ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திவ்யா...

+3
அருண்
பிளேடு பக்கிரி
ranhasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திவ்யா... Empty திவ்யா...

Post by ranhasan Mon Oct 31, 2011 6:40 pm


அன்பு உறவுகளே...

ஓராண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு... உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்...
காலை மணி 11.30... சென்னையில் இருந்து கோவை வழி செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆட்டு மந்தை போல் அடைந்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் எப்படியோ இடம் கிடைத்த சந்தோசத்தில் நான் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தேன்...
எதிரில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண். எதிரில் இருந்த பெண் மணி உட்பட என்னை சுற்றி இருந்த கூட்டத்தில் முக்கால்வாசி ஆசிரியர்கள்தான். எதோ ஆசிரியர்கள் மாநாட்டிற்காக வந்ததாக பேசி கொண்டார்கள். இரயில் பெட்டி முழுவதும் கச கச என்று ஒரே கூச்சல், சண்டை, சச்சரவு.
இரயில் கிளம்பும் நேரத்தில்தான் அவள் வந்தால், அவளது பெயர் திவ்யா, முழுப்பெயர் திவ்ய தர்ஷினி... நல்ல அழகு, குட்டி உடை... அவளும் குட்டிப் பெண்தான்... ஆமாம் அவளுக்கு ஒரு வயதுதான் இருக்கும். அவளது தாத்தா அவளை தூக்கி கொண்டு கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.
அந்த ஆசிரியர் பெண்மணி அவருக்கு கொஞ்சம் இடம் கொடுத்து அமரச் சொன்னார். கூட்டத்தை கண்டதும் அந்த குழந்தை திவ்யாவிற்கு அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை... நிறுத்தாமல் வெகு நேரம் அழுதால்...
நான் அவரிடம் குழந்தையை கேட்டு பெற்றேன்...
அவளை சமாதானம் செய்து வேடிக்கை காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினேன்...
கொஞ்ச நேரத்தில் என்னுடன் நன்றாக பழகிவிட்டால்... பொம்மை போல் இருந்தால், எடையே இல்லை, பஞ்சு போல் இருந்தது அவளது பிஞ்சு உடல். அவள் செய்த குறும்பு இருக்கிறதே ஒரு வருடம் ஆகியும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது... அவளது தாத்தா சொல்வதை எல்லாம் செய்து காட்டினால்.
சிறிது தூரம் கடந்ததும் குழந்தை பசியால் அழத் துவங்கினாள்.
நான் பையில் வைத்திருந்த ரொட்டியை எடுத்து ஊட்டினேன். பிறகு அவள் தாத்தாவிடம் இருந்து பால் புட்டி வாங்கி ஊட்டிவிட்டேன்.
மீண்டும் குறும்பு விளையாட்டினை துவங்கினாள் அந்த குறும்பி...
என்னை சுற்றி நிறைய இளைஞர்கள்... அவளை என் குழந்தை என்றே பலர் நினைத்து கொண்டனர்.
கால் வைக்க கூட இடமில்லா அந்த கூட்டத்தில் அத்தனை பேரையும் சிரிக்க வைத்த சின்ன தேவதை அந்த திவ்யா குட்டிதான். ஒவ்வொருவரும் குழந்தையை தூக்கி கொஞ்ச துவங்கினர்.
கையில் வைத்திருந்த மிட்டாய், சாப்பிடும் பொருள் ஒவ்வொன்றையும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.
வழக்கம் போல் உளவியல் ரீதியாய் என் மனம் செல்லலாயிற்று...
கூட்ட நெரிசலில் மனித தன்மை மறந்து மிருகம் போல் செயல்பட்ட, பேசிய ஒவ்வொரு நபரையும் இந்த சுட்டி குழந்தை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டாளே !!!
நிற்க வழியில்லாத அந்த நெரிசலில் ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க ஒரு குழந்தை போதுமாய் உள்ளதே...!!! என்ற வியப்பும் அதற்கான காரணத்தை நோக்கியும் என் மனம் அலைய துவங்கியது...

நேரம் கடந்தது, குழந்தை பல இளைஞர்களிடம் சென்று கடைசியாய் என்னிடமே வந்தது... குழந்தையை விட்டு விட்டு அந்த இளைஞர்கள் செல்லும் முன் என்னிடம் ஒரு மிட்டாயை ஒரு இளைஞர் கொடுத்தார். அப்போது அவர் சொன்னார் "குழந்தைக்கு மிட்டாயை உடைத்து ஊட்டுங்கள் அப்படியே ஊட்டிவிடாதீர்கள்" என்று... அருகில் இருந்த அவரது நண்பர் "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்"
எனக்கு சிரிப்புதான் வந்தது... இது பல முறை என் வாழ்வில் நடந்த ஒன்றுதான்...

என் மடியில் அமர்ந்தபடி பயணித்த அவள் சிறிது நேரத்தில் என் மடியிலேயே தூங்கினால்... எனக்கு ஒரு மென்மையான உணர்வு, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, நீங்கள் உண்டு என்று சொல்லும் கடவுளை நான் மடியில் ஏந்துவது போன்ற உணர்வு, மனதின் வேதனைகள் யாவையும் மடியில் புதைந்து போனதாய் உணர்த்தியது அந்த உணர்வு, ஒரு வித பெருமிததோடு வந்த கர்வ உணர்வு அது...

இதுதான் தாய்மையோ...?

ஆம் தாய்மைதான், கர்பம் இன்றி தாய்மை அடைந்த கர்வ உணர்வுதான் அது...ஒரு ஆணை தாயாய் மாற்றும் கலை ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு, ஒவ்வொரு குழந்தை உள்ளம் கொண்டோருக்கும் உண்டு..அதில் முதன்மை பங்கு தங்கைக்குதான்...நமது சிறுவயதிலேயே நம்மை தாய் ஆக்குவது நமது தங்கைதான்..

உறக்கம் கலைந்த திவ்யா மீண்டும் விளையாட்டில் இறங்கினால், எல்லோரிடமும் சென்றாள் என்னிடம் இம்முறை வரவே இல்லை... நான் அதை நினைந்து வருந்தவும் இல்லை, என்னை விட்டு விலகி விலகி சென்றாள், ஏன் என்று தெரியவில்லை. கோவையை நெருங்கும் நேரம், அவளது தாத்தா அவளை அதட்டி விட்டார். அழ ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை, எல்லோரும் சமாதானம் செய்தார்கள் ஆனால் ஒருவரிடமும் செல்லவில்லை அவள்.

அவள் தாத்தாவே சமாதானம் செய்து தூக்கி பார்த்தார். அவரிடமும் செல்லாமல் பிடிவாதமாய் விலகி அழுதுகொண்டே அங்கும் இங்கும் அலைந்தால். என்னதான் ஒரு ஆண் ஒரு குழந்தை மீது அன்பு காட்டினாலும் அந்த குழந்தை அழும்போது தேடுவது தன் தாயைதான்..

அவளும் தாயைதான் தேடுகிறாள் என்பது எனக்கு புரிந்தது. நான் அவளை அழைக்கவே இல்லை நடப்பவற்றை பார்த்துக் கொண்டு மட்டும் அமர்ந்து இருந்தேன்.
அங்கும் இங்கும் அலைந்த அவள் என்னை பார்த்ததும் திடீர் என்று ஓடி வந்து என் கழுத்தை கட்டிக்கொண்டு இறுக என்னை அணைத்து கொண்டால்... நானும்தான்...

அங்கு இருந்தோர் அனைவரும் என்னை ஆச்சர்யமாய் பார்த்தனர். அவள் தாத்தாவும் தான். அவர் சொன்னார் அவள் அழும் பொது அவள் அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லமாட்டாள், யாராலும் அவள் அழுகையை நிறுத்தவும் முடியாது, உங்களிடம் இப்படி ஒட்டிக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை... என்று கூறினார்.
எனக்கு ஒரே பெருமிதம்தான். முகம் முழுவதும் எனது பெருமிதம் பெருக்கெடுத்து பிரகாசித்தது...

இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல, ஆனால் இந்த பெருமிதம் எனக்குள் இருந்த என் தாய்மை உணர்வை தூண்டிய அந்த குட்டி குழந்தை மீதானது...

அவள் கண்ணீரை துடைத்துவிட்டு "அழாதடா தங்கம்" என்று சொல்லிக்கொண்டு அவளை தூக்கி சென்றேன், கதவின் அருகே அவளை தூக்கி பிடித்து வேகமான தென்றலோடு என் அன்பினை கலந்து அவளுக்கு ஊட்ட எனக்கு தனிமையோடு சில நிமிடங்கள் கிடைத்தன.

நான் இறங்கும் இடம் நெருங்க நெருங்க என் தாய்மை உணர்வை இழக்க சில நிமிடங்கள் மட்டுமே இருப்பதை எண்ணி ஒரு வருத்தம் தொற்றியது, அவளை தோளில் வைத்து ஆட்டிக்கொண்டே இருந்தேன். என் தோளிலேயே தூங்கிவிட்டால் அந்த தேவதை...

நாங்கள் இறங்கும் இடம் வந்தது, நானும் அவளது தாத்தாவும் சேர்ந்தே இறங்கினோம், குழந்தை இப்போதும் என் தோளில்தான் தூங்கிக்கொண்டிருந்தால். குழந்தையின் அப்பா அவளுக்காக ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தார்.
கையில் ஒரு கூடை, அதில் குழந்தைக்கு தேவையான பொருட்கள் இருந்தன. சிறிதுநேரம் அவரிடம் பேசிவிட்டு, பிரிய மனமின்றி குழந்தையை என் தோளில் இருந்து விடுவித்து அவரிடம் கொடுத்தேன், பிரியும் வேளையில் ஒரு அன்பு முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்து விட்டு அவள் தந்தையிடம் "திவ்யா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு, முழிச்சவுடன் அழுவாள், பால் புட்டி அவுங்க தாத்தாட்ட இருக்கு மறக்காமல் பால் குடுத்துருங்க, பசியோட அப்டியே தூங்கிற போறா, பாத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு நான் செல்கையில் திவ்யாவின் தந்தை ஒரு புன்சிரிப்போடு என்னை வழி அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து அவர் சிரித்ததை பற்றி யோசித்து பார்த்ததும் என் மனசாட்சி கூறியது "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்" என்று...

இந்த பதிவு பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம், ஏனென்றால் இதில் நான் எந்த ஒரு கருத்தையும், அழுத்தத்தையும் பதியவில்லை, என்னை போன்று அந்த இரயிலில் பயணம் செய்த பல இளைஞர்களின் தாய்மை குணத்தை எங்களுக்கு அன்று உணர்த்திய அந்த குட்டி செல்லத்திற்கு இந்த பதிவினை சமர்பிக்கிறேன், அவ்வளவுதான்...

இதோ அந்த தேவதையின் சில புகை படங்கள்...

திவ்யா... Photo00362

திவ்யா... Photo00522

திவ்யா... Photo00392l

திவ்யா... Photo0040hk

திவ்யா... Photo00412c

திவ்யா... Photo00422

திவ்யா... Photo00432

திவ்யா... Photo00442

திவ்யா... Photo00482

திவ்யா... Photo00492

திவ்யா... Photo00532

திவ்யா... Photo00512


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by பிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 6:57 pm

உண்மை தான்,, இந்த மாதிரி நிகழ்வுகள் ரயில் பயணங்களில் அதிகம் நடக்கும்.. எனக்கும் நடந்திருக்கிறது.. குழந்தை அழுதுச்சுன்னு சொன்னீங்க ஆனா எல்லா படத்துலயும் சிரிச்சு கிட்டு இருக்கே ஜாலி



திவ்யா... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ranhasan Mon Oct 31, 2011 7:00 pm

பிளேடு பக்கிரி wrote:உண்மை தான்,, இந்த மாதிரி நிகழ்வுகள் ரயில் பயணங்களில் அதிகம் நடக்கும்.. எனக்கும் நடந்திருக்கிறது.. குழந்தை அழுதுச்சுன்னு சொன்னீங்க ஆனா எல்லா படத்துலயும் சிரிச்சு கிட்டு இருக்கே ஜாலி

அழும்போது எப்படி படம் எடுக்குறது? அவ சிரிக்கும்போதுதான் படம் எடுத்தேன்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by அருண் Mon Oct 31, 2011 7:10 pm

உங்களுக்கு குழந்தை மனசு ஹாசன்..! மகிழ்ச்சி ரயில் பயணங்கள் சுகமானன நிகழ்வுகள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by பிரசன்னா Mon Oct 31, 2011 7:15 pm

நிற்க வழியில்லாத அந்த நெரிசலில் ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க ஒரு குழந்தை போதுமாய் உள்ளதே...!!!

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ரேவதி Tue Nov 01, 2011 4:29 pm

உங்களுக்கும் குழந்தை மனசுதான் அண்ணா..
அந்த பாப்பா ரொம்ப கியூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 4:39 pm

உங்களின் மன உணர்வு புரியுது வழக்கமான காமெடி இல்லாம நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ranhasan Tue Nov 01, 2011 7:55 pm

எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ரேவதி Wed Nov 02, 2011 9:17 am

ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு
அது என்னமோ உண்மைதான் சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by ranhasan Wed Nov 02, 2011 3:04 pm

ரேவதி wrote:
ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... எதிர்ப்பு
அது என்னமோ உண்மைதான் சிரி

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... Hதிவ்யா... Aதிவ்யா... Sதிவ்யா... Aதிவ்யா... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

திவ்யா... Empty Re: திவ்யா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum