Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
+2
அருண்
கண்ணன்3536
6 posters
Page 1 of 1
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
Viruvirupu, Saturday 16 July 2011, 08:47 GMT
சென்னை, இந்தியா: முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலையடுத்தே தனிமையில் மாமல்லபுரம் சென்றார் என்று தெரியவருகின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், முன்னாள் முதல்வரின் குடும்பம் இரண்டாகப் பிரியும் நிலைமையைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதல் சம்பவம், தி.மு.க. உள்வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மோதல் நடைபெற்ற விஷயத்தை மிகச் சிரமப்பட்டு மறைத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.
இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம்.
“சென்ற அத்தியாயத்தில்..”
திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.
“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.
அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.
“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றையவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழமையாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்திருந்தது” என்று சொன்னார், எமது தி.மு.க. சோர்ஸ்.
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.
அங்கே காட்சி, வேறுவிதமாக இருந்திருக்கின்றது.
செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.
இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.
இதையடுத்தே கலைஞர், மறுநாள் காலை மாமல்லபுரம் செல்ல முடிவெடுத்தார். தன்னுடன் யாரும் வரவேண்டாம் என்று கூறி, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக்கொண்டு காலையிலேயே சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மாமல்லபுரத்தில் யார் என்ன சமாதானம் செய்தார்கள் என்பது தெரியவில்லை. அன்று மாலை வீடு திரும்பியிருக்கிறார்.
23ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது. அதில் தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அது எப்படியாவது நடந்துவிடக் கூடாது என அவரது எதிரணி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
“இந்தக் குடும்ப மோதல்தான் இவையெல்லாம்” என்று கூறிய தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர், “என்ன செய்வது… கட்சியின் தலைவிதி, இவர்களது குடும்பச் சண்டையில்தான் தங்கியிருக்கின்றது” என்றார் சோகமான குரலில்.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் மாமல்லச் சக்கரவர்த்தி உருவாக்கிய அதிசயம்தான் மாமல்லபுரம் என்கிறது வரலாறு. இங்கே, மாமல்லனோடு மோதிக்கொண்டு, மகேந்திரவர்மர் சென்றிருக்கிறார் மாமல்லபுரத்துக்கு!
Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
இங்கயே ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போலிருக்கே...!
பகிர்விற்கு
பகிர்விற்கு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
அடப்பாவமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
வருத்தமுறுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. தன் வினை தன்னைச்சுடும்.. வீட்டப்பம் ஓட்டைச்சுடும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
ஸ்டாலின் தனிக்கட்சி துவங்கலாம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. மோதல்
» ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!
» கனிமொழிக்கே தெரியாமல் கலைஞர் டிவி இயக்குனராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஆதரவாளர்!
» கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு)
» ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. மோதல்
» ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!
» கனிமொழிக்கே தெரியாமல் கலைஞர் டிவி இயக்குனராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஆதரவாளர்!
» கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|