ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

2 posters

Go down

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  Empty தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

Post by jesudoss Thu Sep 29, 2011 11:38 am

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் மீது ஒரிருநாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., திட்டவட்டமாக கூறியது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, 2001 முதல் 2007 வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை சி.பி.ஐ., துவக்கியபோது, ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ., யிடம் தெரிவித்த புகாரால் திருப்பம் ஏற்பட்டது. "தனது நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்படி, அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி நெருக்கடி கொடுத்ததாக' சி.பி.ஐ.,யிடம், சிவசங்கரன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரது புகாரில், "என் நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்தபோது, உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள், மேக்சிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு மாதத்துக்குள், அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது' என, தெரிவித்திருந்தார்.இந்த புகார் குறித்தும், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினரும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷல், கடந்த சில வாரங்களுக்கு முன், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

தயாநிதி அமைச்சராக இருந்தபோது, மேக்சிஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், அதற்கு பதிலாக, மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் "டிவி'யில், மேக்சிஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் புகார் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள், ரால்ப் மார்ஷலிடம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து, தயாநிதியிடமும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை நடத்தியது.

இந்நிலையில், "2ஜி' வழக்கில் தற்போதை நிலை குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இதுவரை விசாரணையில் நடந்த முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை, சீலிட்ட கவரில் வைத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வழங்கினார்.

இந்த அறிக்கையில், தயாநிதி பற்றி குறிப்பிட்டுள்ள பகுதிகளை மட்டும் வேணுகோபால், நீதிபதிகள் முன் வாசித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:"2ஜி' வழக்கு தொடர்பாக, தயாநிதியிடம் முதற்கட்ட விசாரணை நடந்துமுடிந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது. தயாநிதி, மற்றும் அவரது சகோதரர் கலாநிதி உட்பட ஐந்து பேர் மீது, இன்னும் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தயாநிதியின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ரூ.549 கோடி சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டியிடமும் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் ரால்ப் மார்ஷலிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எஸ்ஸார் -லூப் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், கலாநிதி மற்றும் தயாநிதி இடையேயான ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை, இன்னும் நிலுவையில் உள்ளது. இது முடிவுக்கு வருவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகும்.எஸ்ஸார் குழுமம், லூப் டெலிகாம் என்ற பெயரில் ஒரு கம்பெனியை துவக்கி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்சை முறைகேடாக வாங்கியுள்ளது. இந்த விசாரணை தாமதத்தால் தான் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கலாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.


dinamalar


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  154550 தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  154550 தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  Empty Re: தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

Post by ARR Thu Sep 29, 2011 1:32 pm

சிபிஐ சும்மா கெடந்து அடிச்சுக்குது..

கடைசில ஒண்ணுமே ஆகப்போறதில்ல..!


தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  0018-2தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  0001-3தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  0010-3தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum