ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ சுதந்திரம் எப்போது?

Go down

ஈழ சுதந்திரம் எப்போது? Empty ஈழ சுதந்திரம் எப்போது?

Post by kitcha Mon Aug 15, 2011 11:53 am

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் வீடுகளில் கொடியேற்றி அக்கம் பக்கத்தவருக்கெல்லாம் இனிப்பு வழங்கி மகிழ்ந்த எத்தனையோ தமிழர்கள், கடந்த மூன்றாண்டுகளாக சுதந்திர தினத்தையே கொண்டாடவில்லை. கடந்த ஆண்டு ஒரு படிமேலே போய் சில கிராமங்களில் இந்த நாளில் எல்லா வீடுகளிலும் கறுப்புக் கொடி பறந்தததையும் அறிவோம்.

இன்று இந்திய சுதந்திர தினம்… இந்த நாளை இந்த ஆண்டும் உளப்பூர்வமாகக் கொண்டாட முடியாமல் தவிக்கிறார்கள் உணர்வுள்ள தமிழர்கள் என்றால், அது நூறு சதவீத உண்மை.

தமிழர் மனதில் நீங்காத கேள்வியாக நிறைந்திருக்கும் ஈழ சுந்ததிரம் இனி மலருமா? சர்வதேசம் அதற்கு அனுமதிக்குமா… குறிப்பாக இந்தியா இதனை எந்த அளவு ஒடுக்கப் பார்க்கும்? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடி தமிழ் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

வைகோ, பொதுச் செயலர் – மதிமுக:
இந்தியா என்ற தடை இல்லாமலிருந்திருந்தால் சுதந்திர ஈழத்தில் இன்று புலிக்கொடி பட்டொளி் வீசிப் பறந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளை அனைத்து வழிகளிலும் நசுக்கிவிட்டது இந்தியா என்ற உண்மையை எங்கும் சொல்வேன்.

தலைவர் பிரபாகரன் தனியொரு ராணுவமாய் நின்று எதிர்த்தது இலங்கை படைகளை அல்ல… 20 நாடுகளின் ஆயுத பலத்தை.

ஒரு பேரழிவு, இனப் படுகொலை, சொல்லொணாத துயரங்களுக்குப் பிறகு, மீண்டும் ஈழ சுதந்திரம் பற்றிய சர்வதேச அளவிலான விவாதம் நடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. போர்க்குற்றவாளி ராஜபக்சேயும் அவரது கூட்டுக் கொலையாளிகளும் சர்வதேச நீதிமன்றப் படிகளை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இதற்கும் இந்தியாவே முட்டுக் கட்டையாய் நிற்கிறது.

இப்போதுதான் தமிழர் ஒற்றுமையும், அரசியல் சார்பற்ற ஆதரவும் ஈழத் தமிழர்களுக்கு அவசியம். இனியும் இலங்கையுடன் இணைந்து சம உரிமை அனுபவிப்பது தமிழர்களைப் பொருத்தவரை இயலாத காரியம்.

இப்போதைய தேவை ஈழத்தில் ஒரு கருத்துக் கணிப்பு தேர்தல். ஈழத் தமிழர்களுக்கு எது விருப்பம்? சுதந்திர ஈழமா, இலங்கையின் இரண்டாம்தர குடிகளாகத் தொடர்வதா?

இதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால் இதற்கான கருத்தெடுப்பு இப்போது அவசியம். இந்த கருத்தெடுப்பின் அடிப்படையில் புதிய நாடாக தமிழ் ஈழத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்கக் கூடாது.

இதை வலியுறுத்தியே எமது போராட்டம் இருக்கும்!

பழ நெடுமாறன், தலைவர், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்

சுதந்திர ஈழம் வெறும் கனவல்ல. நிறைவேற முடியாத கடின இலக்கல்ல. தமிழர்களுக்கான தாயகத்தை உருவாக்கும் மாவீரர்களின் லட்சியம் தோற்காது. அதை நோக்கிய அடுத்த கட்ட போர், இன்று இலங்கைக்கு வெளியே, சர்வதேச அளவில் நடக்கிறது. இந்தப் போரில் தமிழர்கள் வெல்வார்கள்

இந்தியாவின் தடைகளை, சதிகளையெல்லாம் முறியடித்து சுதந்திர தமிழீழம் மலரும்.

தமிழருவி மணியன், காந்தி காமராஜ் இயக்கம்
இலங்கையின் இறையாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாப்பதில் அவர்களை விட இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குதான் ரொம்ப அக்கறை.

இனியும் இரு தனித்துவமிக்க இனங்களாக இலங்கையில் தமிழரும் சிங்களரும் வசிப்பது சாத்தியமல்ல. அதில் யாருக்கும் சந்தோஷமும் இல்லை. தமிழ் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தித் தருவது சர்வதே தேசத்தின் கடமை. அதற்கான நகர்வுகளை தமிழர் அமைப்புகள் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
ஈழ சுதந்திரம் என்பது இன்றில்லாவிட்டாலும் நாளை நடந்தே தீர வேண்டிய கட்டாயம். தமிழரின் ஆயுதங்கள் மவுனித்திருக்கலாம். ஆனால் அரசியல் போராட்டம் இப்போதுதான் உக்கிரமடைந்துள்ளது. அதை ஒடுக்கும் சக்தியாக இந்தியா இருக்கக் கூடாது என்பதுதான் எமது வேண்டுகோள்.

தமிழனின் தாயகம் மலரும், அன்று கொண்டாடுவோம் சுதந்திர திருநாளை இதைவிட பல மடங்கு உற்சாகமாய்.

பழ கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர், அதிமுக

தனி தமிழ் ஈழம் அமைவது காலத்தின் கட்டாயம். போராட்டம்தான் நின்று விட்டதே, இனி எதற்கு தமிழருக்கு தனி நாடு அல்லது அரசியல் சுய உரிமை என இலங்கை அரசு நினைக்கிறது. இது தவறான அணுகுமுறை என்பதை சர்வதேச அழுத்தம் மூலம் இலங்கைக்கு புரிய வைக்க வேண்டும்.

கட்சிகளுக்கு அப்பால், ஈழம் என்று வரும்போது அனைவரின் குரலும் ஓருமித்து ஒலிக்க வேண்டும்.

இப்போது தமிழரின் சம உரிமைக்காக குரல் கொடுக்கும் நமது முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள், சுதந்திர ஈழம் மலரவும் உறுதுணையாக இருப்பார். சுதந்திர ஈழத்தில் புரட்சித் தலைவியின் பங்கும் போற்றத்தக்க வகையில் அமையும்.

முக ஸ்டாலின், பொருளாளர், திமுக
ஈழத் தமிழரின் அரசியல் விடியலுக்கு திமுக ஒரு போதும் தடையாக இருந்ததில்லை. சொல்லப் போனால், தனி ஈழம் அமையுமென்றால், அதற்காக ஆட்சியையே இழக்கக் கூட தயாராக இருந்ததுதான் திமுக. தலைவர் கலைஞர் பல முறை அறிவித்த கழகத்தின் நிலைப்பாடு இது. ஈழத் தமிழருக்காக ஏற்கெனவே ஆட்சியை இழந்ததும் இதே திமுகதான்.

ஆனால், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம், தமிழர் பிரச்சினையில் இங்குள்ளவர்களின் போராட்டம் மட்டுமே ஒரு தீர்வை கொண்டுவந்துவிடாது என்பதை. இதில் இந்திய அரசு, சர்வதேச அரசுகளின் அணுகுமுறை என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழருக்கு எதிரான போர்க்குற்றவாளி நாடாக இலங்கையை சர்வதேச அளவில் பிரகடனப்படுத்துவது அவசியம். அதன் அடிப்படையில் தமிழரின் பெருவிருப்பின் அடிப்படையில் அரசியல் உரிமையை வழங்க வேண்டும். அது தனி ஈழமாக அமைந்தால் உள்ளபடியே நாம் பெருமகிழ்ச்சியடைவோம்.

இந்த நிலையை நோக்கி தமிழரின் அரசியல் போராட்டம் அமைய வேண்டும். திமுக இந்த போராட்டங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும்.

-என்வழி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழ சுதந்திரம் எப்போது? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum