Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
+5
ஸ்ரீஜா
SK
பாலாஜி
தே.மு.தி.க
ரபீக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள திமுகவின் செயற்குழு இன்று கோவையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டம், திமுக தலைமையில் மாற்றம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை தீவிரப்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே தயாநிதிமாறன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் நிலை.
இன்னொரு பக்கம் திமுக தலைமைப் பதவிக்கான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது, முன்னெப்போதும் இல்லாத வகையில்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்?
நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.
ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
கோவையில் திமுக தலைவர்கள்
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது. முதலாவதாக இன்று மாலை 4 மணிக்கு தி.மு.க. செயற்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா வளாகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க. தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பற்றி முக்கியமான விவாதங்கள் இடம் பெறும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வுக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுக்கு பதில், மக்களவைக் குழுக்கள் அமைத்து அதன்கீழ் அவர்களை செயல்பட வைக்கலாமா? என்று தி.மு.க. தலைமைக்கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நாளை பொதுக்குழு
இதைதொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,950 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கோவை சென்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அண்ணா வளாகத்திற்கு சென்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருணாநிதி கோவை பயணம்
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று இரவு 10.10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தட்ஸ்தமிழ்
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை தீவிரப்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே தயாநிதிமாறன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் நிலை.
இன்னொரு பக்கம் திமுக தலைமைப் பதவிக்கான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது, முன்னெப்போதும் இல்லாத வகையில்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்?
நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.
ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
கோவையில் திமுக தலைவர்கள்
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது. முதலாவதாக இன்று மாலை 4 மணிக்கு தி.மு.க. செயற்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா வளாகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க. தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பற்றி முக்கியமான விவாதங்கள் இடம் பெறும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வுக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுக்கு பதில், மக்களவைக் குழுக்கள் அமைத்து அதன்கீழ் அவர்களை செயல்பட வைக்கலாமா? என்று தி.மு.க. தலைமைக்கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நாளை பொதுக்குழு
இதைதொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,950 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கோவை சென்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அண்ணா வளாகத்திற்கு சென்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருணாநிதி கோவை பயணம்
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று இரவு 10.10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை தீவிரப்படுத்தியது
இது தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்டது தானே
இது இன்று காலை தினசரி வாங்கும்போது கேட்டதுபல காட்சிகளை கருணாநிதி உடைத்தார் அவர் கட்சி உடைவதை அவரால் தடுக்க இயலுமா
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
என்ன முடிவு எடுக்குகிறார்கள் என்று பார்ப்போம் ........
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
ஒரே படப்பிடிப்பா இருக்குதாம் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
ரபீக் wrote:ஒரே படப்பிடிப்பா இருக்குதாம் !!
ஐயோ பாஸ் அது படபடப்பு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
ரேவதி wrote:ரபீக் wrote:ஒரே படப்பிடிப்பா இருக்குதாம் !!
ஐயோ பாஸ் அது படபடப்பு
டங் ஸ்லிப் ஆகிடுச்சுமா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
குடும்பம் தனி அரசியல் தனி இருந்தா பிரிச்சனை இல்லை
ரெண்டும் ஒண்ணா இருந்தா இப்படிதான்
ரெண்டும் ஒண்ணா இருந்தா இப்படிதான்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
பூஜிதா wrote:குடும்பம் தனி அரசியல் தனி இருந்தா பிரிச்சனை இல்லை
ரெண்டும் ஒண்ணா இருந்தா இப்படிதான்
கவித கவித ஸாரி கருத்து கருத்து...
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாளை திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலினை செயல் தலைவராக்க முடிவு?
» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
» திமுக ஆட்சியில் செய்ய முடியாதது எதுவும் கிடையாது: ஸ்டாலின்
» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
» திமுக ஆட்சியில் செய்ய முடியாதது எதுவும் கிடையாது: ஸ்டாலின்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|