ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

3 posters

Go down

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Empty தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

Post by spselvam Tue Sep 06, 2011 9:37 pm

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறார் கனிமொழி. காரணம், கடந்த மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே, இன்னமும் சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற சி.பி.ஐ.யின் வாதம்தான்.

இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையைத்தான், இதுவரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்து வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான மந்திரக் கோலாகக் காட்டவுள்ளது சி.பி.ஐ.

ஒரு வகையில் சொல்லப்போனால், கனிமொழியைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு கோர்ட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள காரணங்கள் போதாது. வேறு கேஸ் என்றால், இப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், சுலபமாக ஜாமீனில் வெளியே வந்திருக்க முடியும்.

“இந்த வழக்கில் இவர்களை ஜாமீனில்கூட வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று நீதிபதி ஷைனியே சினத்துடன் சி.பி.ஐ. வக்கீல்களிடம் கேட்டதும் நடந்தது. அந்தளவுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்கள் போதாது என்ற நிலையில் உள்ளது வழக்கு.

ஆனால் சி.பி.ஐ., “மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை பொறுத்திருங்கள். இவரை ஏன் ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்பதற்கான காரணங்களை அதில் காண்பிக்கிறோம்” என்று நீதிபதிகளை கன்வின்ஸ் பண்ணிப் பண்ணியே, கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருக்கின்றது. மூன்றாவது குற்றப் பத்திரிகையை இம்மாதம் 15ம் தேதி தாக்கல் செய்து விடுவோம் என்றும், நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு இன்னமும் இரண்டு வாரங்களைவிட குறைவான நாட்களே உள்ளன.

இதுதான் கனிமொழி சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருப்பதற்கான காரணம். இதுவரை தமக்கு தெரியாத ஆதாரங்கள் எதையாவது சி.பி.ஐ. அந்தக் குற்றப் பத்திரிகையில் காண்பிக்கப் போகின்றதோ என்ற லேசான நடுக்கம் கனிமொழி தரப்புக்கு இருக்கிறது.

கனிமொழி தரப்பைப் பற்றி, வித்தியாசமான கோணத் தகவல் ஒன்றைக் கூறுகிறார்கள். இந்த வழக்கில் தயாநிதி மாறன் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமலேயே, அவரது வக்கீல் வாதிடுகிறார் என்பதே அது.

அதாவது, கனிமொழியின் வக்கீலின் வாதங்களின் பிரதான பாயின்ட் கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே பாயின்ட், தயாநிதி மாறனை வழக்குக்குள் சிக்க வைத்துவிடும். இதைப் புரிந்துகொண்டுதான் சி.பி.ஐ., தயாநிதி மாறன் பற்றி சமீபத்தில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வட்டாரங்களில். இது ஒருவகை avoiding tactic என்றும் ஊகிக்கிறார்கள்.

முன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வேறு சில ஆவணங்களில், தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நபராக காட்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.

சில தினங்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். தமக்கு அறிமுகமான குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “இன்று தாக்கல் செய்துள்ள டாக்குமென்ட்ஸை கவனமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஸ்கூப் கிடைக்கலாம்” என்று கோடி காட்டினார்.

அன்று வெளியான இரு டில்லிப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்பில், “தயாநிதி மாறனை இந்த வழக்கில் சிக்க வைக்க போதிய ஆதாரம் ஏதும் சி.பி.ஐ.யிடம் இல்லை” என்று சுடச்சுட செய்தி வெளியானது. மறுநாள் அதே செய்தி தமிழ் ஊடகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டது.

மீடியாவில் இந்தச் செய்தி நன்றாக அடிபடுவதையும், அதன் ரியாக்ஷனையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.

டில்லியில் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சோர்ஸ் ஒன்றை நாம் விசாரித்த வகையில், “மூன்றாவது குற்றப் பத்திரிகையில், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவரது பங்குதான் ஹைலைட் பண்ணப்பட்டிருக்கும். தயாநிதி மாறனை நிச்சயமாகச் சிக்க வைப்பது என்று முடிவு எடுத்தால், கனிமொழி ஜாமீனில் வெளியே செல்வதை சி.பி.ஐ. பெரிதாக எதிர்க்காது. சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடும்” என்று கூறினார்.

அப்படியானால், வரும் 15ம் தேதிக்காக கனிமொழி மாத்திரமல்ல, தயாநிதி மாறனும் பதட்டத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
நன்றி: விறுவிறுப்பு.com


இனியொரு விதி செய்வோம்
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Pதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Eதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Lதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Vதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Aதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Empty Re: தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

Post by அசுரன் Tue Sep 06, 2011 9:58 pm

நாங்களும் எத்தனை நாளுக்கு தான் இதை யெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கிறது. சீக்கிரமா கிடைக்காத நீதி அநீதிக்கு சமம். என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Empty Re: தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

Post by T.N.Balasubramanian Wed Sep 07, 2011 7:53 am

கைக்கு வருகின்ற கால்பந்தை கையில் பிடித்து கோல் போஸ்டுக்கு தள்ளிவிடும் சாமர்தியதிர்க்கு பெயர் பெற்றது நமது சி‌பி‌ஐ . போஃபோர்ஸ் கேசில் குவாட்ரோச்சியை தப்பிக்க விடவில்லையா ? மழை காலத்து ஊசிப் பட்டாசு நினைவையே செப் 15 வெளிப்படுதினாலும் வியப்படைய வேண்டாம்.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Empty Re: தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum