Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
5 posters
Page 1 of 1
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
செஸ்டர் லீ-ஸ்டிரீட், செப்.4- இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஆனால் பலத்த மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
தெண்டுல்கர் கிடையாது
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடந்தது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் ஆடவில்லை. இதனால் கடைசி நேரத்தில் பார்த்தீவ் பட்டேல் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான், காயத்தால் இடம் பெறவில்லை.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக், மேகமூட்டமான வானிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பார்த்தீவ் பட்டேலும், ரஹானேவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் அசத்திய ரஹானேவுக்கு, இது தான் சர்வதேச முதலாவது ஒரு நாள் போட்டியாகும்.
இருவரும் தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக ஆடினார்கள். முதல் 7 ஓவர்களில் 24 ரன்களே வந்தது. இதில் பார்த்தீவ் பட்டேல் (7 ரன்னில் இருந்த போது) ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதும் அடங்கும். இதன் பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். ஆண்டர்சன், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் புயல் வேக தாக்குதலை சமாளித்து, இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அறிமுக வீரர் என்ற போதிலும் ரஹானே, முதிர்ச்சியான பேட்ஸ்மேன் போல் பதற்றமின்றி நேர்த்தியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 82 ரன்கள் (16 ஓவர்) சேர்த்த பிறகு பிரிந்தனர்.
பட்டேல் 95 ரன்கள்
ஸ்டூவர்ட் பிராட்டின் ஷார்ட்பிட்ச் பந்து வீச்சை, `புல்ஷாட்' அடிக்க முயற்சித்த ரஹானே (40 ரன், 44 பந்து, 6 பவுண்டரி), `பைன்லெக்' திசையில் கேட்ச் ஆனார். அடுத்து ராகுல் டிராவிட் ஆட வந்தார். தனது கடைசி ஒரு நாள் தொடரில் ஆடும் டிராவிட்டுக்கு, இந்த ஆட்டம் மறக்ககூடிய போட்டியாக அமைந்து விட்டது. அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் பார்த்தீவ் பட்டேல் நிலைத்து நின்று அரைசதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு அவருடன் விராட் கோக்லி கைகோர்த்தார். 22-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தாண்டியது. பார்த்தீவ்-விராட் இணை அவசர படாமல் விளையாடினார்கள். அணியின் ரன்ரேட் 5 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. முதலாவத்தை சதத்தை நெருங்கிய பார்த்தீவ் பட்டேல் 95 ரன்களில் (107 பந்து, 12 பவுண்டரி), ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆண்டர்சனுக்கு இது 200-வது விக்கெட்டாகும். கோக்லி-பார்த்தீவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும்.
275 ரன்கள் இலக்கு
அவருக்கு பிறகு களம் கண்ட ரோகித் ஷர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே காயமடைந்து `ரிட்டயர்ட்ஹர்ட்' ஆகி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். இதற்கிடையே தனது 16-வது அரைசதத்தை எட்டிய விராட் கோக்லி 55 ரன்களில் (73 பந்து, 4 பவுண்டரி) போல்டானார். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, ரெய்னாவுடன் இணைந்து பேட் பிடித்தார்.
இந்திய அணியின் ஸ்கோர் மிதமாக உயர்ந்ததே தவிர, பெரிய அளவில் அதிரடியை பார்க்க முடியவில்லை. இங்கிலாந்தின் பீல்டர்கள் கனகச்சிதமாக செயல்பட்டு சில பவுண்டரிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் அட்டகாசமான பீல்டிங்கால் இந்தியாவின் ரன்வேகம் குறைந்தது என்றே சொல்லலாம்.
சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னாவுக்கு, `ஷார்ட் பிட்ச்' பந்து வீச்சு என்றாலே எப்போதும் அலர்ஜி. இந்த ஆட்டத்திலும் அவர் இவ்வகை பந்துக்கே இரையானார். அவர் 38 ரன்களில் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். டோனி (33 ரன், 36 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் (0) இருவரும் இறுதி ஓவரில் வீழ்ந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்களை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இறுதி கட்டத்தில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்ட போதிலும் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் 67 ரன்களே சேகரித்தனர்.
மழையால் கைவிடப்பட்டது
பின்னர் 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் குக் (4 ரன்), கீஸ்வெட்டர் (6 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் வேகமாக இழந்தது. இரு விக்கெட்டுகளையும் பிரவீன்குமார் சாய்த்தார். இதனால் இங்கிலாந்துக்கு துவக்கத்திலேயே நெருக்கடி உருவானது. அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நல்ல நிலையில் இருந்த இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
பார்த்தீவ் பட்டேல் (சி) கீஸ்வெட்டர் (பி) ஆண்டர்சன் 95
ரஹானே (சி) சமித் பட்டேல் (பி) பிராட் 40
டிராவிட் (சி) கீஸ்வெட்டர் (பி) பிராட் 2
கோக்லி (பி) சமித் பட்டேல் 55
ரோகித் ஷர்மா (ரிட்டயர்ட் ஹர்ட்) 0
ரெய்னா (சி) குக் (பி) டெர்ன்பேச் 38
டோனி(சி) கீஸ்வெட்டர் (பி) பிரிஸ்னன் 33
பிரவீன்குமார் (நாட்-அவுட்) 2
அஸ்வின் (பி) பிரிஸ்னன் 0
வினய்குமார் (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 8
மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 274
விக்கெட் வீழ்ச்சி: 1-82, 2-87, 3-190, 4-206, 5-266, 6-272, 7-272
பந்து வீச்சு விவரம்
ஆண்டர்சன் 9-0-41-1
பிரிஸ்னன் 10-0-54-2
ஸ்டூவர்ட் பிராட் 10-0-56-2
டெர்ன்பேச் 9-0-62-1
சமித் பட்டேல் 10-0-42-1
டிராட் 2-0-14-0
தினதந்தி
தெண்டுல்கர் கிடையாது
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடந்தது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் ஆடவில்லை. இதனால் கடைசி நேரத்தில் பார்த்தீவ் பட்டேல் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான், காயத்தால் இடம் பெறவில்லை.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக், மேகமூட்டமான வானிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பார்த்தீவ் பட்டேலும், ரஹானேவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் அசத்திய ரஹானேவுக்கு, இது தான் சர்வதேச முதலாவது ஒரு நாள் போட்டியாகும்.
இருவரும் தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக ஆடினார்கள். முதல் 7 ஓவர்களில் 24 ரன்களே வந்தது. இதில் பார்த்தீவ் பட்டேல் (7 ரன்னில் இருந்த போது) ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதும் அடங்கும். இதன் பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். ஆண்டர்சன், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் புயல் வேக தாக்குதலை சமாளித்து, இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அறிமுக வீரர் என்ற போதிலும் ரஹானே, முதிர்ச்சியான பேட்ஸ்மேன் போல் பதற்றமின்றி நேர்த்தியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 82 ரன்கள் (16 ஓவர்) சேர்த்த பிறகு பிரிந்தனர்.
பட்டேல் 95 ரன்கள்
ஸ்டூவர்ட் பிராட்டின் ஷார்ட்பிட்ச் பந்து வீச்சை, `புல்ஷாட்' அடிக்க முயற்சித்த ரஹானே (40 ரன், 44 பந்து, 6 பவுண்டரி), `பைன்லெக்' திசையில் கேட்ச் ஆனார். அடுத்து ராகுல் டிராவிட் ஆட வந்தார். தனது கடைசி ஒரு நாள் தொடரில் ஆடும் டிராவிட்டுக்கு, இந்த ஆட்டம் மறக்ககூடிய போட்டியாக அமைந்து விட்டது. அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் பார்த்தீவ் பட்டேல் நிலைத்து நின்று அரைசதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு அவருடன் விராட் கோக்லி கைகோர்த்தார். 22-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தாண்டியது. பார்த்தீவ்-விராட் இணை அவசர படாமல் விளையாடினார்கள். அணியின் ரன்ரேட் 5 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. முதலாவத்தை சதத்தை நெருங்கிய பார்த்தீவ் பட்டேல் 95 ரன்களில் (107 பந்து, 12 பவுண்டரி), ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆண்டர்சனுக்கு இது 200-வது விக்கெட்டாகும். கோக்லி-பார்த்தீவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும்.
275 ரன்கள் இலக்கு
அவருக்கு பிறகு களம் கண்ட ரோகித் ஷர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே காயமடைந்து `ரிட்டயர்ட்ஹர்ட்' ஆகி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். இதற்கிடையே தனது 16-வது அரைசதத்தை எட்டிய விராட் கோக்லி 55 ரன்களில் (73 பந்து, 4 பவுண்டரி) போல்டானார். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, ரெய்னாவுடன் இணைந்து பேட் பிடித்தார்.
இந்திய அணியின் ஸ்கோர் மிதமாக உயர்ந்ததே தவிர, பெரிய அளவில் அதிரடியை பார்க்க முடியவில்லை. இங்கிலாந்தின் பீல்டர்கள் கனகச்சிதமாக செயல்பட்டு சில பவுண்டரிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் அட்டகாசமான பீல்டிங்கால் இந்தியாவின் ரன்வேகம் குறைந்தது என்றே சொல்லலாம்.
சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னாவுக்கு, `ஷார்ட் பிட்ச்' பந்து வீச்சு என்றாலே எப்போதும் அலர்ஜி. இந்த ஆட்டத்திலும் அவர் இவ்வகை பந்துக்கே இரையானார். அவர் 38 ரன்களில் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். டோனி (33 ரன், 36 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் (0) இருவரும் இறுதி ஓவரில் வீழ்ந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்களை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இறுதி கட்டத்தில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்ட போதிலும் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் 67 ரன்களே சேகரித்தனர்.
மழையால் கைவிடப்பட்டது
பின்னர் 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் குக் (4 ரன்), கீஸ்வெட்டர் (6 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் வேகமாக இழந்தது. இரு விக்கெட்டுகளையும் பிரவீன்குமார் சாய்த்தார். இதனால் இங்கிலாந்துக்கு துவக்கத்திலேயே நெருக்கடி உருவானது. அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நல்ல நிலையில் இருந்த இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
பார்த்தீவ் பட்டேல் (சி) கீஸ்வெட்டர் (பி) ஆண்டர்சன் 95
ரஹானே (சி) சமித் பட்டேல் (பி) பிராட் 40
டிராவிட் (சி) கீஸ்வெட்டர் (பி) பிராட் 2
கோக்லி (பி) சமித் பட்டேல் 55
ரோகித் ஷர்மா (ரிட்டயர்ட் ஹர்ட்) 0
ரெய்னா (சி) குக் (பி) டெர்ன்பேச் 38
டோனி(சி) கீஸ்வெட்டர் (பி) பிரிஸ்னன் 33
பிரவீன்குமார் (நாட்-அவுட்) 2
அஸ்வின் (பி) பிரிஸ்னன் 0
வினய்குமார் (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 8
மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 274
விக்கெட் வீழ்ச்சி: 1-82, 2-87, 3-190, 4-206, 5-266, 6-272, 7-272
பந்து வீச்சு விவரம்
ஆண்டர்சன் 9-0-41-1
பிரிஸ்னன் 10-0-54-2
ஸ்டூவர்ட் பிராட் 10-0-56-2
டெர்ன்பேச் 9-0-62-1
சமித் பட்டேல் 10-0-42-1
டிராட் 2-0-14-0
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
தொடக்கம் நன்றாக இருந்தது வினய் குமார் பந்து வீச்சை தான் டிராட் பந்தாடினார்...
மழை நின்று விடும் என்ற எதிர்பார்ப்பில் நானும் சில மணி நேரம் காத்திருந்தேன்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மழை நின்று விடும் என்ற எதிர்பார்ப்பில் நானும் சில மணி நேரம் காத்திருந்தேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.
அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
balakarthik wrote:pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.
அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா![]()
நியாயமான கேள்வி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» உலக கோப்பை கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து
» கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது
» 2-வது டுவென்ட்டி-20 கிரிக்கெட் :ஆஸி., அணி வெற்றி
» நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?
» உலக கோப்பை கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து
» கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது
» 2-வது டுவென்ட்டி-20 கிரிக்கெட் :ஆஸி., அணி வெற்றி
» நாளை 2-வது போட்டி:இந்தியாவின் வெற்றி தொடருமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|