Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
4 posters
Page 1 of 1
ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
"பதவியை விட்டு விலகமாட்டேன்' என்று கடைசிவரை முரண்டு பிடித்துக் கொண்டிருந்த தயாநிதி, ஒருவழியாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோரது வற்புறுத்தலுக்கு பின், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். "பதவி விலக ஒருமாதம் வரை காலஅவகாசம் வேண்டும்' என்று அவர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர், காங்கிரஸ், தி.மு.க., தலைமை என அனைத்து தரப்புமே நிராகரித்து விட்டன. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ., விசாரணைக்கு தயாநிதி உள்ளாகப்போவது உறுதியாகி விட்டது.
தயாநிதி விவகாரத்தால், தனது அரசுக்கு ஏற்படப்போகும் புதிய நெருக்கடியை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஜே.பி.சி., விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லியில் பாலு முகாமிட்டுள்ள சூழ்நிலையில், அவரிடம் தயாநிதி பிரச்னை குறித்து பிரதமர் பேசினார். "சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையில், தயாநிதி பங்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.பிரதமரின் இந்த தகவலை உடனடியாக, டி.ஆர்.பாலு, சென்னையில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டார். அந்த இரவிலேயே தி.மு.க., தலைமையும், தயாநிதி தரப்பும் மாறி மாறி பேசி ஆலோசனை நடத்தினர். ஒரு கட்டத்தில், கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். நேற்று காலையில் தயாநிதி இல்லத்திற்கு டி.ஆர்.பாலு விரைந்தார். "நீங்கள் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை' என, அப்போது தயாநிதியிடம் பாலு தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆகியோரையும் அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், விசாரணை அறிக்கையில் பெயர் இருந்தால் அது எப்.ஐ.ஆர்., அறிக்கை போல கருதிவிட முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது இல்லத்தில் இருந்து வழக்கம்போல தயாநிதி கிளம்பிச் சென்றார். கேபினட் கூட்டத்தில் இவர் பங்கேற்பது போல வெளியில் ஒரு தோற்றம் காட்டப்படவே, ராஜினாமா செய்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றாரா, இல்லையா என்று கூட்டத்தின் முடிவில், அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்டபோது, அவர் பங்கேற்றார் என்றார். ஆனால், உண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்கவில்லை .
பிரதமரை நேரில் சந்தித்து தனது ராஜினாமாவை தள்ளிப்போடச் செய்ய முயற்சி எடுத்தார். "ராஜினாமா செய்ய தயார் என்றும், அதற்கு ஒரு மாதகால அவகாசம் வேண்டும்' என்று பிரதமரிடம், தயாநிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையை ஏற்கனவே தி.மு.க., தலைவரான கருணாநிதியிடமும், தயாநிதி வைத்தார். அது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடைசி முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவரது ஆலோசகர் அகமது படேலுடனும், தயாநிதி தரப்பு பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அனைத்து தரப்புமே தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், வேறு வழியில்லை என்ற நிலை தயாநிதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு நேற்று பிற்பகல் தயாநிதி சென்றார். அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த பி.எம்.டபிள்யூ., காரில் தயாநிதி சென்றார். அந்த சந்திப்பின் போது, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம், தயாநிதி அளித்தார். இந்த ராஜினாமாவால், இரண்டாவது முறையும் தயாநிதி , ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக இல்லாமல் துரதிர்ஷ்டவாசியாக வெளியேறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையின் நிலைமை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த ஊழலில் இதற்கு முன்பும் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குறிப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் விசாரணை அறிக்கையை மட்டுமாவது தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், தயாநிதியின் பெயரை சி.பி.ஐ., குறிப்பிட்டிருந்தது. "ஏர்செல் கம்பெனியை விற்பதற்கு நெருக்கடி அளித்து, அதன் நிறுவனர் சிவசங்கரனை தயாநிதி மிரட்டியது உண்மைதான்' என்று குற்றம்சாட்டியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பங்கு இருப்பதை சி.பி.ஐ., உறுதி செய்தது.இந்த குற்றச்சாட்டை அடுத்து தயாநிதி மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.
தினமலர்
தயாநிதி விவகாரத்தால், தனது அரசுக்கு ஏற்படப்போகும் புதிய நெருக்கடியை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஜே.பி.சி., விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லியில் பாலு முகாமிட்டுள்ள சூழ்நிலையில், அவரிடம் தயாநிதி பிரச்னை குறித்து பிரதமர் பேசினார். "சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையில், தயாநிதி பங்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.பிரதமரின் இந்த தகவலை உடனடியாக, டி.ஆர்.பாலு, சென்னையில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டார். அந்த இரவிலேயே தி.மு.க., தலைமையும், தயாநிதி தரப்பும் மாறி மாறி பேசி ஆலோசனை நடத்தினர். ஒரு கட்டத்தில், கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். நேற்று காலையில் தயாநிதி இல்லத்திற்கு டி.ஆர்.பாலு விரைந்தார். "நீங்கள் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை' என, அப்போது தயாநிதியிடம் பாலு தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆகியோரையும் அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், விசாரணை அறிக்கையில் பெயர் இருந்தால் அது எப்.ஐ.ஆர்., அறிக்கை போல கருதிவிட முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது இல்லத்தில் இருந்து வழக்கம்போல தயாநிதி கிளம்பிச் சென்றார். கேபினட் கூட்டத்தில் இவர் பங்கேற்பது போல வெளியில் ஒரு தோற்றம் காட்டப்படவே, ராஜினாமா செய்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றாரா, இல்லையா என்று கூட்டத்தின் முடிவில், அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்டபோது, அவர் பங்கேற்றார் என்றார். ஆனால், உண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்கவில்லை .
பிரதமரை நேரில் சந்தித்து தனது ராஜினாமாவை தள்ளிப்போடச் செய்ய முயற்சி எடுத்தார். "ராஜினாமா செய்ய தயார் என்றும், அதற்கு ஒரு மாதகால அவகாசம் வேண்டும்' என்று பிரதமரிடம், தயாநிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையை ஏற்கனவே தி.மு.க., தலைவரான கருணாநிதியிடமும், தயாநிதி வைத்தார். அது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடைசி முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவரது ஆலோசகர் அகமது படேலுடனும், தயாநிதி தரப்பு பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அனைத்து தரப்புமே தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், வேறு வழியில்லை என்ற நிலை தயாநிதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு நேற்று பிற்பகல் தயாநிதி சென்றார். அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த பி.எம்.டபிள்யூ., காரில் தயாநிதி சென்றார். அந்த சந்திப்பின் போது, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம், தயாநிதி அளித்தார். இந்த ராஜினாமாவால், இரண்டாவது முறையும் தயாநிதி , ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக இல்லாமல் துரதிர்ஷ்டவாசியாக வெளியேறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையின் நிலைமை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த ஊழலில் இதற்கு முன்பும் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குறிப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் விசாரணை அறிக்கையை மட்டுமாவது தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், தயாநிதியின் பெயரை சி.பி.ஐ., குறிப்பிட்டிருந்தது. "ஏர்செல் கம்பெனியை விற்பதற்கு நெருக்கடி அளித்து, அதன் நிறுவனர் சிவசங்கரனை தயாநிதி மிரட்டியது உண்மைதான்' என்று குற்றம்சாட்டியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பங்கு இருப்பதை சி.பி.ஐ., உறுதி செய்தது.இந்த குற்றச்சாட்டை அடுத்து தயாநிதி மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
பதவி மேல் எத்தனை வெறி என்பது புரிகிறது. இப்படி கேவலப்படுவதை விட தூக்கில் தொங்கலாம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
செய்த பாவமாப்பா, செய்த பாவம்
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!
» தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு மன்மோகன் சிங் அனுமதி?
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு
» பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!
» தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு மன்மோகன் சிங் அனுமதி?
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|