Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது
2 posters
Page 1 of 1
அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது
அ.தி.முக. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல. தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது என்று, வடசென்னை மாவட்ட தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.
கண்டன பொதுக்கூட்டம்
கடந்த 16-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், "சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் சென்னையில், "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு'' என்ற தலைப்பில் வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார்.
கருணாநிதி
கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக்கொண்டுவர விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும் பாடு என்று எப்படி கூற முடியும்?
ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை. இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.
ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளை கொண்டாடினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறி கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தொகுதி மக்களுக்காக
நான் இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.
புதிய சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் நாம் கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்ததற்காக, திறப்புவிழாவில் நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும் உதவாது என்றார்கள். ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
தமிழ்நாட்டில், தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6 மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல் கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி. அவர் எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்ïனிஸ்டு கட்சியினர் என இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் சோனியா காந்தி அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து, அவர் உத்தரவுப்படி, மத்திய மந்திரி அர்ஜுன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார். உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன். நான் மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன்.
அழிக்க முடியாது
செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர் புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து இருக்கிறார்கள்.
புத்தகத்தில் உள்ள வாசகத்தை வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில் எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.
தமிழ்ப் புத்தாண்டு
மறைமலை அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள் என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று முடிவு செய்யப்பட்டது.
அதை தி.மு.க. ஆட்சியில் சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா அதை மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளார்.
தமிழுக்கும் ஆபத்து
தமிழ்நாட்டில், அ.தி.மு.க. ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ உயிரையும் கொடுக்கத்தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மு.க.ஸ்டாலின்
கூட்டத்தில், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., கோவி.செழியன் எம்.எல்.ஏ.,மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எஸ்.பி.சற்குண பாண்டியன், நடிகை குஷ்பு உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, தங்கம் தென்னரசு மற்றும் இந்நாள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக துறைமுக பகுதி செயலாளர் அ.மணிவேலன் வரவேற்று பேசினார். முடிவில் வட்டச் செயலாளர் ஜெய்சங்கர் நன்றிதெரிவித்தார்.
தினதந்தி
கண்டன பொதுக்கூட்டம்
கடந்த 16-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், "சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் சென்னையில், "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு'' என்ற தலைப்பில் வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார்.
கருணாநிதி
கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக்கொண்டுவர விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும் பாடு என்று எப்படி கூற முடியும்?
ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை. இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.
ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளை கொண்டாடினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறி கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தொகுதி மக்களுக்காக
நான் இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.
புதிய சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் நாம் கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்ததற்காக, திறப்புவிழாவில் நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும் உதவாது என்றார்கள். ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
தமிழ்நாட்டில், தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6 மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல் கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி. அவர் எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்ïனிஸ்டு கட்சியினர் என இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் சோனியா காந்தி அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து, அவர் உத்தரவுப்படி, மத்திய மந்திரி அர்ஜுன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார். உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன். நான் மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன்.
அழிக்க முடியாது
செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர் புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து இருக்கிறார்கள்.
புத்தகத்தில் உள்ள வாசகத்தை வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில் எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.
தமிழ்ப் புத்தாண்டு
மறைமலை அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள் என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று முடிவு செய்யப்பட்டது.
அதை தி.மு.க. ஆட்சியில் சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா அதை மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளார்.
தமிழுக்கும் ஆபத்து
தமிழ்நாட்டில், அ.தி.மு.க. ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ உயிரையும் கொடுக்கத்தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மு.க.ஸ்டாலின்
கூட்டத்தில், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., கோவி.செழியன் எம்.எல்.ஏ.,மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எஸ்.பி.சற்குண பாண்டியன், நடிகை குஷ்பு உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, தங்கம் தென்னரசு மற்றும் இந்நாள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக துறைமுக பகுதி செயலாளர் அ.மணிவேலன் வரவேற்று பேசினார். முடிவில் வட்டச் செயலாளர் ஜெய்சங்கர் நன்றிதெரிவித்தார்.
தினதந்தி
Re: அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது
அரசியல் கட்சிகளின் நடுவில் மாட்டிக்கொண்ட மக்கள் படும் பாடு பற்றி யாரால் சொல்ல முடியும் ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது
» கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
» தமிழுக்கும் அமுதென்று பெயர்
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
» இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது - மாளவிகா
» கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
» தமிழுக்கும் அமுதென்று பெயர்
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
» இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது - மாளவிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|