Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரம் - விமர்சனம்
+2
மரகதமணி1980
VIJAY
6 posters
Page 1 of 1
ஈரம் - விமர்சனம்
பழி வாங்கும் ஆவி கதை. இந்த கால்வரி கதை அறிமுக இயக்குனர் அறிவழகனின் கச்சிதமான திரைக்கதையில் கலைடாஸ்கோப்பில் போட்ட வளையல் துண்டுபோல் நமக்கு காட்டுவது பல வர்ண ஜாலம்.
முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆதி, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம், கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி.
விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்துப் போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்சரியம்.
படத்தின் நிஜ ஹீரோ, அறிவழகனின் திரைக்கதை. அடுத்தடுத்து கொலை நடப்பதை திகிலுடன் சித்தரிக்கும் போதே, ஆதி சிந்துமேனன் காதலும் உடன் பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின் ஆதியின் விசாரணையுடன் சிந்துமேனனின் கொலைக்கான காரணமும் சொல்லப்படுகிறது. விசாரணை, காதல், கொலைக்கான காரணம்... படத்தின் முக்கியமான இந்த மூன்று அம்சங்களையும் எந்த உறுத்தலுமில்லாமல் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கலை நான்கும் அபஸ்வரம் இல்லாமல் இணைந்திருப்பது படத்தின் மற்றொரு அம்சம். ஹாரர் படத்திற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக் காட்சிகள், சில் அவுட்டில் தெரியும் உருவங்கள் என தனியான அனுபவத்தை தருகிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. அதிக பாடல்கள் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல். ஹாரர் படம் என்பதற்காக கண்டபடி இசைக்கருவிகளை ஒலிக்கவிடாததற்காக இசையமைப்பாளர் தமனை பாராட்டலாம்.
நறுக்கி வைத்த மாதிரியான காட்சிகளின் வழி கதை சொல்லப்படுகிறது. லாஜிக் மீறக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். ஆவி பற்றி ஆதி மேற்கொள்ளும் தேடல், ஆவி கதைக்கான நியாயத்தை உருவாக்குகிறது. அதே நேரம் சந்தேக கணவனாக வரும் நந்தா கதாபாத்திரத்தின் செகண்ட்ஹேண்ட் போபியா ஓவர் டோஸ்.
படத்தில் அனைத்து நடிகர்களையும் அண்டர்ப்ளே செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். நந்தாகூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். சிந்துமேனன் காதலியாகவும், மனைவியாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டுகிறார். கணவன் சந்தேகப்படும்போது வாடிப் போகும் அவரது முகம் பரிதாபத்தை அள்ளுகிறது.
மிடுக்கான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிளிர்கிறார் ஆதி. கல்லூரி காலத்திலும் அதே மிடுக்குடன் இருப்பது மட்டும் சின்ன நெருடல். வீட்டைவிட்டு ஓடிவர முடியாது என்று சிந்துமேனன் சொல்லும்போது ஆதி சொல்லும் அடாவடி பதில் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை பாதிக்கிறது.
அபார்ட்மெண்டில் இயல்பாக நடக்கும் செக்ஸ் குற்றங்கள் எப்படி ஒன்றிணைந்து பெரும் க்ரைமாக மாறுகிறது என்பது சற்றே திடுக்கிட வைக்கிறது. அசம்பாவிதம் நிகழும்போது காட்டப்படும் சிவப்பு நிறமும், ஆவியின் மீடியமான தண்ணீரும் ஆதியை போலவே நம்மையும் பதற்றப்படுத்துவது இயக்குனரின் வெற்றி.
கச்சிதமான திரைக்கதையும், காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் என்பதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்னச் சின்ன நெருடல்களை களைந்தால், ஈரம் பெர்ஃபக்ட் த்ரில்லர்.
முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆதி, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம், கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி.
விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்துப் போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்சரியம்.
படத்தின் நிஜ ஹீரோ, அறிவழகனின் திரைக்கதை. அடுத்தடுத்து கொலை நடப்பதை திகிலுடன் சித்தரிக்கும் போதே, ஆதி சிந்துமேனன் காதலும் உடன் பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின் ஆதியின் விசாரணையுடன் சிந்துமேனனின் கொலைக்கான காரணமும் சொல்லப்படுகிறது. விசாரணை, காதல், கொலைக்கான காரணம்... படத்தின் முக்கியமான இந்த மூன்று அம்சங்களையும் எந்த உறுத்தலுமில்லாமல் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கலை நான்கும் அபஸ்வரம் இல்லாமல் இணைந்திருப்பது படத்தின் மற்றொரு அம்சம். ஹாரர் படத்திற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக் காட்சிகள், சில் அவுட்டில் தெரியும் உருவங்கள் என தனியான அனுபவத்தை தருகிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. அதிக பாடல்கள் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல். ஹாரர் படம் என்பதற்காக கண்டபடி இசைக்கருவிகளை ஒலிக்கவிடாததற்காக இசையமைப்பாளர் தமனை பாராட்டலாம்.
நறுக்கி வைத்த மாதிரியான காட்சிகளின் வழி கதை சொல்லப்படுகிறது. லாஜிக் மீறக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். ஆவி பற்றி ஆதி மேற்கொள்ளும் தேடல், ஆவி கதைக்கான நியாயத்தை உருவாக்குகிறது. அதே நேரம் சந்தேக கணவனாக வரும் நந்தா கதாபாத்திரத்தின் செகண்ட்ஹேண்ட் போபியா ஓவர் டோஸ்.
படத்தில் அனைத்து நடிகர்களையும் அண்டர்ப்ளே செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். நந்தாகூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். சிந்துமேனன் காதலியாகவும், மனைவியாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டுகிறார். கணவன் சந்தேகப்படும்போது வாடிப் போகும் அவரது முகம் பரிதாபத்தை அள்ளுகிறது.
மிடுக்கான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிளிர்கிறார் ஆதி. கல்லூரி காலத்திலும் அதே மிடுக்குடன் இருப்பது மட்டும் சின்ன நெருடல். வீட்டைவிட்டு ஓடிவர முடியாது என்று சிந்துமேனன் சொல்லும்போது ஆதி சொல்லும் அடாவடி பதில் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை பாதிக்கிறது.
அபார்ட்மெண்டில் இயல்பாக நடக்கும் செக்ஸ் குற்றங்கள் எப்படி ஒன்றிணைந்து பெரும் க்ரைமாக மாறுகிறது என்பது சற்றே திடுக்கிட வைக்கிறது. அசம்பாவிதம் நிகழும்போது காட்டப்படும் சிவப்பு நிறமும், ஆவியின் மீடியமான தண்ணீரும் ஆதியை போலவே நம்மையும் பதற்றப்படுத்துவது இயக்குனரின் வெற்றி.
கச்சிதமான திரைக்கதையும், காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் என்பதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்னச் சின்ன நெருடல்களை களைந்தால், ஈரம் பெர்ஃபக்ட் த்ரில்லர்.
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈரம் - விமர்சனம்
ஈரம் ஒரு நல்ல முயற்சி. நம் பாராட்டுக்கள்.
மரகதமணி1980- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
Re: ஈரம் - விமர்சனம்
ரொம்ப்ப்ப்ப்ப்ப பயமா இருந்தா பார்க்க மாட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஈரம் - விமர்சனம்
Tamilzhan wrote:பயமாக இல்லை சுவரஜ்மாக உள்ளது ஒருபேயின் அழகான காதல் கதை ..!
பேய் கூட என்ன காதல் வேண்டியிருக்கு??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|