Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை
4 posters
Page 1 of 1
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை
டெல்லி: அன்னாவின் உண்ணாவிரதம் குறுகிய காலத்தில் முடிந்து போனது. ஆனால் நான் ராணுவத்தின் கொடுமைகளை எதிர்த்து கடந்த 11 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். எனவே என்னையும் மதித்து எனது கோரிக்கைகளையும் பிரதமரும், மத்திய அரசும் கேட்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த வீரப் பெண்மணி இரோம் ஷர்மிளா.
சிலரது போராட்டங்கள் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் பெரிதாக பேசப்படும். ஆனால் சிலருடைய வீரமான போராட்டங்கள் சத்தமே இல்லாமல் மங்கிப் போய் மறைந்தும் போய்விடும். இதில் 2வது வகையைச் சேர்ந்தவர் ஷர்மிளா.
மணிப்பூரைச் சேர்ந்த இந்த வீரப் பெண்ணின் போராட்டம், அவரது மன உறுதி யாரையும் வியப்படைய வைக்கும். கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஷர்மிளா.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் சிறப்பு ராணுவச் சட்டத்தை நீக்கக் கோரித்தான் இந்த உயிர்ப் போராட்டம். இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், கற்பழிப்புகள், காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகளை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.
11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவரை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. இதையடுத்து வலுக் கட்டாயமாக திரவ உணவுகளை டியூப் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் போராட்டத்தை விடவில்லை ஷர்மிளா. அவரை விடுதலை செய்த பிறகும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையில் சேர்த்து அங்கு டியூப் மூலமாக திரவ உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.
இவரது இந்த வீரப் போராட்டத்திற்கு மீடியாக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி யாருமே சரியான வெளிச்சத்தைக் காட்டவில்லை. அன்னாவுக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பரம் இந்த துரதிர்ஷ்ட பெண்மணிக்குக் கிடைக்காமல் போய் விட்டது.
தனது மாநில பெண்களின் நலனுக்காகவும், ராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் அன்னா போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அன்னாவிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ இதுவரை பதில் ஏதும் இல்லை.
இந்த நிலையில் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளதாவது...
என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் அன்னாவின் போராட்டத்தை மதிக்கிறேன். ஆனால் அதை நான் குறைத்து மதிப்பிட்டுக் கூறியதைப் போல சிலர் கருத்து பரப்பி வருகின்றனர்.
அவரது போராட்டம் செயற்கையானது என்று நான் கூறியதற்கு அர்த்தம் வேறு. என்னையும், அவரையும் ஒப்பிட்டுச் சொல்வதற்காக நான் பயன்படுத்திய வார்த்தை அது. அவருடைய போராட்டம் மிக மிக குறுகிய காலத்தையுடையது. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் எனது போராட்டம் எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, ஏன் நான் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
எல்லோரையும் போலவே நானும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே நினைக்கிறேன். ஆனால் எனது லட்சியங்கள், எனது போராட்டம் முடிந்தால்தான் அது சாத்தியமாகும். அதுவரை அதை நான் நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை.
மத்திய அரசுதான் எனது போராட்டம் இத்தனை காலத்திற்கு நீடிக்க காரணம். மக்கள் இல்லை. இந்த அரசு என்னையும், எனது போராட்டத்தையும் அன்னாவுக்குக் கொடுத்தது போல மதிக்கத் தவறி விட்டது.
என்னால் அன்னாவைப் போல வெளியில் போய் போராட முடியாது. டெல்லி சென்று போராட முடியாது. காரணம், நான் சிறையில் அடைபட்டுள்ளேன். எனக்குச் சுதந்திரம் கிடையாது.
என்னால் எம்.பிக்களை நம்ப முடியாது. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் வெறும் வார்த்தையி்ல சொன்னால் என்னால் அதைக் கேட்க முடியாது. செயலில் காட்ட அவர்கள் உறுதி தந்தால் மட்டுமே என்னால் எனது போராட்டத்தை நிறுத்த முடியும் என்றார் ஷர்மிளா.
ஷர்மிளாவின் இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அரசு பாராமுகமாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு
அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு
அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப்
பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச்
சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற
அப்பாவிகள்.
மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.
ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது
போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில்
ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள
குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.
உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.
அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி
அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.
அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது
தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து
ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக்
‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச்
சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.
போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.
வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!
நன்றி:வினவு
Re: அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் .......................(பாரதி)
இயலாமையை தவிர வேறு எதையும் தர முடியவில்லை !
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் .......................(பாரதி)
இயலாமையை தவிர வேறு எதையும் தர முடியவில்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மணிப்பூர் முதல்வரிடம் இரோம் ஷர்மிளா தோல்வி
» அன்னையர் தினத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு அன்னையானார் இரோம் ஷர்மிளா
» எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை
» எனக்கும்! எனக்கும்! எல்லாம் எனக்கும்!
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» அன்னையர் தினத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு அன்னையானார் இரோம் ஷர்மிளா
» எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை
» எனக்கும்! எனக்கும்! எல்லாம் எனக்கும்!
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|