Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தத்துவக் கவிதைகள்
+3
ayyamperumal
kitcha
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தத்துவக் கவிதைகள்
தூக்கங்கள்
முன்னைக்காலத்தில்,
என் தூக்கங்கள்
இறுக்கமானவை,
சிலரது துக்கங்கள்போலவே.
கனவுகள் அங்கே
உருகிக்கொட்டா.
எனக்கு வெறும் இருட்டும்
பிறர்க்கு வெறுப்பு குறட்டையுமே.
எப்போதாவது
புணர்ந்தபின்,
புழுக்கை பொத்தென்று போட்டபின்,
பசித்த ஒற்றைப் பழுப்பு எலி மட்டும்
வால்நுனி சொடுக்கித் தட்டி
எனை எழுப்பி ஓடும்
என் நாட்டில் தூங்குகையில்,
-வான் குண்டுகள்,
கட்டியம் ஏற்கனவே சொல்லியிருக்காவிடின்.
ஆனாலும்,
குண்டுகள் மத்தியிலும்
தூங்கியிருந்திருக்கின்றேன்;
சொல்லப்போனால்,
குண்டுச்சத்தம் கேட்காமற்
தூக்கம் வராது கெட்ட சில
பிற்காலநாட்களும் உள.
இங்கேயோ,
எனது தூக்கங்கள்,
இளகியவை,
-மழை பட்டுக் கசிந்த ரொட்டித்துண்டுபோல,
மார்பு தொட்டுத்தூங்கும் மனையாளின்
நகவளைவு நெற்றியிலிடும் குளிர்முத்தம்போல....
மீமெய்யுந்தற்கனவுகள்
தூக்கத்தின் இருட்டறைக்
கதவுகள்,
சாளரங்களூடே
உருகிக் கொட்டும்,
வண்ணங்களில்.
நேற்றைய கனவில்,
மதகுருக்கள் உருகிப்போகக்கண்டேன்.
உருகிப்போனவர்களில் இருந்து,
உருட்டி எடுத்த பொருள்,
நிலத்தில்
ஆழப்புதைத்து,
மேலொரு சமாதி கட்டிவைத்தேன்.
இன்றைய கனவில்,
சமாதி உருகி,
இன்னொருமுறை, உருகிப்போனவர்கள்
உருப்பட்டு உருப்பெருத்தார்.
இன்றைக்கும் நான் விழிக்க,
உருகிச் சமாதிக்குட் பொருளாய்த்
திரும்பப்போனார்கள்,
மதகுருக்கள்.
நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.
"மீமெய்யுந்தற் கனவுகள்,
என் தூக்கத்தைக் கெடுக்க வருகின்றனவா?
இல்லை,
என் துக்கத்தைத் தவிர்க்க வருகின்றனவா?"
யோசித்துக்கிடப்பேன்.
நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.
ரசித்த கவிதைகள் - loga.tripod.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவக் கவிதைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தத்துவக் கவிதைகள்
முகவரி
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
இருப்பு மட்டுமே
அர்த்தப்பட்டதென்பதாய்
அபிப்பிராயம்
இன்னுமுண்டு.
வார்த்தைகள் எனது
என்பதே என் குறி;
வரிகளின்
இருப்பிடமும்
அதன் முன்பின் தொங்கும்
வேற்றுமுகப்பதிவுகளுமல்ல.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
இடம்வலமாய்
எழுத்துக்களை இடம் நகர்த்துவதால்
அவற்றின் முக-வரிகள்
புது ஒழுக்கிற் பயணப்படுமா,
அல்லது,
வரிவடிவச்சூத்திரம் வளையாது
அமைவுத்தளம் மட்டும்
வேறாகுமா?
எனக்கேதும் தெளிவில்லை;
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
கருத்தின் இருப்பு
என்பதென்ன,
ஒரு திசைசார் காவிக்கணியமா?
தனக்கெனவொரு திசைசாரா
எண்ணிக்கணியமா?
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
அதுவரை காத்திருப்பேன்,
என் கருத்தெதுவும் மாற்றாது
அகலிகைக்கல்லாய்
நான்.
ரசித்த கவிதைகள் - loga.tripod.com
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
இருப்பு மட்டுமே
அர்த்தப்பட்டதென்பதாய்
அபிப்பிராயம்
இன்னுமுண்டு.
வார்த்தைகள் எனது
என்பதே என் குறி;
வரிகளின்
இருப்பிடமும்
அதன் முன்பின் தொங்கும்
வேற்றுமுகப்பதிவுகளுமல்ல.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
இடம்வலமாய்
எழுத்துக்களை இடம் நகர்த்துவதால்
அவற்றின் முக-வரிகள்
புது ஒழுக்கிற் பயணப்படுமா,
அல்லது,
வரிவடிவச்சூத்திரம் வளையாது
அமைவுத்தளம் மட்டும்
வேறாகுமா?
எனக்கேதும் தெளிவில்லை;
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
கருத்தின் இருப்பு
என்பதென்ன,
ஒரு திசைசார் காவிக்கணியமா?
தனக்கெனவொரு திசைசாரா
எண்ணிக்கணியமா?
முகவரிகளின் முக்கியத்துவம்
எனக்கொன்றும்
முழுமையாய்ப் புரிந்ததில்லை.
அறிந்தவர்கள்
கூறட்டும்...
அதுவரை காத்திருப்பேன்,
என் கருத்தெதுவும் மாற்றாது
அகலிகைக்கல்லாய்
நான்.
ரசித்த கவிதைகள் - loga.tripod.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவக் கவிதைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தத்துவக் கவிதைகள்
தொலைந்து போனவை
ஒற்றைத் துயர்
மட்டும்
உள்ளே,
செத்துப் போயினவே
கவிக்கருத்துயர்களென்று
தனிமைத்துயர் தோய்ந்த,
இறந்த
இனிமைக் காலத்துக்காய்
ஏக்கம் கொக்கியிட்டுத்
தூக்குண்டு
நான்.
தொலைந்து போயின
துயர்களுடன்,
என் உணர்வுகளும்
அவை உருக்கி எழுதிய
ஓவியங்களும்
கவிதைகளும்.
நேற்றைக் கவிதைகளின்
நேர்த்திகொள் உலைக்களங்கள்,
சிறுகல்லும்
எறிபட்டுக் கலங்கா
நித்திரைக் குளங்கள்,
இன்று.
சலனம் செத்த
மனதின் கண்கட்கு,
முன்னெறி பட்டுப் பரவியெறி
மோனத்தே வெறித்திருக்க
மட்டுமே
முழுமோகம்.
ஓர் இற்றைப் புத்தனின்
சத்தமற்ற சகப்பிறப்பில்
எழுத்தாணி தூக்க
ஏனோ
இயக்கமற்று,
சுத்தமாய்
சுருங்கிச் சுருண்டு
செத்தான்,
அற்றைச் சிறு கவிஞன்
ஒருவன்.
-இரமணிதரன், க.
ஒற்றைத் துயர்
மட்டும்
உள்ளே,
செத்துப் போயினவே
கவிக்கருத்துயர்களென்று
தனிமைத்துயர் தோய்ந்த,
இறந்த
இனிமைக் காலத்துக்காய்
ஏக்கம் கொக்கியிட்டுத்
தூக்குண்டு
நான்.
தொலைந்து போயின
துயர்களுடன்,
என் உணர்வுகளும்
அவை உருக்கி எழுதிய
ஓவியங்களும்
கவிதைகளும்.
நேற்றைக் கவிதைகளின்
நேர்த்திகொள் உலைக்களங்கள்,
சிறுகல்லும்
எறிபட்டுக் கலங்கா
நித்திரைக் குளங்கள்,
இன்று.
சலனம் செத்த
மனதின் கண்கட்கு,
முன்னெறி பட்டுப் பரவியெறி
மோனத்தே வெறித்திருக்க
மட்டுமே
முழுமோகம்.
ஓர் இற்றைப் புத்தனின்
சத்தமற்ற சகப்பிறப்பில்
எழுத்தாணி தூக்க
ஏனோ
இயக்கமற்று,
சுத்தமாய்
சுருங்கிச் சுருண்டு
செத்தான்,
அற்றைச் சிறு கவிஞன்
ஒருவன்.
-இரமணிதரன், க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவக் கவிதைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தத்துவக் கவிதைகள்
நிலம் பட வாழ்.....
தொலைவின்
நெருப்பு மண்
நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்
பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.
நித்திரைமுன்
காற்றுவழிச் சேதிகள்
கட்டும்
கதையாய்க் கட்டிடங்கள்;
சுதை பூசி,
ஞாபகங்கள்;
சாளரங்கள்,
தவித்த முயற்குட்டி
ஆசைகள்.
இங்கே
தூசு தட்ட
அங்கது,
காற்றேகி
அழிந்திடலாமென்று
தொடவும் தயங்குவேன்
என் தீநிலத்து
நிழற்பட்ட நேரங்கள்.
அதில்,
அன்னை முடிக்கற்றை
இன்னும்
கறுத்திருக்கும்;
தம்பி,
தரைமூலையிற்
சுவர்தடவி தவழும்
சிறு குழவி.
நாய்கட்கும்
வயதேறாது;
புளியமரங்களோ,
பூவரசுகளோ,
பூப்பூப்பும் வற்றிப்
பட்டுப்போகாது.
நிலைபெயராது,
என் ஊர்ப்
பெயர்ந்த
கோவிற்காரைச்சுவர்வீழ்த்து
குறுக்குக் கறுப்பு நிழல் கூட,
பெருங்காற்றுக்கும்
என்னுள்ளே...
&&&&&&
காலவெளியில்,
கனவுக்குமிழ்படு
தூரச்சுமை
தோள்தாளா
நாளொன்றில்
மீளத்
தேடி நகர்ந்தேன்,
தீக்குழி குளி
என்
நீர்த்துளித் தேசம்.
&&&&&&
வெட்டி வீழ்ந்த
பூவரசுகளில்
புழுக்கள் ஊர,
பூச்சிகள்
நின்றென்னைப்
புதினம் பார்த்தன.
புளிய மரங்கள்
காற்றிலே
காலம்,
கால்சுற்றிக் கடக்க,
வேர்
கரைந்து போயின,
என் நாட்டு விழுமியங்கள் போல.
வேறு
நாய்கள்
புதுவேட்டைப்பற்களால்
முறைத்தன,
கண்கள்
தரையெல்லாம்
வெறி,
அவை தெறித்த
பரலதுவாய்
சிரித்துதிர்த்தி.
மூலைகள் வெறிச்சோட,
சுவர்கள் முகம்மூடியிருந்தன,
வேறு நிழற் படங்களால்.
தூக்கி வளர்த்தவன்,
தோள்மீறி உயர்ந்து
தோழன் ஆகி
நின்ற பருவம்.
கருமைத்தூறல்
விழுந்த கற்றைகளாய்
முகில் வற்றித்
தாய்த்தலைமுடி.
&&&&&&
ஆனாலும்,
கண்ட
எல்லோரும் சொன்னதென்னவோ,
-நான் மட்டும் மாறிப்போனேனாம்,
ஆள் கூட அடையாளம் தெரியாமல்.
&&&&&&
திசை திரும்பி
தொலைதேசம்
திரும்ப ஏகையிலே,
நான் மிதித்த
தாய்நிலத்து
மனத்தேசப்படங்கள்
அழித்து
மீள வரையப்படும்,
இன்னொரு
கைப்பிடிக் காலத்துகள்கட்கு,
வழி பார்த்து
நான் நகர.
என்றோ,
எங்கோ
எரிந்து போன
விண்நட்சத்திரங்களும்
மணல்வன யாத்திரீகனுக்கு
வழி காட்டும்
என்பதறிவு.
-இரமணிதரன், க.
தொலைவின்
நெருப்பு மண்
நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்
பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.
நித்திரைமுன்
காற்றுவழிச் சேதிகள்
கட்டும்
கதையாய்க் கட்டிடங்கள்;
சுதை பூசி,
ஞாபகங்கள்;
சாளரங்கள்,
தவித்த முயற்குட்டி
ஆசைகள்.
இங்கே
தூசு தட்ட
அங்கது,
காற்றேகி
அழிந்திடலாமென்று
தொடவும் தயங்குவேன்
என் தீநிலத்து
நிழற்பட்ட நேரங்கள்.
அதில்,
அன்னை முடிக்கற்றை
இன்னும்
கறுத்திருக்கும்;
தம்பி,
தரைமூலையிற்
சுவர்தடவி தவழும்
சிறு குழவி.
நாய்கட்கும்
வயதேறாது;
புளியமரங்களோ,
பூவரசுகளோ,
பூப்பூப்பும் வற்றிப்
பட்டுப்போகாது.
நிலைபெயராது,
என் ஊர்ப்
பெயர்ந்த
கோவிற்காரைச்சுவர்வீழ்த்து
குறுக்குக் கறுப்பு நிழல் கூட,
பெருங்காற்றுக்கும்
என்னுள்ளே...
&&&&&&
காலவெளியில்,
கனவுக்குமிழ்படு
தூரச்சுமை
தோள்தாளா
நாளொன்றில்
மீளத்
தேடி நகர்ந்தேன்,
தீக்குழி குளி
என்
நீர்த்துளித் தேசம்.
&&&&&&
வெட்டி வீழ்ந்த
பூவரசுகளில்
புழுக்கள் ஊர,
பூச்சிகள்
நின்றென்னைப்
புதினம் பார்த்தன.
புளிய மரங்கள்
காற்றிலே
காலம்,
கால்சுற்றிக் கடக்க,
வேர்
கரைந்து போயின,
என் நாட்டு விழுமியங்கள் போல.
வேறு
நாய்கள்
புதுவேட்டைப்பற்களால்
முறைத்தன,
கண்கள்
தரையெல்லாம்
வெறி,
அவை தெறித்த
பரலதுவாய்
சிரித்துதிர்த்தி.
மூலைகள் வெறிச்சோட,
சுவர்கள் முகம்மூடியிருந்தன,
வேறு நிழற் படங்களால்.
தூக்கி வளர்த்தவன்,
தோள்மீறி உயர்ந்து
தோழன் ஆகி
நின்ற பருவம்.
கருமைத்தூறல்
விழுந்த கற்றைகளாய்
முகில் வற்றித்
தாய்த்தலைமுடி.
&&&&&&
ஆனாலும்,
கண்ட
எல்லோரும் சொன்னதென்னவோ,
-நான் மட்டும் மாறிப்போனேனாம்,
ஆள் கூட அடையாளம் தெரியாமல்.
&&&&&&
திசை திரும்பி
தொலைதேசம்
திரும்ப ஏகையிலே,
நான் மிதித்த
தாய்நிலத்து
மனத்தேசப்படங்கள்
அழித்து
மீள வரையப்படும்,
இன்னொரு
கைப்பிடிக் காலத்துகள்கட்கு,
வழி பார்த்து
நான் நகர.
என்றோ,
எங்கோ
எரிந்து போன
விண்நட்சத்திரங்களும்
மணல்வன யாத்திரீகனுக்கு
வழி காட்டும்
என்பதறிவு.
-இரமணிதரன், க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவக் கவிதைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தத்துவக் கவிதைகள்
தூக்கங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது ![தத்துவக் கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![தத்துவக் கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![தத்துவக் கவிதைகள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தத்துவக் கவிதைகள்
மீமெய்யுந்தற் கனவுகள்,
என் தூக்கத்தைக் கெடுக்க வருகின்றனவா?
இல்லை,
என் துக்கத்தைத் தவிர்க்க வருகின்றனவா?"
"மீமெய்யுந்தற் கனவுகள்,-- அரிதான சொல்லாடல், நம் ஈகரை கவிஞர்கள் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய ஒன்று .
நிலம் பட வாழ்.....
தொலைவின் நெருப்பு மண் நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.
இரமணிதரன், க.
மிகவும் ரசிக்கவேண்டிய சோகம் !
மற்றபடி நிலம் பட வாழ் -- என்கிற தலைப்பே ஒரு பிஎச்டி ஆய்விற்கு உட்படுத்தபட வேண்டியது.
ரசிக்க தந்தமைக்கு நன்றி சிவா !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவக் கவிதைகள் Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தத்துவக் கவிதைகள்
சிவ ஸ்தோதிரமும் அருமை பெருமாள் வாக்கும் அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தத்துவக் கவிதைகள்
இதுவரை நான் படித்திராத பாணியில் அமைந்த கவிதைகள்.
இங்கே நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன்.
அருமையான பகிர்வுக்கு நன்றி..சிவா சாருக்கு.
இங்கே நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன்.
அருமையான பகிர்வுக்கு நன்றி..சிவா சாருக்கு.
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஒரு ஜென் தத்துவக் கதை!
» மாயை பற்றிய தத்துவக் கதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» ஒரு ஜென் தத்துவக் கதை!
» மாயை பற்றிய தத்துவக் கதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|