ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

+3
உதயசுதா
dsudhanandan
நட்புடன்
7 posters

Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by நட்புடன் Wed Aug 17, 2011 8:00 am

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

அதிகாலை மூன்று மணி இருக்கும். எங்கும் நிசப்தம். அந்த ஆஸ்பத்திரி வராண்டாவின் கடைசியில் இருந்த ஒரு சேரில் நடுவயது மதிக்கத் தக்க நர்ஸ் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

அம்மா அம்மாவென அந்த அலறல் கேட்டு அய்யய்யோ நா ஒன்னும் பண்ணல நா ஒன்னும் பண்ணல என்று பதறி எழுந்த நர்ஸ் கனவுலகுக்கு சீரியோ பை பை சொல்லி நிதானத்திற்கு வந்து அந்த டெலிவரி வார்டை நோக்கிப் பாய்ந்தார்.

அந்தப் பெண்ணுக்கு அது முதல் பிரசவமானதால் பயந்து ஆர்பாட்டம் செய்து வலி மிகுதியால் அலறி அந்த தெருவிற்கே சூரியன் உதிப்பதற்கு முன்பே அன்று அனைவரையும் எழுப்பிவிட்டாள்.

அரசாங்க ஆஸ்பத்திரி அல்லவா அது - ஏம்மா சும்மா கூவுற - நாங்கெல்லாம் பெத்துக்கல? என்னவோ நீ மட்டும் தான் இத்த அனுபவிக்கறா மாதிரி கத்திகினு கீறியேன்னு சொல்லி டாக்டரை அழைத்துவிட்டு டெலிவரிக்கான ஆயத்த வேலைகளில் மும்முரமானாள்.

பாவம் அந்தப் பெண்ணின் கணவனோ நர்சின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனான். ஹூம் கல்யாணம் ஆனதிலிருந்தே அவன் அப்படித்தான். பதட்டத்துடன் அங்கும் இங்கும் நடை பயின்றான்.

சிறிது நேரத்து அவஸ்தையான அலறல்களுக்குப் பின் அந்த வார்டே அமைதி ஆனது. டாக்டர் வெளி வந்து அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொல்லிச் சென்றார்.

குழந்தையின் அழு குரல் கேட்காததால் அவனோ பயத்தின் உச்சத்தில். அரை மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை பாரும்மா நீ கத்தின கத்தில் ஓம்புள்ளையே வாயடைச்சு பொறந்திருக்கான்னு சொல்லி குழந்தையை ஏதோ பொம்மையை தலை கீழாக பிடிப்பது போல் கால் இரண்டையும் பிடித்து தொங்க விட்டு முதுகில் இரண்டு தட்டு தட்டினாள் - குழந்தையும் வீரிட்டு அழத் துவங்கியது.

அப்படியே படுக்கையில் கிடத்த எத்தனிக்க குழந்தையின் கையில் குளுக்கோஸ் பாட்டிலின் ட்யூப் சிக்க டமால் என்று பாட்டில் விழுந்து உடைந்தது. கருனைக்கிழங்கு கையா இருக்கும் போலிருக்கே இவனுக்கு என்று சிரித்து விட்டு படுக்கையில் வைத்துவிட்டு மற்ற வேலைகளில் மும்முரமானாள்.

அறை மணியில் எல்லாம் நார்மல் நிலைக்கு திரும்ப இவனும் உள்ளே சென்று மனைவியையும் குழந்தையும் கண்டு மகிழ்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தனர்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளரத் துவங்கினான். அவன் கை பட்டால் பொம்மைகள் மட்டும் இன்றி அனைத்து பொருள்களும் உருத்தெரியாமல் உடைந்து போய்விடும்.

அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் அவனை அனைவரும் அன்பாகவும், திட்டியும் அழைப்பது கருனைக்கிழங்கு கைடா உனக்கு என்று தான். கருனைக்கிழங்கு பய்யா அவனின் செல்லப் பெயர் ஆனது.

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் தினமும் ஸ்கூலில் இருந்து கம்ப்ளெயின்ட் மேல் கம்ப்ளெயின்ட் - அதை உடைத்து விட்டான் இதை உடைத்து விட்டான் என்று. ஸ்கூல் பீஸ் கட்டுவதை விட அவன் உடைத்த பொருட்களுக்கு கட்டிய பணம் தான் அதிகம் எனலாம்.

அவன் வேண்டுமென்றே எதையும் உடைப்பதில்லை ஆனால் அவன் ராசி அப்படி - உடையும் தருவாயில் இருக்கும் பொருட்கள் அவன் கை பட்டு விமோச்சனம் மட்டுமே பெரும் - ராமன் கால் பட்டு அகலிகை சாப விமோச்சனம் பெறுவது போல். அது இந்த ஊருக்கு பொறுக்கவில்லை. அவன் என்ன செய்வான் பாவம்?

உடை ராஜா, டமார் பீஸ், கிருத்திறவக் கை என பல பெயரில் அவன் அறியப் பட்டாலும் கருனைக்கிழங்கு தான் நிலைத்து விட்டது. வீட்டினர் சில சமயம் உன் பேர மாத்திடலாம ராசான்னு கூட சொல்லி இருக்கிறார்கள்.

அம்மா ஏம்மா என்ன கருனைக்கிழங்குன்னு கூப்ட்றீங்கன்னு அவன் கேட்ட பொது - அவன் பிறந்ததிலிருந்து செய்ததைச் சொல்லி - காரணமும் சொன்னார்கள்.

ஒரு சில கருனைக்கிழங்குகள் அதை அரிகையில் கை அறிக்குமாம். பின்னர் சாப்பிடுகையில் நாக்கு அறிக்குமாம். அது ஏன் என்று தெரியாது ஆனால் அறிக்குமாம். அதைப் போல் தான் இவனின் கைகளும் அரித்துக் கொண்டே இருப்பதனால் தான் இவனும் காண்பவை அனைத்தையும் கை அரித்து அவற்றை உடைத்து விடுகிறானாம். காரணப் பெயர் விளங்கியதும் சந்தோஷத்தில் கையில்
இருந்த டிவி ரெமொட்டை கீழே போட்டு உடைத்து விட்டான். இப்பதான் கருனைக்கிழங்கைப் பத்தி சொல்லி வாய் மூடல அதுக்குள்ளே கை அரிச்சிடுச்சான்னு அங்கலாய்த்தாள் அம்மா.

கருணைக்கிழங்கும் வளர்ந்து வாலிபன் ஆகிவிட்டான். காலேஜ் லேபில் நிறைய உடைத்தான். செல்லுமிடமெல்லாம் உடைப்பதே வாடிக்கை ஆனது அவனுக்கு. உடையும் பொருட்கள் அவனைத் தேடி வரும். வந்து விமோச்சனம் பெரும். அதனால் வாங்கும் திட்டுகளுக்கு மட்டும் இவனுக்கு விமொச்சனமே இல்லை போல் தெரிகிறது.

வேலைக்கு சென்ற இடத்திலும் ஏதாவது ஒன்றை அவ்வப்பொழுது உடைக்காமல் இருந்ததில்லை. செல்லுமிடமெல்லாம் கருனைக்கிழங்கின் புகழ் பரவியது. முதன் முதலாக காதலி ஒரு கண்ணாடியில் ஆன பேழையை பரிசாகக் குடுக்க அதையும் நம் கருனைக்கிழங்கு போட்டு உடைத்து விட்டது. அவளுக்கோ ஆத்திரமும், சிரிப்பும் மாறி மாறி வந்து பின்னர் சமாதானம் ஆகி இன்று திருமணம் நடந்து இரண்டு வருடங்களாகி விட்டது.

கடைகளுக்கு செல்லுகையில் அவனை ஒன்றையும் தொட அவள் அனுமதிப்பதில்லை. பாவம் எத்தனை தடவைதான் வாங்கும் பொருட்களுக்கான காசை விட உடைத்த பொருட்களுக்கு கூடுதலாக கொடுப்பது?

அந்தத் தெருவில் அவள் பெயரே அந்த கருனைக்கிழங்கின் மனைவி என்றே ஆனது. அவ்வளவு பிரசித்தம் நம்மவர். கொஞ்ச வருடங்களுக்குப் பின் வயது ஏறியதால் கருனைக்கிழங்கு மாமா என்று அழைக்கப் பட்டான். ஏங்க ஏங்க நீங்க சட்டசபைக்கு போட்டி போட்டா கருனைக்கிழங்கு சின்னத்த கேட்டு வாங்குங்க என்று மனைவியால் பரிகசிக்கப் பட்டிருக்கிறான்.

இன்று அவனுக்கு வயது அறுபதை நெருங்குகிறது. மடியில் பேத்தியை வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். திடீரென பேத்தி அழத் துவங்கிவிட்டாள். ஓடி வந்த அவரின் மனைவி முதலில் குழந்தையின் கை, கால் மற்றும் விரல்கள் அத்தனையும் ஒழுங்காக இருக்கிறதான்னு பார்த்த பின்னரே சமாதானம் ஆனாள். ஏய் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்டி நீ பண்றது என்பதை சட்டை செய்யாமல் போய்விட்டாள்.

என்ன செல்லம் ஏன் கண்ணு அழுவறேன்னு கொஞ்ச அது தாத்தா தாத்தா எனக்கு ஒரு கதை சொல்லேன் ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொஞ்சியது...

சொல்லத் துவங்கினார் - ஒரு ஊர்ல கருனைக்கிழங்குன்னு ஒரு ஆள் இருந்தான்.....

ஹய் என்ன தாத்தா கருனைக்கிழங்குன்னு எல்லாம் பேர் வெப்பாங்களா என கேட்டு சிரித்தது...

கருனைக்கிழங்கு குழந்தை கருனைக்கிழங்கு தாத்தாவான கதையை பெருமையுடன் பேத்திக்கு சொல்லி முடிக்கையில் அருகில் இருந்த ஜூஸ் க்லாசைத் தட்டி உடைத்து விட்டார்.

குழந்தையும் பளிச்சென்று ஏய் தாத்தா நீதான அந்த கருணைக்கிழங்கு என்று கேட்டு கை கொட்டிச் சிரித்தது. குழந்தை சொன்னதைப் பார்த்து அனைவரும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கினர்.

இன்று கருனைக்கிழங்கு கதை கேட்காமல் அவர்களை அறிந்த வீட்டுக் குழந்தைகள் தூங்குவதே இல்லை எனலாம்.

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளுன்னு நம்ம இளையராஜாவோட பழைய மலையூர் மம்பட்டியான் படப் பாட்ட ரீமிக்ஸ் போடலாமான்னு கருனைக்கிழங்கு தாத்தா தீவிர யோசனையில் ஆழ்ந்தார்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by dsudhanandan Mon Aug 22, 2011 2:38 pm

இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by உதயசுதா Mon Aug 22, 2011 2:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Uகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Dகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Aகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Yகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Aகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Sகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Uகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Dகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Hகதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by அருண் Mon Aug 22, 2011 3:17 pm

பகிர்‌விற்கு நன்றி..! சார்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by பூஜிதா Mon Aug 22, 2011 3:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by SK Mon Aug 22, 2011 5:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by ayyamperumal Mon Aug 22, 2011 6:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு


கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by நட்புடன் Mon Aug 22, 2011 8:57 pm

dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி

நீங்க நூத்துல ஒரு ஆள். எவ்ளோ பேர் படிச்சாலும் நீங்க தான் இந்த கருணைக் கிழங்கு தாத்தாவுக்கு கருணை காட்டிநீங்க. நன்றி சுதா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by dsudhanandan Tue Aug 23, 2011 8:58 am

நட்புடன் wrote:
dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் நண்பரே.... சிரிப்பான பாவம் கருனைக்கிழங்கு தாத்தா சிரி

நீங்க நூத்துல ஒரு ஆள். எவ்ளோ பேர் படிச்சாலும் நீங்க தான் இந்த கருணைக் கிழங்கு தாத்தாவுக்கு கருணை காட்டிநீங்க. நன்றி சுதா...

நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு  கதை கேளு... Empty Re: கதை கேளு கதை கேளு கருனைக்கிழங்கு கதை கேளு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum