ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

+2
அன்பு தளபதி
puthiyaulakam
6 posters

Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by puthiyaulakam Fri Sep 02, 2011 2:52 pm

கல்வராயன் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் முயல்கரடு. வனப்பகுதியின் அருகே இருப்பதால் இங்கு பசுமைக்கு பஞ்சமில்லை. 100 குடும்பங்கள் வரை வசிக்கும் முயல்கரடு கிராமம் கடந்த சில மாதங்களாகவே பயத்தின் பிடியில் இறுகி தவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிரள வைக்கிறது. ஒரு காலத்தில் காட்டு முயல்கள் நடமாட்டத்தால் இந்த பகுதிக்கு முயல்கரடு என பெயர் வந்ததாக கூறும் கிராமத்தினர், இப்போது அச்சப்பட்டுக் கொண்டிருப்பது ‘மோகினி’ நடமாட்டத்தால். இரவு நேரங்களில் ஆளரவமற்ற கிராமத்து சாலையில் திடீரென்று கேட்கும் கொலுசு சத்தமும், மயங்கடிக்கும் மல்லிகை வாசமும் இவர்களின் பயத்துக்கு அச்சாரம். இதற்கு உச்சக் கட்டமாய் கேட்கும் பெண்ணின் அழுகை சத்தம் ஆளையே நடுங்க வைத்து விடுகிறது என்கிறார்கள் கிராமவாசிகள். சாலையின் குறிப்பிட்ட இடத்தில் நள்ளிரவு நேரத்தில் அழுகை சத்தத்தை கேட்ட அனுபவம் பலருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். ‘கொலுசு சத்தமும், கேவி கேவி அழும் பெண்ணின் குரலும் வேறு எதுவுமில்ல, அது மோகினியோட வேலைதான். அந்த மோகினியால இன்னும் என்னென்ன ஆபத்து வருமோ’ என்று பயத்தில் ஆழ்ந்து கிடக்கிறது முயல்கரடு கிராமம்.

அழுகை சத்தத்தை கேட்ட அனுபவத்தை வார்டு உறுப்பினர் சரவணன் கூறியது திகிலாகவே இருக்கிறது. ‘இந்த பகுதி வயல்வெளி பக்கம் இருக்கிற பாதையில இருந்து, கேவி கேவி பொண்ணு ஒருத்தி அழும் சத்தம் கேட்பதாவும், கொலுசு சத்தமும், மல்லிகைப்பூ வாசம் அடிப்பதாவும் நிறைய பேர் சொன்னாங்க. நான் நம்பல. போன அமாவாசை அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு அந்த பக்கமா போனப்ப, ஜல்..ஜல்னு கொலுசு சத்தம் கேட்டுச்சு. எனக்கு படபடக்க ஆரம்பிடுச்சு. என்னனு பாக்க டார்ச் அடிச்சு பார்த்தேன். எதுவும் தெரியல. திடீர்னு மல்லிகை வாசம் மூக்கை துளைச்சுது. மறுபடியும் கொலுசு சத்தம். கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு கேவி கேவி அழும் சத்தம் எனக்கு தெளிவா கேட்டுது. ரொம்ப ஏக்கமா அழுத மாதிரி இருந்துது. கொஞ்ச தூரம் போய் பாத்தபோது, காத்துல ஏதோ மிதந்த மாதிரி தெரிஞ்சது. இப்படிதான் பாத்தவங்க நிறைய பேர் சொன்னாங்க’ என்று சொல்கிறார் சரவணன்.

இப்படி பலரும் ஒரே போல தங்களது அனுபவங்களை சொல்வதால், மோகினி நடமாட்டம் இருப்பதாக பயப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கிராம வாசிகள். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை குறைத்து கொண்டுள்ளனர். முயல்கரடில் எல்லா வீடுகளின் வாசலிலும் காவல் தெய்வ படங்களை மாட்டி வைத்துள்ளனர். இதுபற்றி முயல்கரடு பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருத்தி, கல்யாணம் ஆகாமலே இறந்து போனா. அவளோட ஆவிதான் இப்ப மோகினியா ஏக்கத்தோட அலையுது’ என்றார். கிராமத்திலிருக்கும் பெண்கள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மல்லிகை வாசம் அடிக்கும். கணீர்..கணீர்னு கொலுசு சத்தம் கேட்கும். யாரோ அழுகிற மாதிரி இருக்கும். வெளியில் போயி பார்த்தா எதுவுமே இருக்காது. நாங்கள் யாரும் ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்ல. பிள்ளைகளையும் வெளியில அனுப்புறது கிடையாது. வெளியூருக்கு போனாலும் சீக்கிரம் வந்துடுவோம். கொஞ்சம் இருட்டிட்டாலும் அங்கேயே தங்கிடுவோம்’ என்கிறார்கள் சிறிதும் அச்சம் விலகாமல்.
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) GHOST

Visit :- http://puthiyaulakam.com/?p=6770


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 2:57 pm

என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 5:26 pm

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மதன் அவர்கள் மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகத்தை படித்தேன் அதில் ஆவிகள் வரும் போது ஜில் என்று இருக்கும் என்று கூறியிருந்தார் ஆனால் நமது பகுதிகளில் மட்டும் ஜல் என்று சத்தம் வருகிறது... ஒன்னும் புரியல


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by ஜாஹீதாபானு Fri Sep 02, 2011 5:31 pm

அங்கே ஏதாவது சமூக விரோதச் செயல் நடக்கும் அதான் மக்களை பேய் பிசாசு என்று பயமுறுத்தி
வீட்டுக்குள் அடைபட வைத்து அவர்களின் காரியத்தை சாதிக்கிறார்கள் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by ப்ரியா Fri Sep 02, 2011 9:12 pm

maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by krishnaamma Sat Sep 03, 2011 10:06 am

ப்ரியா wrote:
maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாவம் அவங்களும் ஒரு 2 வாரம் ஒட்டி இருப்பாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by puthiyaulakam Sun Sep 04, 2011 2:12 pm

krishnaamma wrote:
ப்ரியா wrote:
maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாவம் அவங்களும் ஒரு 2 வாரம் ஒட்டி இருப்பாங்க புன்னகை

எல்லாரும் போலைப்பு நடத்தத்தானே வேணுமுன்கோ...


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Empty Re: முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum