ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனா…….ஒரு சிறு குறிப்பு…..

3 posters

Go down

பேனா…….ஒரு சிறு குறிப்பு….. Empty பேனா…….ஒரு சிறு குறிப்பு…..

Post by ஒட்டக்கூத்தன் Fri Oct 14, 2011 3:28 pm


பேனா…….ஒரு சிறு குறிப்பு…..
பின்குறிப்பு : இது கவிதையல்ல…
அன்புடன் - ஒட்டக்கூத்தன்…


சில பேரின் கைகளில்
சில்லரைகளுக்காக தலைகுனிகிறது…
என்றைக்குமே அவர்கள் பேனா
நிமிர்ந்து பார்த்ததே கிடையாது…
அந்த பேனாக்கள் தங்கள்
முக மூடிகளை கழற்றிய உடனே
தன் வாயிலிருந்து எச்சிலை
உமிழ்கின்றன…
பெண்ணுடல்இ காம ரசம்இ
இவைகளை துப்பி துப்பியே
இந்த சமுதாயத்தை அழுக்காக்கியிருக்கின்றன…
கவிஞன் எல்லாவற்றிலும்
அழகியலை புகுத்துகின்றான்
உண்மைதான்…
இந்த அழகியலும்
சில நேரங்களில்
அழுக்கியலாக மாறியிருக்கிறது….
பல புரட்சிகளைஇ உருவாக்கிய பேனா…
பல சமுதாய சீர்கேடுகளை
புரட்டி போட்ட பேனா…
கலை வளர்த்து
களிப்பேற்றிய பேனா…
மனதை சமமாக்கி
மனித நேய விதையை
விதைத்த ஆன்மீக பேனா….
அநீதியை தட்டி கேட்க
தோள் தட்டி புறப்பட்டு சென்ற
துப்பாக்கி பேனா…
துக்கத்தால் துவண்டு
வழுக்கி விழுந்தவர்களை
விலா நோக சிரிக்க வைத்த
நகைச்சுவை பேனா….
அந்த பேனாக்கள்….
சிந்திய தேன் துளிகளில்
பல துளிகள்…
கற்பனை வாட்டத்தில்
காய்ந்து விட்டன….
காய்ந்துவிட்ட காரணத்தால்
அந்த அற்புத பேனாக்களும்
மாய்ந்து விட்டன…
ஆயிரம் துப்பாக்கி முனைகளின்
துந்துபி முழக்கத்தை விட
ஒரு பேனா முனை
மிகவும் வலிமையானது என்பது
எவ்வளவு பெரிய உண்மை…?
நமது வரலாறுகளை
புரட்டி பார்க்கின்ற போது…
பாரதியின் பேனா…
ஆயிரம் பீரங்கிகளுக்கு
சமமானது…
அவன் எழுத்து…
பல பிரபஞ்சங்கள் புதிதாக முளைத்து
வீழ்ந்து…மீண்டும் வந்தாலும்
அடிமைத்தனத்தை
மீண்டும் அண்ட விடாது..
தன் நாக்கு
முதன் முதலில்
அன்னத்தை தொடும் போது
ஒலித்த தாய் மொழியை தவிர
வேறு எம்மொழியையும்
பாரதிதாசனின் வேல் வீசும் வார்த்தைகள்…
அனுமதிக்காது.
சாதியத்தை..
மனித மனத்தை
காயப்படுத்திய பிரிவினைகளை…
என்றைக்குமே
பெரியாரின் வைரவரிகள்
சுட்டெரித்து விடும்…
பாரப்பட்டு.
வேதனைகளைத் தாங்கி…
மகிழ்சிசிக்காய்
ஏங்கித் தவிக்கும் பல
நெஞ்சங்களைத் தன் வார்த்தைகளால்
மருந்திட்டுஇ தோகையால் வருடிவிட்ட
கண்ணதாசனின் சாமர விசிறி
போன்ற வார்த்தைகள்
காலாகாலத்திற்கும்
நம்மை ஆறுதல் படுத்தும்…
அந்த பேனாக்களின்
மையில் மெய்மட்டும்தான்
நிர்ப்பப்பட்டு இருந்தது…
உண்மை குடியிருந்த காரணத்தால்…
அதிலிருந்து தெரித்த வார்த்தைகள்
சமூக அவலங்களை தீயாய்
சுட்டெரித்தது.
அந்த எழுத்துக்கள்
புழுத்துப்போன பொய்களை எல்லாம்…
வெளுத்துக்காட்டிஇசாயம் போக வைத்தது..
இன்றைக்கும் எழுதுகிறார்கள்..
ஒற்றை முனைக் கொண்ட அந்த பேனர்
கூசக் கூச எழுதுகிறார்கள்.
.சமூகம் அவர்களைத்தான்
கவிஞன் என கொண்டாடுகிறது..
ஆம்…
திரைப்படத்திற்கு
பாடல் எழுதினால் மட்டும் தான்…
அவன் அரசவை கவிஞனாகிறான்.
அதிகார வர்க்கத்திற்கு
தலைகுனிந்து தலைகுனிந்தே
இங்கே சில கவிஞர்களுக்கு
கிரீடம் முளைத்திருக்கிறது….
காக்காவை
மட்டும் தான் அவர்கள்
தங்கள் தேசிய பறவையாய்
அங்கீகரித்திருக்கிறார்கள்..
அவர்களுக்கு வாய்த்த தமிழை
அதிகாரத்திற்கு அபிசேகம்
செய்வதற்கே பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் பேனா
உதிர்க்கும் சொல் மலர்கள்
பாவம்…
கல்லரைகளுக்கு
மட்டுமே தூவப்படுகின்றன..
மக்களுக்கு
அறிவூட்டி
ஐந்தாம் தூணாய் இருந்த பேனா…
ஊனப்பட்டு கிடக்கிறது…
அதிகாரத்தை
மயக்குவதற்கு…காலம் பார்த்து பார்த்து….
பென்னியா…-இது லத்தீன்…
“பறவையின் இறகு”
என்பது பொருள்….
பேனா…- இது நாம் சொல்வது….
லத்தினிலிருந்து வந்த வார்த்தை பேனா….
உண்மைதான்….
அதிகார சூரைக்காற்றில்
நிலைக் கொள்ளாமல்
பறந்தபடி திரிகிறது….
இந்த..
“பறவையின் இறகு”…!!!



avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

பேனா…….ஒரு சிறு குறிப்பு….. Empty Re: பேனா…….ஒரு சிறு குறிப்பு…..

Post by kitcha Fri Oct 14, 2011 3:37 pm

மக்களுக்கு
அறிவூட்டி
ஐந்தாம் தூணாய் இருந்த பேனா…
ஊனப்பட்டு கிடக்கிறது…
பல சிந்தனைகளை உள்ளடக்கிய வரிகள். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அன்று பேனா பிடித்து எழுதியவர்கள் பேனாவின் மூலம் புரட்சி எழுந்தது.இன்று பேனா பிடித்து எழுதுபவர்கள் தங்கள் வயிற்றுப் பசிக்கும் புசிக்கும் ஏற்ற வாறு அவர்களை மாற்றிக் கொள்ளும், வாழும் காலம் இது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேனா…….ஒரு சிறு குறிப்பு….. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேனா…….ஒரு சிறு குறிப்பு….. Empty Re: பேனா…….ஒரு சிறு குறிப்பு…..

Post by rameshnaga Fri Oct 14, 2011 3:46 pm

இது கவிதை அல்ல என்று சொன்னாலும்...கவிதையை நெருங்கியே இருக்கிறது. நன்றாய் இருக்கிறது..வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பேனா…….ஒரு சிறு குறிப்பு….. Empty Re: பேனா…….ஒரு சிறு குறிப்பு…..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum