Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
3 posters
Page 1 of 1
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
இந்த கட்டுரை ujiladevi.blogspot என்ற தளத்திலிருந்து எடுக்கபட்டது
சில நாட்களுக்கு முன்பு அவசரமாக என்னை காணவேண்டுமென்று ஒரு பெரியவர் வந்தார் என்னை சந்திப்பதற்கான முன் அனுமதி எதையும் அவர் வாங்கவில்லை என்பதனால் அலுவலகத்தில் இப்போது சந்திக்க முடியாது என்று தடுத்துவிட்டனர் இருந்தாலும் அவர் பிடிவாதம் செய்து சுவாமிஜியை பார்த்துவிட்டு தான் போவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வேறு வழியே இல்லாமல் இப்படி ஒருவர் அடம்பிடிப்பதாக என்னிடம் சொன்னார்கள் நான் அந்த பெரியவரை வரச்சொன்னேன்
வந்தவர் மிகவும் சந்தோசப்பட்டார் வந்த இடத்தில் உங்களை பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று வருத்தப்பட்டேன் நல்லவேளை கடவுள் கிருபையால் காணமுடிந்தது என்று சொன்னார் நானும் இவ்வளவு பிடிவாதமாக என்னை பார்த்தே தீருவது என்றிருந்த அவருக்கு நிச்சயம் எதாவது அவசரமான ஆபத்தான பிரச்சனை இருக்கும் என்று நினைத்து என்ன காரணத்திற்காக என்னை காண வந்திர்கள் என்று அவரிடம் கேட்டேன்
சுவாமி என் மருமகள் உண்டாகி இருக்கிறாள் இது தான் மாதம் நீங்கள் எல்லா யோகங்களும் பொருந்தி வரும் ஒரு நாளை குறித்து கொடுத்தால் அன்றைய தினத்தில் குழந்தை பிறக்கும் படி செய்துவிடலாம் அதனால் தான் பிடிவாதமாக காத்திருந்தேன் என்றார் அவர் சொல்லியது பாதி எனக்கு புரிந்தது மீதம் புரியவில்லை என்ன சொல்கிறீர்கள் முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கலாம் பிரசவத்திற்கு எப்படி நாள் குறிப்பது என்று அவரிடம் கேட்டேன் அவர் அதற்கு விரிவாக விஸ்தாரமாக எனக்கு பதில் சொன்னார் அந்த பதில் என்னை ஆச்சரியம் அடைய செய்தது என்றாலும் மக்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருந்தது
ஒன்பது கிரகங்களும் நன்றாக நல்ல இடத்தில் இருக்கும் நாளில் நல்ல பலனை தரக்கூடிய லக்கிணம் ராசி நடைமுறையில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறப்புக்கான நேரம் குறித்து கொடுத்துவிடுவார்களாம் அன்றைய நேரத்தில் சாதாரன பிரசவம் நடை பெறவில்லை என்றாலும் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுத்து விடுவார்களாம் அப்படி நல்ல நேரத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுவதுமே நல்லது மட்டும் தான் நடக்குமாம் இதற்கு மருத்துவ மனைகளும் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுக்கிறதாம்
இது சம்பந்தமாக என் மருத்துவ நண்பர்கள் சிலரை கேட்டேன் அவர்களும் இதை ஒத்துக்கொண்டார்கள் என்ன செய்வது மனிதனை ஜோதிட பைத்தியம் இப்படியெல்லாம் செய்ய சொல்கிறது நாங்களும் வேறுவழி இல்லாமல் செய்கிறோம் என்றார்கள் இதில் சில டாக்டர்கள் உண்மையை மறைக்காமல் வேறொரு விஷயத்தையும் என் காதில் போட்டார்கள்
அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் பத்து பதினைந்து பெண்கள் இருப்பார்கள் இதில் பல பேருக்கு ஒரே நேரம் குறித்து கொடுக்கபட்டிருக்கும் நாங்கள் டாக்டர்கள் என்றாலும் மனிதர்கள் தானே எந்திரமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்து வேலையே செய்யலாம் நம்மால் ஆகுமா அதனால் அறுவைசிகிச்சை கூடாரத்திற்கு நோயாளியை காலையிலேயே கொண்டுவந்து படுக்கவைத்து விடுவோம் எல்லா வேலைகளும் துரிதமாக நடைபெறுவதாக காட்டிகொள்வோம்
நோயாளி அரைமயக்கத்தில் இருக்கும்படி பார்த்துகொள்வோம் நிதானமாக ஒவ்வொரு அறுவை சிகிச்சையாக செய்து முடிப்போம் குறித்து கொடுத்த நேரத்துக்கெல்லாம் எதுவும் நடக்காது ஆனால் அந்த நேரத்தில் தான் குழந்தை பிறந்ததாக குறித்து கொடுத்துவிடுவோம் என்றார்
மனித ஆசை தடமாறி போவதனால் எத்தகைய ஒழுங்கினங்கள் எல்லாம் சமூகத்தில் நடைபெறுகிறது பாருங்கள் பணத்திற்காக ஜோதிட சாஸ்திரம் விலை போகிறது அதே பணத்திற்க்காக மருத்துவ சேவை தலைகுனிகிறது இதற்கு மனிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சம்பந்தப்பட்ட துறைகளை குறைசொல்லி எந்த பயனும் இல்லை
சாஸ்திரத்திற்கு விரோதமாக நேரம் குறிப்பது குறித்த நேரத்தில் நடந்ததாக மருத்துவர்கள் பொய் சொல்வது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அப்படி குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் நிச்சயமாக அப்படி தான் அதாவது நன்மையை மட்டுமே வாழ்நாளில் அனுபவிப்பதாக இருக்குமா என்று சிலர் கேட்கலாம் அவர்களுக்கு எனது பதில் இது தான் அத்தகைய குழந்தையின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றால் அவர் நல்ல பலனை சொல்வார் நாமும் காது குளிர கேட்கலாம் ஆனால் அது அந்த குழந்தையின் வாழ்வில் முழுமையாக நடைபெறும் என்று சொல்ல முடியாது அல்லது அப்படி எதுவும் நடக்காது
ஒரு மனிதன் பிறந்த நேரத்தை பொறுத்து தான் கிரகங்கள் பலன் தரும் என்கிறீர்கள் கிரகங்கள் நன்றாக இருக்கும் போது தானே அந்த குழந்தையின் பிறப்பு நடைபெறுகிறது அப்போது ஏன் நல்ல பலன் கிடைக்காது என்று சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் நினைக்கலாம் ஒரு மனிதனின் மரணம் என்பது எப்படி இறைவன் சித்தத்தால் நடை பெறுகிறதோ அதே போல தான் ஜனனம் என்பதும் நடக்கிறது
அதாவது ஒரு பெண்ணிற்கு இயற்கையான முறையில் பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறக்க வேண்டும் குழந்தையை சுகபிரசவமாக பெறுகிறோமா? அறுவை சிகிச்சையின் மூலம் பெறுகிறோமா? என்பது முக்கியமல்ல பிரசவவலி என்பது இயற்கையான முறையில் உருவானதாக இருக்க வேண்டும் செயற்கை முறையில் வரவழைக்கபட்டதாக இருக்க கூடாது இங்கு நாம் குறிப்பிடும் அறுவை சிகிச்சை முறை என்பது வலியே ஏற்படாமல் வலிய நம்மால் ஏற்படுத்தப்பட்டது ஆகும் இதனால் இறைவன் வகுத்த விதியை நாம் மீறுகிறோம் இது நடைமுறைக்கு உகந்தது அல்ல
இதே போலவே நேரம் குறித்து பெற்றெடுக்கபட்ட குழந்தைகளின் ஜாதகங்களையும் வாழ்க்கையையும் நான் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன் குழந்தையின் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் தெளிவாக பேசவேண்டும் என்று கணக்கு போட்டு நேரம் குறித்து பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமலும் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதை பார்க்கிறேன் பிறந்த நாள் முதல் தகப்பனுக்கு வளர்ச்சியை தவிர வேறு எதையுமே தரக்கூடாது என்று போட்ட கணக்கு திசை மாறி தகப்பன் இல்லாமலே வாழ வேண்டிய நிலைமை குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பதையும் பாக்கிறேன் தாயும் தகப்பனும் குழந்தையை பாராட்டி சீராட்டுவார்கள் என்று போட்ட கணக்கு தலைகீழாகி கணவனும் மனைவியும் விவாகரத்து வாங்கி பிரிந்து நிற்பதையும் பார்க்கிறேன்
ஜாதகம் எழுதும் போது ஜனனே ஜென்ம செளக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் என்று துவங்குவார்கள் அதாவது இந்த ஜாதகன் பிறந்திருக்கும் இடமும் இவன் உடலின் ஆரோக்கியமும் இவன் குடும்ப கெளரவமும் பட்டம் பதவிகளும் எல்லாமே இவனது சென்ற பிறப்பின் பாவ புண்ணிய செயலை பொறுத்தே அமைகிறது என்பது தான் இதன் பொருள் அதனால் நமது கர்மாவுக்கு ஏற்ற பிறப்பு நேரத்தை கடவுள் குறித்து வைத்துள்ளான் அந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் தான் முறையே தவிர நாமே ஒரு நேரத்தை குறித்து அதில் பிள்ளையை எடுப்பது எந்த வகையிலும் முறையாகாது
மேலும் இப்படி செய்ய நினைப்பவர்கள் ஒரு உண்மையை நன்றாக மனதில் வைக்க வேண்டும் நீங்கள் அரும்பாடு பட்டு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்தாலும் கடவுள் தீர்மானித்த நேரத்தில் பிறந்தால் என்ன பலனை குழந்தை பெறுமோ அதே பலனை தான் இந்த நேரத்திலும் குழந்தை பெரும் வேண்டுமானால் நீங்கள் நல்ல பலனை ஜோதிடர் வாயிலும் புத்தக வரியிலும் காணலாமே தவிர நிஜ வாழ்க்கையில் காண முடியாது
இந்த உண்மைகளை எல்லாம் அந்த பெரியவரிடம் சொல்லி விளங்க வைக்க பார்த்தேன் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்தது நேரம் குறிப்பதில் குறியாக இருந்தாரே தவிர நான் சொல்லியதை அவர் காதில் வாங்கி கொள்ளவே இல்லை அதனால் என்னால் முடியாது சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டேன் நீங்களும் புதியதாக குழந்தைகள் பெற்று கொள்பவர்களாக இருந்தால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் உணராதவர்களுக்கு உணர்த்த பாருங்கள் கேட்க மறுத்தால் விதி விட்டவழி என்று விட்டு விடுங்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
நவீன யுகத்தில் இந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த ஜோதிடரும் புதுமைகளையோ, உலகில் மாற்றங்களையோ நிகழ்த்தவில்லை. அனைத்தும் அறிவியலில் சாத்தியமாகிறது. எனவே அறிவியலின் மாற்றங்களையும் ஜோதிடத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்
வணக்கம் கேசவன். நலமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன்
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
Aathira wrote:பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன்
வணக்கம் ஔவையே? நலமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
நான் மிகவும் நலமாக இருக்கிறேன், நீங்கள் நலமா?சிவா wrote:KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்
வணக்கம் கேசவன். நலமா?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
KESAVAN wrote:நான் மிகவும் நலமாக இருக்கிறேன், நீங்கள் நலமா?சிவா wrote:KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்
வணக்கம் கேசவன். நலமா?
இன்று முதல் நானும் நலம் கேசவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
நலம் அதியனே. எங்கே நெல்லிக்கனி? இரண்டு மாதம் புற வேட்டைக்குச் சென்று திருப்பியுள்ளாய்.சிவா wrote:Aathira wrote:பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன்
வணக்கம் ஔவையே? நலமா?
இப்பத்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன் சிவா.
Re: ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !
Aathira wrote:
நலம் அதியனே. எங்கே நெல்லிக்கனி?
நெல்லிக்காய் மட்டுமே உள்ளதாம். நெல்லிக்கனி என்று யாரோ உங்களை ஏமாற்றியுள்ளார்கள். இதற்காக நானும் இரண்டு மாதம் அலைந்து திரிந்து இறுதியில் அமெரிக்க நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததில் நெல்லிக்காய் மட்டுமே உள்ளதாம். நெல்லிக்கனி வர வாய்ப்பில்லையாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!
» வாழ்க்கையை தீர்மானிக்கும் வார்த்தைகள்
» இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!
» மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
» எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
» வாழ்க்கையை தீர்மானிக்கும் வார்த்தைகள்
» இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!
» மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
» எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|