Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
i6appar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
3 posters
Page 1 of 1
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! 02kalyanasundaram300](https://2img.net/r/ihimizer/img16/892/02kalyanasundaram300.jpg)
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர் பி.எம். கல்யாண சுந்தரம், இப்போதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளார். அதுவும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதால் அதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம் நடத்தியுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் ரங்கசாமி அமைச்சரவையில் போக்குவரத்து, கல்வி அமைச்சராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காதவர். கடந்த 1991ல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய இவர், அறிவியல், சோஷியல் சயின்ஸ் ஆகிய இரு பாடங்களிலும் தோல்வியுற்றார்.
தற்போது அமைச்சராகி விட்ட நிலையில் பத்தாம் வகுப்பை எப்படியாவது பூர்த்தி செய்ய விரும்பி தனித் தேர்வராக விண்ணப்பித்தார். அவருக்குத் திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு அவருக்குப் பதில் அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் பரீட்சை எழுதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்யாண சுந்தரம் ஆள் மாறாட்டம் செய்து வி்டடதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸார், கிழக்குக் கடற்கரைச் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய அமைச்சரால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக கல்வித்துறை விசாரணை
இதற்கிடையே அமைச்சர் ஆள் வைத்து தேர்வு எழுதயி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துப் புகார் வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீதான புகார்களை கல்யாண சுந்தரம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது பொய்யான புகார். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் எதிர்க்கட்சியினர் இந்த அவதூறை சுமத்தி வருகின்றனர். நான்தான் தேர்வு எழுதினேன். இதுதொடர்பாக எந்த விசாரணை நடந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார் கல்யாண சுந்தரம்.
புதுவையில் என். ஆர் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிந்ததுமே கூட்டணி நொறுங்கிப் போய் விட்டது. அன்று முதல் இன்று வரை புதுச்சேரி அதிமுகவினர், ரங்கசாமி கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கல்யாண சுந்தரம் விவகாரம் புதுச்சேரி அதிமுகவினருக்குப் புதிய ஆயுதமாக வந்து அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்து ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி புதுவை அதிமுக தயாராகி வருகிறது.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
3 ஆண்டு தேர்வு எழுத முடியாது: புதுவை கல்வி அமைச்சரை நேரில் அழைத்து விசாரிப்போம்; மாவட்ட கல்விஅதிகாரி தகவல்
விழுப்புரம், அக். 3-
புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் தனித்தேர்வு மூலம் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதினார். இதில் சமூக அறிவியல் தேர்வில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதையடுத்து முழுமை யாக விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் உத்தரவிட்டார்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து இதன் அறிக்கையை கல்வித் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்மந்தமாக கல்வி அதிகாரி குப்புசாமி கூறியதாவது:-
அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது வந்த புகாரை அடுத்து நாங்கள் எங்கள் துறையின் விதிமுறைகள்படி முழுமையாக விசாரணை நடத்தி இருக்கிறோம். இதன் அறிக்கை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளில் உள்ள கையெழுத்து அமைச் சருடையது தானா என்பதை கண்டறிய கையெழுத்து பரிசோதனை நடத்தவும் நாங்கள் சிபாரிசு செய்து இருக்கிறோம்.
அவர் தவறு செய்தது உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. தேவைப்பட்டால் அவர் மீது நாங்கள் விசாரணை நடத்துவோம். தேர்வுத்துறை இயக்குனரகம் விரும்பினால் தேர்வு விதிமுறைப்படி அவரை நேரடியாக அழைத்தும் விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்யாணசுந்தரம் திண்டிவனம் தாகூர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பரீட்சை எழுதினார்.
இது சம்பந்தமாக பள்ளி சேர்மன் தினகரன் கூறியதாவது:-
சம்பவத்தன்று 400 பேர் எங்கள் மையத்தில் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் 100 பேர் புதுவையை சேர்ந்தவர்கள். எங்கள் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி என்னிடம் கூறும் போது அமைச்சருடைய ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை சரிபார்த்து தான் நாங்கள் பரீட்சை எழுத அனுமதித்தோம் என்றார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடப்பதால் மேற்கொண்டு எங்களால் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய மந்திரி நாராயண சாமியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், அமைச்சர் கல்யாணசுந்தரத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். மாலைமலர்
புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் தனித்தேர்வு மூலம் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதினார். இதில் சமூக அறிவியல் தேர்வில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதையடுத்து முழுமை யாக விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் உத்தரவிட்டார்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து இதன் அறிக்கையை கல்வித் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்மந்தமாக கல்வி அதிகாரி குப்புசாமி கூறியதாவது:-
அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது வந்த புகாரை அடுத்து நாங்கள் எங்கள் துறையின் விதிமுறைகள்படி முழுமையாக விசாரணை நடத்தி இருக்கிறோம். இதன் அறிக்கை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளில் உள்ள கையெழுத்து அமைச் சருடையது தானா என்பதை கண்டறிய கையெழுத்து பரிசோதனை நடத்தவும் நாங்கள் சிபாரிசு செய்து இருக்கிறோம்.
அவர் தவறு செய்தது உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. தேவைப்பட்டால் அவர் மீது நாங்கள் விசாரணை நடத்துவோம். தேர்வுத்துறை இயக்குனரகம் விரும்பினால் தேர்வு விதிமுறைப்படி அவரை நேரடியாக அழைத்தும் விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்யாணசுந்தரம் திண்டிவனம் தாகூர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பரீட்சை எழுதினார்.
இது சம்பந்தமாக பள்ளி சேர்மன் தினகரன் கூறியதாவது:-
சம்பவத்தன்று 400 பேர் எங்கள் மையத்தில் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் 100 பேர் புதுவையை சேர்ந்தவர்கள். எங்கள் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி என்னிடம் கூறும் போது அமைச்சருடைய ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை சரிபார்த்து தான் நாங்கள் பரீட்சை எழுத அனுமதித்தோம் என்றார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடப்பதால் மேற்கொண்டு எங்களால் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய மந்திரி நாராயண சாமியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், அமைச்சர் கல்யாணசுந்தரத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
10 வகுப்பே பாஸ் பண்ணாம ஒரு கல்வி அமைச்சர்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
""புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்""
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!
இந்த பதிவு முன்னரே உள்ளதால் அதனுடன் இதை இணைத்து விட்டேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 10-ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்: புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 4 வருடம் ஜெயில்......
» பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?
» சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
» பத்தாம் வகுப்பு தேர்வு விபரம்
» பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?
» சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
» பத்தாம் வகுப்பு தேர்வு விபரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|