Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
Page 1 of 1
இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை துவக்கும் பணி, நிலம் ஒதுக்காததால் காலதாமதமாகி வருகிறது. முதல்வர் மனது வைத்து, நில பிரச்னையை தீர்த்து வைத்தால் கட்டுமானப் பணி உடனடியாக துவங்கும் வாய்ப்பு உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பிஜோ சிட்ரான் நிறுவனம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகாலில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.இதற்காக, இந்நிறுவன பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவினர் பல்வேறு கட்டங்களாக, தொழிற்சாலை அமையவுள்ள வல்லம் வடகால் இடத்தை, ஐந்து முறை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் அணுகுமுறை, சிறந்த கட்டமைப்பு வசதி, சாலை போக்குவரத்து, துறைமுக வசதி, திறமை வாய்ந்த தொழிலாளர், அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட நகரமாக சென்னை விளங்குவதால், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் விரும்பியது.வல்லம் வடகாலில் அமைய உள்ள தொழிற்சாலை, முதல் கட்டமாக ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், நேரடியாக 6,000 பேருக்கும், மறைமுகமாக, 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சென்ற ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, பி.எஸ்.ஏ., நிறுவன (இந்தியா) நிர்வாக இயக்குனர் பிரெட்ரிக் பேப்ரி, தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின், தொழிற்சாலையின் தோராய வரைபடத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளனர். தற்போது, இந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது வல்லம் வடகால். இங்கு தான் பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது. வல்லம் வடகால், பூதனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஒரகடத்தில் நிலம் கையகப்படுத்திய போது, அரசு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, எட்டு முதல் 10 லட்ச ரூபாய் வரை வழங்கியது.
வல்லம் வடகாலில், 10 முதல், 15 லட்ச ரூபாய் வரை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை.இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தி, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு ஒதுக்கித் தந்தால், உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கத் தயாராக உள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு, இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று, நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத்திற்கு தாவும்தொழில் முனைவோர்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமது மாநிலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக சலுகை காட்டுகிறார். இவரது நடவடிக்கையால் கவரப்பட்ட போர்டு நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்கம் செய்யாமல், குஜராத்திற்கு இடம்பெயர்ந்து விட்டது. தற்போது, பி.எஸ்.ஏ., நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மறுநாளே, குஜராத் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தினர், சென்னையில் கார் தொழிற்சாலை அமைக்கத் தான் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் போர்டு, ஹுண்டாய், நிசான், செயின்ட் கோபெயின் நிறுவனங்களின் தொழிற்சாலை இருந்தாலும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவதற்கு, அவை மட்டும் போதாது.எனவே தமிழகத்தை, தொழிற்துறையில் முன்னேற்ற விரும்பும் முதல்வர், தொழில் முதலீட்டாளர்களை பிற மாநிலங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுடன், புதிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிவகை செய்ய வேண்டியது அவசியம். - வீ.அரிகரசுதன்
நன்றி: தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இடம் ஒதுக்காததால் கார் தொழிற்சாலை துவக்குவதில் தாமதம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|