ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் பொங்கும் ஆனந்தம்

4 posters

Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா Thu Sep 29, 2011 8:29 am

எங்கும் பொங்கும் ஆனந்தம் Sm04

கருணைக்கடல் அமிர்தானந்தமயி வீற்றிருக்கும் (கேரளாவில் உள்ள) அமிர்தாபுரியில் எங்கு பார்த்தாலும், `அம்மா' என்ற கோஷம்! அதிகாலையிலே விழிக்கும் அந்த ஊர் பஜனை, ஹோமங்கள், பாடல்கள் என்று பக்திபூர்வமாய் நள்ளிரவு வரை விழித்திருக்கிறது. எங்கும் ஆனந்தம் பொங்குகிறது.

திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் அம்மா தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். 14, 15 மணி நேரம் ஆனாலும் அத்தனை பேரையும் சந்தித்து ஆசி வழங்கும் வரை அவர் எங்கும் எழுந்து செல்வதில்லை. மகிழ்ச்சி, துக்கம் போன்ற அனைத்தையும் பக்தர்கள் அவரிடம் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

அமிர்தானந்த மயியிடம் சில கேள்விகள்:


அம்மாவை எல்லோரும் எதனால் தாயாகப் பார்க்கிறார்கள்?

"அவர்கள் என்னை அம்மா என்று அழைக்கிறார்கள். அதனால் நான் அவர்களை `மக்களே' என்று அழைக்கிறேன். உலகத்திலே ஒரு களங்கம்கூட இல்லாத அன்பு அம்மாவிடம் இருந்துதான் கிடைக்கிறது. அந்த அன்பை அவர்கள் என்னிடம் காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லோருடைய மனதிலும் ஒரு குழந்தை உண்டு. அது கள்ளங்கபடமின்றி மனதுக்குள் ஒளிந்துகிடக்கிறது. எல்லா மதங்களும், மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள் என்று சொல்கிறது. நான் அதைத்தான் செய்கிறேன். எந்த உணர்வுக்கும் அதற்குரிய அதிர்வு உண்டு. கோபத்திற்கு ஒரு அதிர்வு. ஒரு தாய் தன் குழந்தையோடு காட்டும் வாஞ்சைக்கு இன்னொரு அதிர்வு. நிபந்தனையற்ற அன்பின் அதிர்வு மனித மனதை சுத்திகரிக்கும். அன்புதான் என் தர்மம்..''

எவ்வளவோ மக்களுடைய கஷ்டங்களை எல்லாம் கேட்கிறீர்கள். அதனால் அம்மாவுக்கு கவலை ஏற்படுவதுண்டா?


"அப்படி நான் கவலைப்பட்டால் அது சரியாக இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அவரது குடும்பத்தினரும் வருகிறார்கள். அவர் இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பார் என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அந்த கவலை அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தில் தெரியும் போது அம்மாவின் மனதும் வேதனைப்படும். ஆனால் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், அவருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பதை பற்றித்தான் அம்மா அப்போது சிந்திப்பேன். துக்கப்படுகிறவர்களின் வேதனையிலும், மகிழ்ச்சி அடைகிறவர்களின் சந்தோஷத்திலும் நான் பங்குகொள்கிறேன்..''

அம்மா நீங்கள் கனவு காண்பீர்களா?

"உலகம் நன்மை பெறவேண்டும் என்பதுதான் என் கனவு. உலகில் உள்ள எல்லோருக்கும் உணவு கிடைக்கவேண்டும். எல்லோரும் மழையில் நனையாமல் தூங்கவேண்டும். போர் எதுவும் இன்றி அமைதியாக வாழவேண்டும். இதுதான் நான் காணும் கனவு..''

பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கிவிட்டு, மீதமுள்ள நேரங்களில் அம்மா என்ன செய்வீர்கள்?

"சில நாட்கள் அதிகாலை நான்கு மணிக்கு மேலும் தரிசனம் நீளும். பார்க்க வரும் அத்தனை மக்களையும் பார்த்துவிட்டே அம்மா அந்த இருக்கையில் இருந்து எழுவேன். அறைக்குள் நான் செல்லும்போது நூற்றுக்கணக்கில் கடிதங்கள் இருக்கும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். முக்கியமானவைகளுக்கு நானே நேரடியாக பதில் அளிப்பேன். ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் அழைப்பேன். உப்பு முதல் கற்பூரம் வரையுள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அம்மாதான் கொடுப்பேன்...''

கடவுளை அம்மா எந்த வடிவத்தில் பார்க்கிறீர்கள்?

"எல்லாம் கடவுள்தான். சிறுவயது முதலே எனக்கு இயற்கைதான் இறைவன். நதியிலும், மரங்களிலும், பிராணிகளிலும் எல்லா உயிர்களிலும் அம்மா இறைவனை பார்க்கிறேன்..''

நூறு வருடங்கள் கழித்து அம்மாவின் அமைப்புகள் எப்படி செயல்படும் என்று சிந்திப்பதுண்டா?

"இல்லை மகனே, அம்மா அப்படி எதுவும் சிந்திப்பதில்லை. எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. சூழ்நிலைகள் வரும்போது அதற்கு தக்கபடி செயல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த கிராமத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் இருந்தார்கள். செயற்கை வால்வுகள் பொருத்துவது அப்போது மிக அரிதாக இருந்தது. அன்றைய கூலியைக்கொண்டு சாப்பாட்டை கழிப்பவர்களுக்கு இதய வால்வு வாங்க முடியுமா? அந்த சூழ்நிலையில் அது பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினோம். ஆஸ்பத்திரி தொடங்கினோம். எல்லா சேவைகளும் அந்தந்த சூழ்நிலைகளை அனுசரித்து தொடங்கப்பட்டவை. அப்படியே புதிய புதிய பாதைகளில் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்...''

அடுத்த ஜென்மத்தைப் பற்றி அம்மா சிந்திப்பதுண்டா?

"அதைப் பற்றி அம்மா சிந்திப்பதில்லை. பலவித கலாசாரங்கள், மதங்களைச் சார்ந்தவர்கள் அம்மாவை பார்ப்பதற்கு வருகிறார்கள். அதில் நல்லவர்கள், திருடர்கள் எல்லோரும் இருக்கலாம். அனைவருடைய சுக, துக்கங்களை அம்மா கேட்கிறேன். அவர்களோடு சந்தோஷத்திலும், கண்ணீரிலும் பங்குபெறுகிறேன். இப்போது நிற்கும் இடத்தை சுத்தப்படுத்திவிட்டல்லவா, அடுத்த இடத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்..''

நல்ல பிள்ளைகளாக வளர அம்மா கூறும் உபதேசம் என்ன?

"எல்லா பிள்ளைகளும் நல்லவர்கள்தான் மகனே! எல்லோரிடத்திலும் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. இவை இரண்டையும் அடையாளங்காண வேண்டும். பிள்ளைகளுக்கு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். பொய் சொன்னால் கண்கள் வெடித்துவிடும் என்று குழந்தைகளிடம் நாம் சொல்வதுண்டு. அது சரி என்றால், இந்த உலகத்தில் அனைவரும் பார்வையை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அந்த பயம், குழந்தைகளிடம் பொய் சொல்லாத நிலையை உருவாக்கும். அதுபோல் கடவுளோடு உள்ள பயபக்தி நம்மிடம் தர்ம செயலை வெளிப்படுத்தும்.

வாகனங்களை ஓட்டிச் செல்வதற்காக ரோடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரோட்டில் நினைத்தபடி எல்லாம் வாகனம் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வாழ்க்கையும்! தர்மத்தை நம்பி வாழவேண்டும். நாம் தனித்தீவு அல்ல. வெகுநீள சங்கிலியாக அனைவரும் பிணைக்கப்பட்டிருப்பதால், நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் செயல்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்..'' என்கிறார், அமிர்தானந்தமயி.

தினதந்தி


எங்கும் பொங்கும் ஆனந்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 8:33 am

நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா Thu Sep 29, 2011 8:50 am

nadesmani wrote:நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.

அந்த அம்மாவை இன்று நீங்கள் வாழ்க மட்டுமே சொல்ல முடியும். இல்லையென்றால் நள்ளிரவில் கைது செய்யப்படுவீர்கள்.

எங்கும் பொங்கும் ஆனந்தம் 315566_2037484463074_1423116401_31909593_2101771966_n


எங்கும் பொங்கும் ஆனந்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 8:59 am

ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,

சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)

என்ன கொடுமை சார் இது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா Thu Sep 29, 2011 9:06 am

nadesmani wrote:ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,

சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)

என்ன கொடுமை சார் இது.

ம்ம்ம்ம்.... இப்பொழுதுதான் எங்கள் தங்கத் தலைவியின் அனல் பார்வை உங்கள் மீது படாமல் தப்பித்துக் கொண்டீர்.

வாழ்க சொல்லச் சொன்னதுக்கே இவ்வளவு அங்கலாய்ப்பு...

இது எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாருங்கப்பூ...!

எங்கும் பொங்கும் ஆனந்தம் Jayalalitha


எங்கும் பொங்கும் ஆனந்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 9:24 am

அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by உதயசுதா Thu Sep 29, 2011 10:10 am

இப்ப எல்லாம் பெத்தவங்களை கூட அம்மான்னு கூப்பிட மாட்டேங்குராங்க.யார் யாரையோ அம்மான்னு கூப்பிடராங்க.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கடவுளை நம்புங்கப்பா, இந்த மாதிரி கடவுள் வேஷம் போடுறவங்களை நம்பாதீங்க.


எங்கும் பொங்கும் ஆனந்தம் Uஎங்கும் பொங்கும் ஆனந்தம் Dஎங்கும் பொங்கும் ஆனந்தம் Aஎங்கும் பொங்கும் ஆனந்தம் Yஎங்கும் பொங்கும் ஆனந்தம் Aஎங்கும் பொங்கும் ஆனந்தம் Sஎங்கும் பொங்கும் ஆனந்தம் Uஎங்கும் பொங்கும் ஆனந்தம் Dஎங்கும் பொங்கும் ஆனந்தம் Hஎங்கும் பொங்கும் ஆனந்தம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா Thu Sep 29, 2011 10:12 am

nadesmani wrote:அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.

என்ன சான்ஸ், அம்மாகூட ஜோடி சேர்ந்து நடிக்க சான்ஸா!


எங்கும் பொங்கும் ஆனந்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by T.N.Balasubramanian Thu Sep 29, 2011 11:24 am

எளிமையானவர் !
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம் Empty Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum