Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
தேசிய கண்தான இரு வார விழா - ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை
இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வையற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கண் தானம் செய்வது புனிதமான மற்றும் அவசியமான செயல் என்று அனைவருக்கும் எடுத்து சொல்லப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் தேசிய வார விழாவாக இது அனுசரிக்கப்படுகிறது.
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
மதங்களும் ஆதரிக்கின்றன..!
அனைத்து ஜாதிகளும் மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுகின்றன.
இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.
எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.
எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, பாம்பு கடி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற மாட்டார்கள்.
இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.
எப்படி தானம் செய்வது?
* கண்தானம் செய்வது எளிது. உயிருடன் இருக்கும் போதே இதற்கான உறுதிமொழி படிவத்தை அருகில் உள்ள கண் வங்கியில் கொடுத்து வைத்து விடலாம். இத்தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தால், இறந்த பிறகு கண் தானம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
* கண்களை ஏற்கனவே உறுதி மொழி கொடுக்காவிட்டாலும் தானம் செய்யலாம். கண்களை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம்.
* ஒரு மனிதன் இறந்தபிறகு மட்டும் கண்களை தானம் செய்ய முடியும்.
* இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் இறந்தவரின் கண்களை எடுத்து பாதுகாத்துவிட்டால், பார்வையற்றவருக்கு அதை பொறுத்த முடியும்..
* கண் வங்கி குழுவினர் வந்து இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்கும் வரை அந்தக் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். கண்களில் சுத்தமான தண்ணீர் விட்டு கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். அல்லது கண்களை மூடி அதன் மீது சுத்தமான ஈரத் துணியை போட்டு மூடி வைக்க வேண்டும்.
* இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்க 15-20 நிமிட நேரமே ஆகும்.
* கண்களை எடுப்பதால் எடுத்தற்கான அறிகுறியோ, இறந்தவரின் முகம் விவகாரமாகவோ ஆகாது என்பது உறுதி. தேவைப்பட்டால் செயற்கை கண்களை கூட பொருத்திவிடலாம்.
இலங்கையின் உதவி..!
மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிலும் அதற்கான முழு விழிப்புணர்வு வந்து, நாமும் அனைஅவ்வாறு கண் தானம் செய்யும்பட்சத்தில் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்ய முடியும்.
கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்..
* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல்
* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும்
* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டிவி பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும்.
* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.
* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள்.
* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்
* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.
இரு யோசனைகள்..!
* நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப்டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம். ஒப்புதல் படிவங்களில் கணவன்/மனைவி/மகன்/மகள் அல்லது பொறுப்பான உறவினரின் கையப்பத்தை பெற்று கண்களை எடுத்து, தேவைப்படுவருக்காக வைத்துக் கொள்ளலாம்.
* உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள்.
கண் தானம் வீடியோ ரிப்போர்ட்
- சி.சரவணன்
***
thanks யூத்ஃபுல் விகடன்
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/09/blog-post_5156.html
இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வையற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கண் தானம் செய்வது புனிதமான மற்றும் அவசியமான செயல் என்று அனைவருக்கும் எடுத்து சொல்லப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் தேசிய வார விழாவாக இது அனுசரிக்கப்படுகிறது.
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
மதங்களும் ஆதரிக்கின்றன..!
அனைத்து ஜாதிகளும் மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுகின்றன.
இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.
எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.
எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, பாம்பு கடி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற மாட்டார்கள்.
இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.
எப்படி தானம் செய்வது?
* கண்தானம் செய்வது எளிது. உயிருடன் இருக்கும் போதே இதற்கான உறுதிமொழி படிவத்தை அருகில் உள்ள கண் வங்கியில் கொடுத்து வைத்து விடலாம். இத்தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தால், இறந்த பிறகு கண் தானம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
* கண்களை ஏற்கனவே உறுதி மொழி கொடுக்காவிட்டாலும் தானம் செய்யலாம். கண்களை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம்.
* ஒரு மனிதன் இறந்தபிறகு மட்டும் கண்களை தானம் செய்ய முடியும்.
* இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் இறந்தவரின் கண்களை எடுத்து பாதுகாத்துவிட்டால், பார்வையற்றவருக்கு அதை பொறுத்த முடியும்..
* கண் வங்கி குழுவினர் வந்து இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்கும் வரை அந்தக் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். கண்களில் சுத்தமான தண்ணீர் விட்டு கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். அல்லது கண்களை மூடி அதன் மீது சுத்தமான ஈரத் துணியை போட்டு மூடி வைக்க வேண்டும்.
* இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்க 15-20 நிமிட நேரமே ஆகும்.
* கண்களை எடுப்பதால் எடுத்தற்கான அறிகுறியோ, இறந்தவரின் முகம் விவகாரமாகவோ ஆகாது என்பது உறுதி. தேவைப்பட்டால் செயற்கை கண்களை கூட பொருத்திவிடலாம்.
இலங்கையின் உதவி..!
மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிலும் அதற்கான முழு விழிப்புணர்வு வந்து, நாமும் அனைஅவ்வாறு கண் தானம் செய்யும்பட்சத்தில் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்ய முடியும்.
கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்..
* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல்
* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும்
* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டிவி பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும்.
* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.
* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள்.
* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்
* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.
இரு யோசனைகள்..!
* நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப்டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம். ஒப்புதல் படிவங்களில் கணவன்/மனைவி/மகன்/மகள் அல்லது பொறுப்பான உறவினரின் கையப்பத்தை பெற்று கண்களை எடுத்து, தேவைப்படுவருக்காக வைத்துக் கொள்ளலாம்.
* உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள்.
கண் தானம் வீடியோ ரிப்போர்ட்
- சி.சரவணன்
***
thanks யூத்ஃபுல் விகடன்
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/09/blog-post_5156.html
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
இது மிகவும் தேவையான ஒரு பதிவு அண்ணா,,, கண் தானம் செய்வது மிகவும் நல்ல செயல்...அனைவரும் இதனை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை,,,மிக்க நன்றி..அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு,,,
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
மிக்க
இதில் வரும் வீடியோவை இதில் இணைக்க முடியுமா?
இதில் வரும் வீடியோவை இதில் இணைக்க முடியுமா?
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
தாமு wrote: மிக்க
இதில் வரும் வீடியோவை இதில் இணைக்க முடியுமா?
இணைக்க முடியல அண்ணா...
என்ன ஆச்சு...என்னால் வீடியோவை இணைக்க முடியலை.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
எனக்கும் தெரியலை.... உமா அதனால் உதவி கேட்டேன்
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
சிவா அண்ணா,,, ப்ளீஸ் ஹெல்ப்...என்னால் வீடியோவை இணைக்கவே முடியல.
.அப்லோட் ஆகலை...
.அப்லோட் ஆகலை...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
சிவா அண்ணாவுக்கு தனிமடல் போட்டு இருக்கேன் பார்த்து இடுவார் பொறுமையாக இருப்பம்
Re: உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
தாமு wrote:எனக்கும் தெரியலை.... உமா அதனால் உதவி கேட்டேன்
முட்டிக்காதீங்க ...இணைதாச்சு...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
» உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
» உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?
» கண்கள் இரண்டால்
» கண்கள் இரண்டால்....
» உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
» உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?
» கண்கள் இரண்டால்
» கண்கள் இரண்டால்....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|