் புற்றின் முதல் அறிகுறி, அதன் அமைப்பில் ஓர் ஒழுங்கின்மை ஏற்படும். குறிப்பாக, இரண்டு காம்புகளும் சம நிலையில் உள்ளனவா, அல்லது மேலும், கீழுமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்கலாம். மார்பிலோ, மார்புக்காம்பிலோ வலியை உணர்ந்தால், மார்புக்காம்பை அழுத்திப் பார்த்தால் பச்சையாகவோ, நீலமாகவோ, சமயங்களில் ரத்த நிறத்திலோ நீர் கசியலாம். அக்குள் பகுதியில் கட்டிகள் ஏதாவது தென்படுகின்றனவா என்பதைச் சுயமாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது கைகளைத் தூக்க முடியாதபடி வலி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 35 வயது முதல் 65 வயது வரையிலான ஒவ்வொரு பெண்ணுமே மேற்கூறிய பரிசோதனைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என, வருடத்துக்கு நான்கு முறை தாங்களாகவே பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏதேனும் மாறுதல்கள் தெரிந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.
கருத்தடை மாத்திரைகள், மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் உள்ளிட்ட ஹார்மோன் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கும் பரிசோதனை அவசியம். மற்றவர்களைவிட, கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு 50 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்'' என்று அலார்ம் அடித்தார் டாக்டர்.
கேம்ப்பின் ஹைலைட், பெண்களுக்குப் புற்றுநோயைக் கண்டறிய, 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலம் இலவசமாக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டதுதான். இதைப் பற்றி பேசிய டாக்டர் விஜயராகவன், ''பொதுவாக புற்றுநோய்க்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு 1,750 - 7,000 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. ஆனால், 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலமான டெஸ்ட்டுக்கு... வெறும் 200 ரூபாய்தான் செலவு. இதை எல்லா கேன்சர் மருத்துவமனைகளிலும் பயன்படுத்த, அரசுக்குப் பரிந்துரையும் செய்துள்ளோம்!'' என்றார் அக்கறையுடன்!
http://www.thedipaar.com/news/news.php?id=36118
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!
நல்ல கட்டுரை ..... . ஆனால் ஈகரையில் இது போன்ற கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. பதிவிடும் முன் ஏற்கனவே உள்ளதா என்று ஒரு முறை பார்த்து விட்டு பதியவும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம்
» ஒரே ஒரு முடி போதும்; பரம்பரையை கண்டறியலாம்
» நோயின் அறிகுறியை நகங்களின் மூலம் கண்டறியலாம்
» அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!
» 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை
» ஒரே ஒரு முடி போதும்; பரம்பரையை கண்டறியலாம்
» நோயின் அறிகுறியை நகங்களின் மூலம் கண்டறியலாம்
» அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!
» 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|