ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி

2 posters

Go down

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி Empty யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி

Post by இளமாறன் Tue Oct 25, 2011 1:44 am

சென்னை : நாளொறு மேனியும், பொழுதொரு மோசடியுமாய், உலகம் மாறி விட்டது என்பதற்கு, சென்னையில் நடந்துள்ள, நூதன கிரெடிட் கார்டு மோசடி, வாடிக்கையாளர்களை கலங்கடிக்கிறது. இந்த மோசடி, கிரெடிட் கார்டோடு மட்டும் நில்லாமல், கொரியர் மூலம் அனுப்பப்படும் பல பொருட்களையும், "பதம்' பார்க்கும் சூழல் உருவாவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்கள், ஏதாவது செய்தே தீர வேண்டும். வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு, கூரியர் மூலம் செல்லும் கிரெடிட் கார்டுகளில் இருந்து விவரங்களை திருடி, புதிய கார்டு தயாரித்து, பண மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட நால்வரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து, வாடிக்கையாளர்களிடம் கார்டு செல்லும் முன்பே, அதில் விவரங்களை பெற்று, புதிய கார்டு தயாரித்து, புதிய, "டெக்னிக்'கை பயன்படுத்தியுள்ள இவர்கள், தாங்கள் தயாரித்த கார்டு மூலம், பலரை ஏமாற்றியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மோசடியில் இது புதுசு: சென்னை, அண்ணா சாலையில் உள்ள சிட்டி பாங்க், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த வங்கியில், கார்டுக்காக விண்ணப்பித்த ஒருவருக்கு, கார்டு வருவதற்கு முன்பே, அவரது கணக்கில், 8,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளதாக, வங்கிக்கு புகார் வந்தது. இது போல், பல வாடிக்கையாளர்கள், வங்கிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவு மேலாளர் , சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தார். புகாரில், வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை, ஸ்கிம்மர் மூலம் திருடிய யாரோ ஒருவர், 2 லட்சத்து, 53 ஆயிரத்து, 687 ரூபாய் திருடி விட்டதாக தெரிவித்திருந்தார்.

புகார் தொடர்பாக, மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு, துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான்ரோஸ் தலைமையில், தனிப்படை போலீசார், விசாரணையை துவக்கினர்.
வாடிக்கையாளரிடம் கார்டு கிடைக்கும் முன்பே, பணம் திருடப்பட்டதால், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கார்டை வினியோகிக்கும், "புளூ டார்ட்' கூரியர் நிறுவன ஊழியர்கள் மீது, போலீசின் பார்வை திரும்பியது. போலீசார், அங்கு பணியாற்றும், வியாசர்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர், 30, ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 20, ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, தங்களுக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றிய, மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி, 32, என்பவரின் பெயரை அவர்கள் ஒப்பித்தனர்.

விசாரணையில், "பகீர்:' தொடர்ந்து, பாலாஜியும் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது: பாடிகுப்பத்தைச் சேர்ந்த வினோத், 28, என்ற வாலிபர், ஆட்டோ டிரைவரான பாலாஜியை அணுகி, கூரியர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செல்லும் கார்டு விவரங்களை, ஸ்கிம்மரை பயன்படுத்தி எடுத்துத் தந்தால், ஒரு கார்டு தகவலுக்கு, 1,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இந்த விவரத்தை, கூரியர் நிறுவன பணியாளர்கள் ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் கூற, அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பின், சிட்டி பேங்கில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும், கூரியர் தபால்களை, வெப்பக்காற்று வீசும் புளோயர் இயந்திரத்தின் மூலம் பிரித்து, கார்டுகளை எடுத்து, அதில் உள்ள விவரங்களை, ஸ்கிம்மர் மூலம் பதிவு செய்து விட்டு, மீண்டும் ஒட்டி, தபால்களை, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடுவர்.

அந்த ஸ்கிம்மர் உதவியுடன், கோயம்பேட்டில் உள்ள வினோதின் வீட்டில் வைத்திருக்கும், மும்பையில் வாங்கப்பட்ட என்கோடர், எம்போசர், இ.டி.சி., இயந்திரங்கள் மூலம் புதிய கார்டு தயாரித்து, அதன் மூலம் பணம், பொருள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளது தெரிந்தது.

விக்னேஷ், ஸ்ரீதர், பாலாஜியைத் தொடர்ந்து, வினோதையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கார்டு தயாரிக்கும் இயந்திரங்கள், வாடிக்கையாளர்கள் விவரம், பதிவு செய்யப்படாத காலி கிரெடிட் கார்டுகள், ஸ்கிம்மர்கள், வாட்ச், கேமரா, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள், ஹேமந்த் குமார் என்பவர், சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில், இருவேறு போட்டோக்கள், பிறந்த தேதி மற்றும் தந்தை பெயர் விவரங்களை அளித்து வாங்கிய இரண்டு பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை, போலீசார் தேடிவருகின்றனர்.

கண்டுபிடிப்பதும், தடுப்பதும் கடினம்!

கிரெடிட் கார்டு மோசடியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர, சென்னை திருவொற்றியூர், சரஸ்வதி தெருவில் செயல்பட்டு வந்த, திருட்டு டி.வி.டி., தொழிற்சாலையை போலீசார் சோதனையிட்டு, அங்கிருந்த, 250 டி.வி.டி., ரைட்டர்கள் மற்றும் 25 ஆயிரம் சி.டி.,க்களையும் கைப்பற்றினர். இவற்றை, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங் பார்வையிட்டார். உடன், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, அபெய்குமார் சிங் கூறும் போது, ""இதற்கு முன்பு பிடிபட்ட கும்பலும், இவர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருபவர்கள். ஒரு கார்டில் இருந்து டேட்டா திருட, 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கார்டுகள் மூலம் பணம் திருடப்படுவது தொடர்பாக, தினசரி, புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சைபர் கிரைம் தொடர்பான இந்த குற்றங்களில் எவ்வளவு பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள் செயல்படுகின்றனர் என்பதை கண்டுபிடிப்பது கடினம். இவற்றை தடுப்பதும் கடினம்,'' என்றார்.

பின் நம்பரை மாற்றுங்கள்!

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா கூறும் போது, ""கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏ.டி.எம்., இயந்திரத்தில் பயன்படுத்துவோர் ஏராளம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்தவர்கள் பணத்தை திருடுபவர்களும் அதே அளவிற்கு பெருகிவிட்டனர். எனவே, கார்டுகளை பயன்படுத்துவோர், அடிக்கடி ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டால் நல்லது. ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பவர்கள், அதற்கான தனி வங்கிக் கணக்கை கூட பராமரிக்கலாம்,'' என்றார். தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி Empty Re: யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி

Post by கேசவன் Tue Oct 25, 2011 9:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி 1357389யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி 59010615யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி Images3ijfயாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum