Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி
2 posters
Page 1 of 1
பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி
![பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி Cni9](https://2img.net/h/www.dailythanthi.com/images/news/20110731/cni9.jpg)
"நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டமும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்தது.
இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மத்திய அரசு கொண்டுவர உள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்கள். இதற்கு மற்ற மாநில முதல்வர்களும் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதுவீர்களா?
பதில்:- தேவைப்பட்டால் எழுதுவேன்.
நில அபகரிப்பு வழக்கு
கேள்வி:- இன்றைக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளாரே...?
பதில்:- ஸ்டாலின் கைது செய்யப்படவில்லையே.
கேள்வி:- தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறுகிறார்களே?
பதில்:- நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சி காலத்தில் நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் செய்தார்கள். ஆனால் அப்போதைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் செய்து வருகிறார்கள். நாள்தோறும் ஏராளமான புகார்கள் குவிந்து வந்ததால் இதனை விரைவாக விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சிறப்பு பிரிவு காவல் துறையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பொது மக்களால் தரப்படும் உண்மையான புகார்கள் தான். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். இதில் அரசியல் பழிவாங்கும் செயல் எதுவும் இல்லை. இதுவரை வந்துள்ள புகார்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.
அரசியல் பழிவாங்குதல் இல்லை
கேள்வி:- கடந்த ஆட்சியில் இதுபோன்ற புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- அ.தி.மு.க. அரசு தி.மு.க.வினரை பழிவாங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளாரே?
பதில்:- யாரையும் பழிவாங்கவில்லையே. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 2 மாதகாலமாக யாரையும் பழிவாங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்து வருகிறார்கள். காவல் துறையினர் அவர்களுக்கு வருகிற புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இது பழிவாங்குதல் இல்லை.
பிரதமர், சோனியா பதில்
கேள்வி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர், உள்துறை மந்திரி, சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
பதில்:- இந்த வழக்கில் முன்னாள் மத்திய தகவல் தொடர்பு மந்திரி ஆ.ராசா, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர்களது பதில் என்ன? என்று இந்த நாடே எதிர்பார்க்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராகவும், காங்கிரஸ் தலைவராகவும் உள்ள சோனியா காந்தியும் இதுகுறித்து ஒரு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட வேண்டும். நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்களது பதிலை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது.
கலைஞர் டி.வி.
கேள்வி:- லோக்பால் சட்டத்தில் பிரதமரை சேர்க்க வேண்டியதில்லை என்று கூறியிருந்தீர்களே?
பதில்:- அது வேறு, இது வேறு. லோக்பால் சட்டம் பற்றி எங்களது கருத்தை ஏற்கனவே நான் தெளிவாக கூறியிருக்கிறேன். பிரதமர் பதவி என்பது ஒரு பொறுப்புள்ள பதவி. அதன் அதிகாரத்தை குறைக்கும் அளவில் பிரதமரை இதில் சேர்க்கக்கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். தனிப்பட்ட ஒருவருக்காக இதனை கூறாமல் பிரதமர் என்பதற்காக கூறுகிறேன்.
கேள்வி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விவகாரத்தில் எந்த வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்:- இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் அவ்வப்போது சி.பி.ஐ.க்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இலங்கை பிரச்சினை
கேள்வி:- இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் வலியுறுத்துமா?
பதில்:- அ.தி.மு.க. எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை பாராளுமன்ற இரு அவைகளிலும் வலியுறுத்துவார்கள். இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்கும் வழக்கில் தமிழக வருவாய் துறையை இணைத்தும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம்.
ஹிலாரி ஆதரவு
கேள்வி:- இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஏதாவது உறுதி அளித்துள்ளதா?
பதில்:- மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரியிடம் இருந்து தான் நல்ல ஆதரவு கிடைத்தது. அமெரிக்க காங்கிரஸ் கமிட்டியும் இலங்கை மீது பொருளாதார தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கேள்வி:- அரசு கேபிள் டி.வி. எந்த அளவு உள்ளது?
பதில்:- அரசு கேபிள் டி.வி.க்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் 2 நாட்கள் முன்பு வெளியிடப்பட்டதே.
சமச்சீர் கல்வி
கேள்வி:- சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதுகிறீர்களா?
பதில்:- நீதிமன்றம் முடிவை அறிவித்துவிட்டதா? நீதிமன்றத்தில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லையே. முடிவை அறிவிக்கட்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த பிரச்சினையில் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி
கேள்வி:- இன்றைக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளாரே...?
பதில்:- ஸ்டாலின் கைது செய்யப்படவில்லையே.
எல்லாரும் பார்த்துக்கோங்க நானும் ரவுடிதான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்..
![பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி A51521](https://2img.net/h/www.kanavy.com/Upload/a51521.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|