ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

2 posters

Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி Empty கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

Post by jesudoss Fri Jul 29, 2011 4:06 pm

சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிப்பது வழக்கமாக உள்ளது. அதிகாலை நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளிடம், திரும்பி வரும் போது சவாரி கிடைக்காது என்று கூறி ஆட்டோக்காரர்கள் இரு மடங்கு கட்டணம் வசூலித்து விடுகிறார்கள்.

பயணிகள் இப்படி அவஸ்தை படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலும் இந்த திட்டத்துக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்று, தாங்கள் எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ, அதை கூறினால் போதும், அதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கம்ப்யூட்டர் பில் தந்து விடுவார்கள். அதை காட்டி, தயாராக நிற்கும் ஆட்டோவில் ஏறி வந்து விடலாம். பயணிகள், தங்களது இடம் வந்து சேர்ந்ததும், கம்ப்யூட்டர் பில்லில் உள்ள தொகையை கொடுத்தால் போதும். கூடுதல் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

நடுத்தர வசதி உடைய பயணிகளுக்கு இந்த திட்டம் மிக, மிக பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிகிறது.

சமீப காலமாக கோயம்பேட்டில் ப்ரீ-பெய்டு ஆட்டோ முறை முடங்கி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதி சுறுசுறுப்பாக இருப்பது போல தெரியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்றால், வாங்க... வாங்க... எங்க போகணும்? என்று விசாரிப்பார்கள்.

இடத்தைச் சொன்னதும் கம்யூட்டர் பில் கூட போட்டு தந்து விடுவார்கள். ஆனால் ஆட்டோதான் வராது. இந்த இடத்தில்தான் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த கட்டணத்தை பயணிகள் கொடுத்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது கவுண்டரில் இருப்பவர்களே.. கம்ப்யூட்டர் “பில்”லில் கூடுதல் தொகையை எழுதி விடுகிறார்கள்.

உதாரணத்துக்கு கோயம் பேட்டில் இருந்து முகப்பேர் செல்ல 84 ரூபாய் என்று கம்யூட்டர் பில் வந்தால், கவுண்டரில் இருப்பவர்களே பேனாவில் 90 ரூபாய் என்று எழுதி கொடுக்கிறார்கள். இது கோயம்பேடு ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டத்தில் நடக்கும் முதல் குளறுபடியாகும்.

அடுத்த குளறுபடி என்ன வென்றால், முன்பெல்லாம் கம்ப்யூட்டர் பில் போடப்பட்டு கொடுத்ததும், ஒரு நபர் அதை வாங்கி பார்த்து, உடனே ஆட்டோவை கூப்பிட்டு, நீங்கள் இதில் ஏறி போங்கள் என்பார்கள். பயணிகள் யாருக்கும், எந்த பிரச்சினையும் இருக்காது. பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் தற்போது இந்த நிலை இல்லை.

பயணிகள் கம்ப்யூட்டர் பில் வாங்கிய பிறகு திண்டாட வேண்டியதுள்ளது. அதை கண்காணித்து நெறிபடுத்த யாரும் நிற்பது இல்லை. மாறாக அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால், ப்ரீ-பெய்டா... இருங்க, பொறுங்க, ஆட்டோ வரும் என்கிறார்கள். ஆட்டோ எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி மந்தமாகி விட்டதால், மற்ற ஆட்டோக்காரர்கள் அங்கு வந்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அழைத்து செல்வது அதிகரித்து வருகிறது. ப்ரீ-பெய்டு ஆட்டோ வெல்லாம் வராது சார் என்று திணற வைக்கிறார்கள். அதையும் மீறி வரிசையில் நின்றால், நீங்க இங்கேயே நின்னுக்கிட்டுதான் இருப்பீங்க...

ப்ரீ-பெய்டு ஆட்டோ கிடையாது. வந்துடுங்க என்று சொல்லி பயணிகளை அழைக்கிறார்கள். சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி சீர் குலைந்துள்ளது. போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே கோயம்பேடு ப்ரீ- பெய்டு ஆட்டோ திட்டம் வெளியூர் பயணிகளுக்கு உண்மையிலேயே பயன் அளிப்பதாக இருக்கும்.

இல்லையெனில் ப்ரீ-பெய்டு ஆட்டோ என்பது வெறுமனே போர்டில்தான் இருக்கும். ப்ரீ-பெய்டு ஆட்டோ தொடர்பாக பயணிகள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், போக்குவரத்து துறையை (வடமேற்கு) 26215969 என்ற எண்ணிலும் காவல் துறையை 26746611 மற்றும் 26744445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி A>


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550 கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550 கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

Post by தாமு Fri Jul 29, 2011 4:33 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
» துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 14-ம் தேதி அமித்ஷா சென்னை வர திட்டம்...!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum