ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Go down

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Empty வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Post by சிவா Thu Sep 29, 2011 8:02 am

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 3-ந் தேதி மாலை வெளியாகும்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன.

விறுவிறுப்பான தேர்தல் களம்

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. கூட்டணிகள் முடிவாகாததால் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல் பின்னர் தீவிரம் அடைந்தது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது.

நேற்று வரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 43 ஆயிரத்து 243 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி தேர்தலில் இதுவரை மேயர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 25 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மேலும் மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கும் நேற்று வரை 1,019 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,427 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 383 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 1,497 பேர் மனு தாக்கல் செய்தனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 9,366 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இன்று கடைசி நாள்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இன்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிவடைவதால், இன்று ஏராளமான பேர் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 3-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ததோடு வேட்பாளர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

பலமுனைப் போட்டி

இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்ïனிஸ்டு ஆகிய இரு கட்சிகளும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 31 மாவட்ட ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தினதந்தி


வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Empty Re: வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Post by சிவா Thu Sep 29, 2011 8:03 am

வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை, தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுகிறார்கள்

தமிழக உள்ளாட்சித்தேர்தலை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையர்கள் வர இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை என்னிடம் தெரிவித்தார்கள். 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தது. இந்த வன்முறையை நீதிபதிகள் கண்டித்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயக்கம்


அந்த நேரத்தில் தேர்தல் பார்வையாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எழுதி கொடுத்த அறிக்கைகள் ஏற்கப்படாமல், தலைமை செயலாளர் எழுதி கொடுத்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட சங்கடத்தின் காரணமாக சென்னையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயக்கம் தெரிவித்தனர்.

நான் அவர்களுக்கு, 100 சதவீதம் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட்டு தேர்தலை கண்காணித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுகிறவர்களின் சுதந்திரத்தில் மாநில தேர்தல் ஆணையமோ, மற்ற எந்த உயர் அதிகாரிகளோ குறுக்கிட மாட்டார்கள். எல்லா மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் 3 கண்காணிப்பார்கள் இருப்பார்கள்.

வெளி மாநில தேர்தல் ஆணையர்கள்

தற்போது நடைபெறும் தேர்தல் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களிடம் கூறியிருக்கிறேன். இது தவிர இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் ஆணையர்கள் பார்வையாளராக வருகிறார்கள். அவர்கள் இங்கே நடக்கும் தேர்தலை கண்காணிப்பார்கள். இந்த தேர்தலின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நாங்கள் பார்வையாளராக அழைத்திருக்கிறோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் `49 ஓ'வை பயன்படுத்தினார்கள். உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குசாவடியில் `70' விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பிக்கொடுக்கலாம். மற்றபடி சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட முறைகளே இந்த தேர்தலில் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
» வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum