Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம்.
உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.
ஆழமாகப் பார்த்தீர்களென்றால், மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்க்கின்றது. மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கின்றது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி அந்த நிகழ்ச்சி, நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்க முடியும்?
மங்களமாகத்தான் இருக்க முடியும்.
அதனால் நடக்கின்ற எல்லாவற்றிலும், நமக்குள் எவையெல்லாம் இணைக்கப்படுகின்றதோ, அவற்றைப் பார்த்து வாழும் பொழுது, வாழ்க்கை மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.
இந்த மாதிரி, வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே மங்களமயமானது தான் எனும் சத்தியத்தை உணர்கின்றவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் "ஜீவன் முக்தத் தன்மையில் வாழ்பவர்கள்" என்று சொல்கிறோம்.
சில பேர் என்னிடம் சொல்வது உண்டு, "இல்லை என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை."
சில பேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.
"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று கேளுங்கள்.
எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கின்ற முதல் வார்த்தை, "என்னை மாதிரிக் கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது."
இதுதான் துக்கத்தில் கூட உச்சத்தில் தன்னை நிறுத்துவது!.
"என் கஷ்டம் எதிரிக்குக் கூட வரக்கூடாது"
"என் கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தார்களென்றால், எப்போதே அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்" என்பார்கள்.
எல்லோருமே நம் வாழ்க்கையன் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கின்றோம். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.
ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம்? துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றோம். கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கின்றது.
ஒரு முறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கின்ற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால் கூட "இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?
காத்திருப்பா,
அதிகம் குதிக்காதே,
அதிகம் ஆடாதே"
என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றோம்.
குறிப்பு:- இது கொஞ்சம் நீண்ட பதிவு என்பதால் மூன்று பதிவுகளாக பதிகிறேன் பொறுமையாக படித்துபாருங்கள்
உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.
ஆழமாகப் பார்த்தீர்களென்றால், மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்க்கின்றது. மரணம் கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கின்றது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி அந்த நிகழ்ச்சி, நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்க முடியும்?
மங்களமாகத்தான் இருக்க முடியும்.
அதனால் நடக்கின்ற எல்லாவற்றிலும், நமக்குள் எவையெல்லாம் இணைக்கப்படுகின்றதோ, அவற்றைப் பார்த்து வாழும் பொழுது, வாழ்க்கை மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.
இந்த மாதிரி, வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே மங்களமயமானது தான் எனும் சத்தியத்தை உணர்கின்றவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் "ஜீவன் முக்தத் தன்மையில் வாழ்பவர்கள்" என்று சொல்கிறோம்.
சில பேர் என்னிடம் சொல்வது உண்டு, "இல்லை என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை."
சில பேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.
"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று கேளுங்கள்.
எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கின்ற முதல் வார்த்தை, "என்னை மாதிரிக் கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது."
இதுதான் துக்கத்தில் கூட உச்சத்தில் தன்னை நிறுத்துவது!.
"என் கஷ்டம் எதிரிக்குக் கூட வரக்கூடாது"
"என் கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தார்களென்றால், எப்போதே அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்" என்பார்கள்.
எல்லோருமே நம் வாழ்க்கையன் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கின்றோம். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.
ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம்? துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றோம். கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கின்றது.
ஒரு முறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கின்ற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால் கூட "இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?
காத்திருப்பா,
அதிகம் குதிக்காதே,
அதிகம் ஆடாதே"
என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றோம்.
குறிப்பு:- இது கொஞ்சம் நீண்ட பதிவு என்பதால் மூன்று பதிவுகளாக பதிகிறேன் பொறுமையாக படித்துபாருங்கள்
Last edited by balakarthik on Mon Aug 15, 2011 5:04 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
அருமையான அசத்தலான பதிவு.
வாழ்க்கையில் எப்பொழுதும் துக்கத்தையே நினைத்துக் கொண்டிருந்தால், நாம் அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.
தோல்வி எப்படி என்பதை நிதானமாக ஆராய ஆரம்பித்தாலே போதும்.அப்பொழுதுதான் வெற்றிக்கான பாதையை அடைய முடியும்.
வாழும்போதே வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் - இது தான் என்னுடைய வாக்கியம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
வாழ்க்கையில் எப்பொழுதும் துக்கத்தையே நினைத்துக் கொண்டிருந்தால், நாம் அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.
தோல்வி எப்படி என்பதை நிதானமாக ஆராய ஆரம்பித்தாலே போதும்.அப்பொழுதுதான் வெற்றிக்கான பாதையை அடைய முடியும்.
வாழும்போதே வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் - இது தான் என்னுடைய வாக்கியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலையுடனேயே இருக்கின்றோம். துக்கத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கின்றோம்.
துக்கம் வரும்பொழுதுதான், "ஆங்! இப்போதுதான் சரி. வாழக்கையே இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா"
ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடி வருமானால் "யாருக்குத் தெரியும்?" இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா" என்று விட்டுவிடுவது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சேனலை டியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும். அதே மாதிரி எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் வரும் என்று மனதில் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதுதான் வரும்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி, அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.
God is not a Sadist.
Existence is not a Sadist.
உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்துகொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.
நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கின்றீர்கள்.
உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கின்றது. உங்கள் மூலமாக இறைவன் தன்னுடைய லீலைகளை நடத்திக் கொள்கின்றார்.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது.
நீங்கள் ஒரு விபத்தாக
இங்கு வரவில்லை,
அருமையான அதிசயமாக, நீங்கள்
இங்கே பூத்திருக்கின்றீர்கள்.
விபத்து, அதிசயம் இந்த இரண்டுமே எதிர்பாராததுதான். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.
நடந்தது நல்லதென்று நாம் நினைத்தால், அதை அதிசயம் என்று சொல்லிக் கொள்கின்றோம். நடந்து கெட்டதென்றால், அதையே "விபத்து" என்று சொல்லிக் கொள்கின்றோம்.
ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.
வாழ்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம், அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பது.
வாழ்க்கையைக் கெட்டது என்று நினைத்தீர்களென்றால், அதை என்னவாகப் பார்ப்பீர்கள்...? வாழ்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகப் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.
வாழ்க்கையை நல்லது என்று நினைத்தீர்களென்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.
ஒருவர் என்னிடம் சொன்னார், "சாமி 30 வயது வரைக்கும் நானும் என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்".
நான் கேட்டேன், "அதுக்கப்புறம் என்ன நடந்தது?"
"அதற்குப்பிறகுதான் நாங்க இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துகூ கொண்டோம்" என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும் இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால், அது அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் அது விபத்து.
துக்கம் வரும்பொழுதுதான், "ஆங்! இப்போதுதான் சரி. வாழக்கையே இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா"
ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடி வருமானால் "யாருக்குத் தெரியும்?" இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா" என்று விட்டுவிடுவது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சேனலை டியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும். அதே மாதிரி எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் வரும் என்று மனதில் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதுதான் வரும்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி, அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.
God is not a Sadist.
Existence is not a Sadist.
உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்துகொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.
நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கின்றீர்கள்.
உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கின்றது. உங்கள் மூலமாக இறைவன் தன்னுடைய லீலைகளை நடத்திக் கொள்கின்றார்.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது.
நீங்கள் ஒரு விபத்தாக
இங்கு வரவில்லை,
அருமையான அதிசயமாக, நீங்கள்
இங்கே பூத்திருக்கின்றீர்கள்.
விபத்து, அதிசயம் இந்த இரண்டுமே எதிர்பாராததுதான். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.
நடந்தது நல்லதென்று நாம் நினைத்தால், அதை அதிசயம் என்று சொல்லிக் கொள்கின்றோம். நடந்து கெட்டதென்றால், அதையே "விபத்து" என்று சொல்லிக் கொள்கின்றோம்.
ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.
வாழ்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம், அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பது.
வாழ்க்கையைக் கெட்டது என்று நினைத்தீர்களென்றால், அதை என்னவாகப் பார்ப்பீர்கள்...? வாழ்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகப் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.
வாழ்க்கையை நல்லது என்று நினைத்தீர்களென்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.
ஒருவர் என்னிடம் சொன்னார், "சாமி 30 வயது வரைக்கும் நானும் என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்".
நான் கேட்டேன், "அதுக்கப்புறம் என்ன நடந்தது?"
"அதற்குப்பிறகுதான் நாங்க இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துகூ கொண்டோம்" என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும் இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால், அது அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் அது விபத்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம், அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.
நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே.
வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத்தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.
மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.
மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.
கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.
பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்க¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.
தியான ஆராய்ச்சி
சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.
1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?
2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?
3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?
4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?
5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?
இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.
எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும்.
நன்றி:- முகிலன்
நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே.
வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத்தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.
மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.
மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.
கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.
பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்க¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.
தியான ஆராய்ச்சி
சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.
1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?
2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?
3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?
4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?
5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?
இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.
எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நன்றி:- முகிலன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
மிகவும் அற்புதமான கட்டுரை. விவரிப்பதற்கு வார்தைகள் இல்லை.இந்த கட்டுரை ஒரு பொக்கிஷம் மாதிரி.வாழ்க்கையில் சில நேரங்களில் மனதிற்கு கஷ்டம் வரும்பொழுது அல்லது கஷ்டமான நேரங்களில் இந்த மாதிரி ஒரு கட்டுரையைப் படிக்கும் போது நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
அற்புதமான ஆழ்ந்த சிந்தனையுள்ள கட்டுரை.
இப்படி ஒரு பதிவைத் தந்த பாலா அவர்களுக்கு நன்றி.
(சில நேரங்களில்)காமெடி பாலாவிற்குள் காவி(ய) பாலாவும் இருக்கிறார்
அற்புதமான ஆழ்ந்த சிந்தனையுள்ள கட்டுரை.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இப்படி ஒரு பதிவைத் தந்த பாலா அவர்களுக்கு நன்றி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
(சில நேரங்களில்)காமெடி பாலாவிற்குள் காவி(ய) பாலாவும் இருக்கிறார்
Last edited by kitcha on Tue Aug 16, 2011 10:34 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
அருமையான பதிவு பாலா........மிக்க நன்றிகள்........ ![பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
மிக்க நன்றி கிட்சா அண்ணா மற்றும் ராமன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
maniajith007 wrote: ஜீவன் முக்திக்கு வழிவகுக்கும் கட்டுரைகள்
நன்றி மயிலாடுதுறை சித்தரே
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை
kitcha wrote:(சில நேரங்களில்)காமெடி பாலாவிற்குள் காவி(ய) பாலாவும் இருக்கிறார்
அவரு அப்பப்போ வந்துபோவாறு என்ன செய்யறது எல்லாம் மாயை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» நாம் உயிரோடு வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை: பெண் போராளி
» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» நாம் உயிரோடு வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை: பெண் போராளி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|