ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Go down

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Empty வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Post by சிவா Thu Sep 29, 2011 8:02 am

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 3-ந் தேதி மாலை வெளியாகும்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன.

விறுவிறுப்பான தேர்தல் களம்

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. கூட்டணிகள் முடிவாகாததால் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல் பின்னர் தீவிரம் அடைந்தது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது.

நேற்று வரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 43 ஆயிரத்து 243 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி தேர்தலில் இதுவரை மேயர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 25 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மேலும் மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கும் நேற்று வரை 1,019 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,427 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 383 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 1,497 பேர் மனு தாக்கல் செய்தனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 9,366 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இன்று கடைசி நாள்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இன்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிவடைவதால், இன்று ஏராளமான பேர் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 3-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ததோடு வேட்பாளர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

பலமுனைப் போட்டி

இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்ïனிஸ்டு ஆகிய இரு கட்சிகளும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 31 மாவட்ட ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தினதந்தி


வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Empty Re: வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

Post by சிவா Thu Sep 29, 2011 8:03 am

வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை, தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுகிறார்கள்

தமிழக உள்ளாட்சித்தேர்தலை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையர்கள் வர இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை என்னிடம் தெரிவித்தார்கள். 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தது. இந்த வன்முறையை நீதிபதிகள் கண்டித்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயக்கம்


அந்த நேரத்தில் தேர்தல் பார்வையாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எழுதி கொடுத்த அறிக்கைகள் ஏற்கப்படாமல், தலைமை செயலாளர் எழுதி கொடுத்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட சங்கடத்தின் காரணமாக சென்னையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயக்கம் தெரிவித்தனர்.

நான் அவர்களுக்கு, 100 சதவீதம் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட்டு தேர்தலை கண்காணித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுகிறவர்களின் சுதந்திரத்தில் மாநில தேர்தல் ஆணையமோ, மற்ற எந்த உயர் அதிகாரிகளோ குறுக்கிட மாட்டார்கள். எல்லா மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் 3 கண்காணிப்பார்கள் இருப்பார்கள்.

வெளி மாநில தேர்தல் ஆணையர்கள்

தற்போது நடைபெறும் தேர்தல் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களிடம் கூறியிருக்கிறேன். இது தவிர இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் ஆணையர்கள் பார்வையாளராக வருகிறார்கள். அவர்கள் இங்கே நடக்கும் தேர்தலை கண்காணிப்பார்கள். இந்த தேர்தலின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நாங்கள் பார்வையாளராக அழைத்திருக்கிறோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் `49 ஓ'வை பயன்படுத்தினார்கள். உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குசாவடியில் `70' விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பிக்கொடுக்கலாம். மற்றபடி சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட முறைகளே இந்த தேர்தலில் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum