ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை!

Go down

தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Empty தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை!

Post by Guest Wed Sep 07, 2011 9:42 am

ஒரு இனத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென்றால் அவர்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் மனித நேயத்தை நேசிக்கும் எந்த நாடும் செய்யாத ஒரு பயங்கர இனப்படுகொலையை செய்ததோடு மட்டுமல்லாமல், மனித நேயமே அருவருக்கச் செய்யும் செயல்களை சிறிலங்கா அரசு செய்துவருகின்றது.

இன்றும் மர்ம மனிதன், கிறீஸ் மனிதன் என்று பலரை தமிழர் பிரதேசங்களில் நடமாட விட்டு, பெண்களைச் சீரழிக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் செயல்படுகின்றது என்பதை பலரும் அறிவர்.

எமது மக்கள் செய்வதறியாது தள்ளாடுகிறார்கள், அங்கு நடைபெறும் இவ்வாறான தொடரும் அடக்குமுறைக்குள் பயந்து பயந்து வாழ்நாளை கழிப்பதாகவும், அதில் இருந்து தம்மை விடுவியுங்கள் என்றும் எம் தாய்மண் மக்கள் எம்மை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

அதே நேரத்தில் சிறிலங்கா அரசோ தமிழ் பகுதிகளில் அடக்கு முறைகளை செய்து கொண்டு பல உலக நாடுகளை திருப்திப்படுத்தும் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.

செப்ரெம்பர் 12 ம் திகதி கூட இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் எடுப்பதை பற்றி பல நாடுகளும், மனித நேய அமைப்புகளும் பேசிகொண்டிருக்கும் நிலையில் அதில் இருந்து விடுபட பல தொடர்புகள் ஏற்படுத்தி கொண்டும் அதற்குரிய செயல் திட்டங்களுக்கு வடிவங்களைக் கொடுத்து கொண்டிருகிறது.

அண்மையில் பிரான்சு நாட்டு வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தில் சிறிலங்காவில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் தாம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாகவும், சிறிலங்கா அரசு சர்வதேச நாடுகள் கேட்பதைப் போல சிறிலங்காவில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேச நாடுகள் அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளைச் செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

சென்ற வருடம் பிரான்சு வெளிவிவகார அமைச்சின் மனிதவுரிமை அமைப்பின் அதிகாரி சிறிலங்காவிற்கு விஜயம் செய்த போது, மகிந்த ராஜபக்சவிடம் சிறிலங்காவில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்படி கூறினார்.

இன்று மகிந்த ராஜபக்ச அவசரகால சட்டத்தை நீக்குவதாக கூறி உலக நாடுகளை திருப்திப்படுத்துவது போல், வரப்போகும் மனிதவுரிமை அமைப்பின் அமர்வை எதிர்பார்த்து செயற்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

அத்துடன் தாம் ஐரோப்பிய கூட்டபைப்பு ரத்து செய்த சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட கழிவை மீண்டும் பெறும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் எமது மண்ணில் எமது தாயக உறவுகள் தொடரும் அடக்குமுறைக்குள் சிக்கி எதுவும் பேச முடியாது நிற்கிறார்கள், சிறிலங்கா அரசு இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள், என்ன செய்யப்போகிறோம் நாங்கள்.?

செப்டம்பர் 7 புதன்கிழமை மாலை மூன்று மணி முதல் பிரான்சு பாராளுமன்றம் (Metro : Assemblée Nationale ligne 12) முன்றலில் பிரான்சு நாட்டு அரசிடம் சிறிலங்காவில் தொடரும் அடக்கு முறைகளை எடுத்துச் செல்வோம்.

மே 27 2009 யில் தொடங்கிய இந்த போராட்டம், ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், சிறிலங்கா அரசின் இனச்சுத்திகரிப்பு அரசியலை பிரான்சு நாட்டு அரசுக்கு கூறிக்கொண்டே இருப்போம்

செப்டம்பர் 19 ஆம் திகதி ஜெனிவா ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழர்களாக பொங்கி எழுந்து சிறிலங்கா அரசு ஒரு இனப்படுகொலை செய்யும் நாடு. அந்த நாட்டில் இருந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் குரலெழுப்ப ஜெனிவாவில் ஒன்று கூடுவோம்.

எமது மக்களின் விடுதலைக்காக நாம் போராடும் காலமிது.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum