ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

4 posters

Go down

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Empty வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

Post by ரேவதி Fri Aug 05, 2011 11:42 am

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Large_288854
வளைபந்து விளையாட்டுக்கான இந்திய அணியின்
கேப்டன்; உலகக் கோப்பை போட்டியில், நாட்டுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம்
பெற்றுத் தந்தவர்; இன்று தோல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு
கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பத்மா. இவர்களது மகன்
நாராயணசூர்யா, 33. இவருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்து வளைபந்து
விளையாட்டில் ஆர்வம் அதிகம். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விளையாடி
வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்த சூர்யா குடும்ப வறுமை காரணமாக, தனது
கல்வியை கடந்த 93ம் ஆண்டில் நிறுத்திவிட்டார்.

அதே ஆண்டு, வளைபந்து
விளையாட்டில் சப்-ஜூனியர் பிரிவில், தேசிய அளவில் தங்க மெடல் பெற்றார்.
கடந்த 97ம் ஆண்டு முதல் சீனியர் பிரிவிற்காக, விளையாட துவங்கினார். 2000ம்
ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை, தமிழக அணிக்காக தங்க மெடல் பெற்று
கொடுத்துள்ளார். 2006ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில்,
பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். பிறகு இந்திய அணியில் கேப்டன் பதவியை
ஏற்றார்.
கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய
அணி கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
தற்போதும் இந்திய அணி கேப்டனாக திகழ்கிறார். உலகக்கோப்பை போட்டியில்
வெண்கலப் பதக்கம் பெற்றதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில்,
இவருக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வறுமையில் வாடும்
சூர்யா, தனது குடும்பத்தை நடத்த, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல்
தொழிற்சாலையில் 140 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.

அவர் கூறியதாவது: குடும்ப
வறுமை சூழ்நிலை காரணமாக நான் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு,
தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறேன். சிறு வயது முதல் வளைபந்து
விளையாடுவதில், எனக்கு ஆர்வம் இருந்தது. கடந்த 93ம் ஆண்டு முதல் மாவட்ட,
மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன்.
இரண்டு முறை உலகளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம்
பெற்றுள்ளேன். தற்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் உள்ளேன். இந்த
விளையாட்டிற்கு கல்விதுறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும்,
கிரிக்கெட், டென்னிஸ் போல மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு நாராயணசூர்யா
கூறினார்.

அங்கீகாரம் கிடைக்குமா? : வெளிநாடுகளில்
நடக்கும் போட்டிகளில் விளையாட, பலரிடம் கையேந்தி ஸ்பான்சர் வாங்கி விளையாட
வேண்டிய நிலையில்தான் தற்போதும் இவர் உள்ளார். பல பதக்கங்களை இவர்
பெற்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மெடல்களும்,
பதக்கங்களும், சான்றிதழ்களுமே கிடைத்துள்ளன.

நாராயணசூர்யா கூறியதாவது:
உலக கோப்பை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். அதற்கு
பத்து லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிப்பதாக கூறினர். வளைபந்து சங்கத்தின்
மூலம், அதற்காக விண்ணப்பித்துள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இந்த
வளைபந்து விளையாட்டில் உலகளவில் பெருமை தேடிக்கொடுத்தாலும் இன்றளவில் நான்
வறுமையில் வாடி வருகிறேன். எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனக்கும்,
இந்த விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரம் தரவேண்டும். மேலும், எனக்கு அரசு
பணி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசூர்யா கூறுகிறார்.
நாராயணசூர்யாவின்
மனைவி ரதிபிரியாவும் வளைபந்து வீராங்கனைதான். அவரும் தேசிய அளவிலான,
தெற்காசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, வளை பந்து விளையாட்டு
இந்திய அணியின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு
உரிய நடவடிக்கை எடுக்குமா?

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Empty Re: வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

Post by kitcha Fri Aug 05, 2011 11:51 am

ஏழை என்ற காரணத்திற்காக ஒரு திறைமை வாய்ந்த வீரரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். நல்ல தகுதியான வீரர்களை, அரசாங்கம் ஊக்கப்படுத்தவேண்டும்.
இந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின், முதல்வர் ஒரு நல்ல நடவடிக்கை எடுத்தால் நன்று.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Empty Re: வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

Post by அருண்வினோ Fri Aug 05, 2011 12:43 pm

இப்படி ஒரு சூழ்நிலையில்தான் தடகள வீராங்கனை புதுக்கோட்டை சாந்திக்கு முன்னாள் முதல்வர் மு.க. அவர்கள் உதவி செய்து, வேலை கொடுத்து அவரை கவுரவ படுத்தினார். அதே போல் ஒரு நடை முறை மீண்டும் பின்பற்ற வேண்டும்..
அதுசரி... அப்படி கவுரவ படுத்துவதற்கு அவர் என்ன கிரிக்கெட் பிளாயேரா..!
இந்த மாதிரி நிலையால் நமது தேசிய விளையாட்டில் நாம் உலக அரங்கில் இருந்து காணாமல் போயி கொண்டிருக்கிறோம்...
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Empty Re: வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

Post by செல்ல கணேஷ் Fri Aug 05, 2011 1:40 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம் Empty Re: வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum