ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாதுரை பிறந்த நாளில் கைதிகள் விடுதலை நியாயமா?

Go down

அண்ணாதுரை பிறந்த நாளில் கைதிகள் விடுதலை நியாயமா? Empty அண்ணாதுரை பிறந்த நாளில் கைதிகள் விடுதலை நியாயமா?

Post by krishnaamma Wed Sep 07, 2011 12:21 pm

சென்னை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளில், தமிழகத்தில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவது தேவையா? இந்த வாய்ப்பை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதும் சரியா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்.,15ம் தேதியில், ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர். கடந்த தி.மு.க., ஆட்சியில், 2007ம் ஆண்டில், 70 வயதை தாண்டிய ஆயுள்தண்டனை கைதிகள், 16 பேரும், 2008ம் ஆண்டில், 1,400 ஆயுள்தண்டனை கைதிகளும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.இதற்கு பல தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பார்லிமென்ட் தேர்தல், 2009ல் வந்ததால், ஓட்டுக்காகவும்,தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காகவும் இது போன்ற விடுதலை செய்யப்பட்டதாக, தி.மு.க., மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விடுதலையை எதிர்த்து, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதில்,"கோர்ட் உத்தரவுப்படி தண்டனை பெற்ற கைதிகளை ஒட்டுமொத்தமாக முன் கூட்டியே விடுவிப்பது, இந்திய இறையாண்மையை பாதிக்கும். இதுபோன்று அடுத்து வரும் ஆண்டுகளில், தமிழக அரசு விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு மீது, கடந்த 2010ம் ஆண்டு செப்.,2ம் தேதி விசாரணை நடந்தபோது, கைதிகளை விடுவிக்கும் திட்டம் இல்லை என, தி.மு.க., அரசு தெரிவித்தது. ஆனால், கடந்தாண்டு அண்ணாதுரை பிறந்தநாளில், 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், வரும் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாள் வருவதால், கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.முன்கூட்டி விடுதலை குறித்து, பல சட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றன. கைதிகளை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதலுக்கு பின், தமிழக அரசின் பரிந்துரைப்படி, கவர்னர்தான் முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இதற்கென மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிந்துரைக் கமிட்டி உண்டு. இந்த கமிட்டியில் மாவட்ட கலெக்டர், சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவர்.

இக்கமிட்டியின் பரிந்துரைகளை மாநில கமிட்டி ஆய்வு செய்யும். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., உள்துறை செயலர், சட்டத்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், குற்றவியல் அரசு தலைமை வக்கீல், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஐ.ஜி., உள்ளிட்டோர் இடம்பெறுவர். இவர்களது ஆய்வுக்கு பின், கைதிகளின் நன்னடத்தை வரலாற்றுப்படி, விடுதலை நிர்ணயிக்கப்படுகிறது. கைதிகள் சிறையில் இருந்த காலம், குற்ற தன்மை, சூழ்நிலை, கைதிக்கு இருக்கும் குடும்ப, சமுதாய கடமை உள்ளிட்டவை குறித்து, நன்னடத்தையில் ஆய்வு செய்யப்படுகிறது. சாதாரணமாக சமூக சூழலால் குற்றவாளியாகும் அப்பாவி கைதிகளுக்காக தான், இந்த அதிகாரத்தை அரசு பயன்படுத்த வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் கொலை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டோரையும், நன்னடத்தை விதிப்படி விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த வழக்கு, ஐகோர்ட்டில் இம்மாதம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

தலைவர்கள் பிறந்தநாளில் கைதிகள் விடுவிப்பது குறித்து, சட்ட அறிஞர் ஒருவர் கூறும்போது,"சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் பிறந்த நாளில், அவர்களது எண்ணப்படி சமூகத்தில் பலர் திருந்தி வாழ வேண்டும் என்ற அடிப்படையில், கைதிகள் விடுதலையாகின்றனர். ஆனால், ஆளுங்கட்சிகள் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்தி, அரசியல் ரீதியான குற்றவாளிகளையும் விடுவித்து கொச்சைப்படுத்தி விடுகின்றன' என்றார்.

கொடூர குற்றம், அரசியல் ரீதியான, லாப நோக்கிலான குற்றம் புரிந்தோர் முன் கூட்டி விடுதலையாவதால், சமூகத்தில் மீண்டும் குற்றச் செயல்கள் அதிகமாகும் என்கிறது ஒரு தரப்பு. அதேநேரம், சூழ்நிலைகளால் சிறை சென்ற கைதிகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் வாடுவது எந்த வகையில் நியாயம் என்கிறது மற்றொரு தரப்பு.

இதுகுறித்து, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் கூறும்போது,"இந்தியாவில் திரிபுராவில் தான் முன்கூட்டி விடுதலை கிடையாது. அங்கு, தண்டனை காலத்தில் பெயிலில் விடப்படுவர். அந்த பெயில் காலத்தையும் மீண்டும் சிறைக்கு வந்து கழிக்க வேண்டும். மகாராஷ்டிராவில், 14 ஆண்டுகள் நிறைவான ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை விதிப்படி விடுதலையாவர். நன்னடத்தை கைதிகளுக்கு அவர்கள் திருந்தும் வாய்ப்பை வழங்கினால், சமூக முன்னேற்றத்திற்கு அதுவும் ஒரு வாய்ப்பாகும்' என்றார்.

வழக்கறிஞர் வெங்கட்ராமன் கூறும்போது,"கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிப்பது, இறையாண்மையையும், நீதித்துறை செயல்பாட்டையும் மறைமுகமாக பாதிக்கும். குற்றவாளிகளை குற்றம் செய்ய தூண்டுவதாகவும், வருங்காலத்தில் புதிய குற்றவாளிகள் உருவாக முன்னுதாரணமாகவும் அமையும். எனவே, எந்த ஆட்சியானாலும், முன்கூட்டி விடுதலை கூடாது' என்றார்.

உப்பு தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது போல், குற்றம் செய்தவர்களை சட்டப்படி தண்டிப்பது தான் சரி என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கதேச சிறைகளில்1,000 கைதிகள் விடுதலை
» 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு
» ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 634 சிறைக் கைதிகள் விடுதலை
» நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum