ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருப் போராட்டங்கள் உலக வரலாறு படைக்கும் பாரம்பரியமாகும்

Go down

தெருப் போராட்டங்கள் உலக வரலாறு படைக்கும் பாரம்பரியமாகும்  Empty தெருப் போராட்டங்கள் உலக வரலாறு படைக்கும் பாரம்பரியமாகும்

Post by சிவா Fri Jul 08, 2011 11:11 pm

தெருப் போராட்டம் ஆயுதமற்ற மக்களின் வலுமை மிகுந்த ஆயுதம். தெருப் போராட்டம் கொடுங்கோலாட்சியாளர்களையும் பேரரசுகளையும் மண்ணைக் கவ்வச் செய்து மக்களின் உரிமையை மலரச் செய்தது உலக வரலாறு ஆகும்.

ஏதுமற்றவன் தட்டுவான் தன் கால்களை, நடப்பான் தெருவில், கவிழ்ப்பான் கொடுங்கோல் ஆட்சியை. அது அவனின் பாரம்பரியம்.

அடிபட்டு, ஆட்சியை இழந்து, நடுத்தெருவில் வீசி எறிப்பட்ட அரசனுக்கும் அமைச்சனுக்கும் அந்தப் பாரம்பரியம் ஏற்புடையதல்ல. அவர்கள் அப்படிக் கூறுவதால், அந்தப் பாரம்பரியம் அசிங்கமானதாகி விடுவதில்லை, அழிந்து விடுவதில்லை. மனிதன் இருக்கிறவரையில், கொடுங்கோலாட்சி தொடர்கின்றவரையில் தெருப் போராட்டம் மனிதனின் இறுதி ஆயுதமாகத் தொடரும். அது போராட்ட மனிதன் அழிவற்ற பாரம்பரியம்.

மலேசியாவில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெருப் போராட்டம் ஏற்புடையதல்ல. அது நமது பாரம்பரியம் அல்ல என்று கூறுகின்றார்கள். இதில் புதுமை ஒன்றுமில்லை.

ஆட்சியில் அமர்வதற்குத் தெருப் போராட்டம் வேண்டுமென்றால் அவர்கள் செய்வார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அகற்றுவதற்கு தெருப் போராட்டம் நடத்தினால், அது நமது பாரம்பரியமல்ல என்று கூறுவார்கள்.

மலேசியாவில் எத்தனையோ தெருப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் நாட்டை ஆளும் அம்னோ நடத்திய தெருப் போராட்டங்களும் உண்டு.

பிரிட்டீஷ் அரசின் மலேயன் யூனியன் கொள்கையை எதிர்த்து அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார் தெருப் போராட்டம் நடத்தினார். அது யாருடைய பாரம்பரியம்?

இன்றைய பிரதமர் நஜிப், அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராகவும் ஓர் அமைச்சராகவும் இருந்தபோது சுல்தான் சுலைமான் அரங்கத்தில் நடந்த பேரணியில் “மே 13 தொடங்கிவிட்டது”, “அதனை (கிரீஸ்) சீனர்களின் இரத்தத்தில் தோய்ப்போம்”, என்ற வாசகங்களைக்கொண்ட பாதாதைகளை ஏந்திக்கொண்டு தேசநிந்தனை உரைகள் ஆற்றப்பட்டது. அது யாருடைய பாரம்பரியம்?

சமீப காலங்களின் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் யாருடைய பாரம்பரியங்கள்?

இன்று, பெர்சே நடத்தத் திட்டமிட்டிருக்கும் தெருப் பேரணி நமது பாரம்பரியம் அல்ல என்ற அதே சங்கை மீண்டும் ஊதிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் விட்டெறியும் எலும்புகளளப் பொறுக்கிக்கொள்வதற்காக அவர்களைச் சுற்றிவருபவர்களும்.

தெருப் போராட்டம் எத்தனையோ வரலாறுகளைப் படைத்துள்ளது. தொழிலாளர்கள் நடத்திய தெருப் போராட்டங்களால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. எட்டு மணி நேர வேலை என்ற உரிமை உருவாக்கப்பட்டது. பேரரசுகள் கவிழ்ந்தன. அதிபர்கள் நாட்டை விட்டு ஓடினர்.

தெருப் போராட்டங்களால் படைக்கப்பட்ட உலக வரலாற்றில் பத்து மிக உன்னதமானப் போராட்டங்களை ஜூன் 28, 2011 இல் அமெரிக்க டைம்ஸ் இதழ் பட்டியலிட்டது.

அவை:

1. போஸ்டன் டீ பார்ட்டி
2. உப்புச் சத்தியாக்கிரகம் 1930 (மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகம்)
3. சிவில் உரிமைப் பேரணி, வாஷிங்டன் 1963
4. ஸ்டோன்வால் 1969
5. வியட்டாமிய போருக்கு எதிரான பேரணி 1969
6. முஹாரம் பேரணி, ஈரான் 1978
7. மக்கள் சக்தி, பிலிப்பைன்ஸ் 1986
8. தியானான்மென் சதுக்கம் 1989
9. இளஞ்சிவப்பு மழை பேரணி, கேப் டவுன் 1989
10.எகிப்து, ஜனவரி 25, 2011.

தெருப் போராட்டம் நாட்டிற்கும் மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் தீங்கை உண்டுபண்ணும் என்றும் ஒப்பாரி வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி அவர்களுக்கு ஏற்படப்போகும் இழப்பைப் பற்றியதாகும்.

மகாத்மா காந்தியின் தெருப் போராட்டத்தால் இந்தியர்கள் பயனடையவில்லையா? இந்திய மக்களுக்குத் தெரியாத பாரம்பரியங்களா? அந்த “அரை நிர்வாண பக்கிரி” அடித்த அடியில் பிரிட்டீஷ் பேரரசு கவிழ்ந்தது. இழப்பு இந்திய மக்களுக்கா? பிரிட்டீஷ் பேரரசுக்கா? அவரின் தெருப் போராட்டத்தில் நன்மையடைந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று!

பிலிப்பைன்ஸ் அக்குய்னோவின் மக்கள் சக்தி போராட்டத்தால் இழப்பு அன்றைய அதிபர் மார்க்கோஸுக்குதான். பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அல்ல.

கடந்த ஜனவரி 25 இல் நடந்த தெருப் போராட்டத்தில் இழப்பு எகிப்திய அதிபர் முபராக்குத்தான். எகிப்திய மக்களுக்கு அல்ல. எகிப்திய மக்களின் தெருப் போராட்டம் எகிப்திய மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தியுள்ளது என்று எகிப்திய மக்களை மலேசிய பிரதமரும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பவர்களும் கண்டிப்பார்களா?

மலேசிய தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பது மலேசியா மக்களின் ஆதங்கம். அதற்குத் தீர்வு காணாததால் மலேசியர்கள் உலகப் போராட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றி, மகாத்மா காந்தியை பின்பற்றி, மார்ட்டின் லூதர் கிங்கை பின்பற்றி, அக்குய்னோவை பின்பற்றி தெருப் போராட்டம் தொடங்கியுள்ளனர். மார்க்கோஸின் இராணுவ பீரங்கி மஞ்சள் சட்டை அணிந்து நின்ற பிலிப்பினோ மக்களின் முன் அடங்கி நின்றது.இது நாம் கண்ட வரலாறு.

மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்த கொள்ளத் தவறிய, ஆயுத பலத்தைக் கொண்டு மக்களை அடக்கி விடலாம் என்று செயல்படும் அரசுகளும் அவற்றின் தலைவர்களும் தெருப் போராட்டம் நடத்தும் மக்கள் முன் மண்டியிட வேண்டும். மலேசியா அதற்கு விதிவிலக்காக முடியாது.

மலேசியாஇன்று!


தெருப் போராட்டங்கள் உலக வரலாறு படைக்கும் பாரம்பரியமாகும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum